யார் யாரோவுக்காகவும்
எல்லோருக்காகவும் காதுகளையும் கண்களையும் ஒப்புக் கொடுத்த ஒருவரின் ஒளி, ஒலி சாட்சியங்கள். அப்பத்தாக்கள், அம்மாக்கள், தகப்பன்கள், அத்தைகள், அக்காக்கள் சித்தப்பன்கள்,
சித்திகள், பெரியம்மாக்கள் உலாவரும் வீட்டுச் சித்திரங்கள், அனாதைகளாய் உணரும் ரயிலடி
நாய்களுக்கும் தெருநாய்களுக்கும் காக்கா குருவிகளுக்கும் அன்பின் மிகுதியால் கண்ணீர் உகுக்கும் ஓர் அன்புக்காரரின் தைல வண்ண ஓவியங்கள், உயிர்செத்த நீர் அருந்தி வட்டவடிவமான கடவுளைக் காணநேரும் மாத்திரைகளால் பிழைத்த ஒருவனின் பித்தக் குமுறல்கள், குழந்தையற்ற அப்பாவின் நண்பரைப்பற்றி அறிந்ததும், ‘ஆனந்த் அங்கிளை இனிமே அப்பான்னு கூப்பிடட்டுமா?’ எனக் கேட்கும் ஆதுரத்தை வரிகளெங்கும் தூவிச் செல்லும் பூவாளிகள், மேலாக அடையாளங்கள் துல்லியப்படும் காலத்தில் மற்றமைகளற்ற குரலை மெல்லிதாய் முன்வைக்கும் அரசியல் பிரதியும்கூட.
சிவசங்கர் எஸ்.ஜே.எழுத்தாளர்









Be the first to review “கடவுளை விழுங்கியவன்”