கனவுகள் மெய்ப்படும்

120.00

27 ஆண்டுகளாக ஆசிரியப் பணியிலும், சார்க் நாடுகள் பெண்கள் இணையத்தின் திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகிக்கும் முனைவர் இரமாதேவி இரத்தினசாமி அவர்களின் கைவண்ணத்தில் நம் எல்லோருடைய கனவும் மெய்ப்பட்டிருக்கிறது.

பெண்ணியம் குறித்து விரிவாகப் பேசுகிற பல கட்டுரைகள் வடிவமைப்பில் அழகோடும் நேர்த்தியோடும் மிகச்சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன. வருகிற மார்ச் 8-2021 உலகப் பெண்கள் தினத்திற்கு இந்நூல் மேலும் கருத்துரீதியாக வலு சேர்க்கும்.

பெண்கள் இன்றும் பல உரிமைகளைப் பெற்றுள்ளார்கள். ஆனால் அந்த உரிமைகள் எதை வழங்கியது? எதை வழங்க வேண்டும் என்பது குறித்த ஆசிரியரின் பார்வையும் தேடலுமே இக்கட்டுரைகள், எண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வுக் கல்வித் திட்டத்தில் இந்நூல் சேர்க்கப்பட்டால் அமைப்புகளின் கனவுகள் மெய்ப்படும்.

க.பாலபாரதி,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திண்டுக்கல்.

27 ஆண்டுகளாக ஆசிரியப் பணியிலும், சார்க் நாடுகள் பெண்கள் இணையத்தின் திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகிக்கும் முனைவர் இரமாதேவி இரத்தினசாமி அவர்களின் கைவண்ணத்தில் நம் எல்லோருடைய கனவும் மெய்ப்பட்டிருக்கிறது.

பெண்ணியம் குறித்து விரிவாகப் பேசுகிற பல கட்டுரைகள் வடிவமைப்பில் அழகோடும் நேர்த்தியோடும் மிகச்சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன. வருகிற மார்ச் 8-2021 உலகப் பெண்கள் தினத்திற்கு இந்நூல் மேலும் கருத்துரீதியாக வலு சேர்க்கும்.

பெண்கள் இன்றும் பல உரிமைகளைப் பெற்றுள்ளார்கள். ஆனால் அந்த உரிமைகள் எதை வழங்கியது? எதை வழங்க வேண்டும் என்பது குறித்த ஆசிரியரின் பார்வையும் தேடலுமே இக்கட்டுரைகள், எண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வுக் கல்வித் திட்டத்தில் இந்நூல் சேர்க்கப்பட்டால் அமைப்புகளின் கனவுகள் மெய்ப்படும்.

க.பாலபாரதி,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திண்டுக்கல்.

ரமாதேவியின் இந்த *கனவுகள் மெய்ப்படட்டும்” நூலின் கட்டுரைகள் செறிவானவை, பொருள் பொதிந்தவை. வெறும் வார்த்தைப் பந்தலாக இல்லாமல் அவை தரவுகள் கொண்டு பேசுகின்றன. ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பும் நம்மைக் கட்டிப் போடுகிறது. ‘நோ மீன்ஸ் நோ’, ‘உழைப்பாளர்

சிலையில் பெண் எங்கே’ போன்ற தலைப்புகள் நம்மை நெற்றிப் பொட்டில் அறைகின்றன.

நிவேதிதா லூயிஸ்,

எழுத்தாளர்,வரலாற்று ஆய்வாளர்

நூலாசிரியர் முனைவர். ரமாதேவி இரத்தினசாமி, அரசுப்பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றுகிறார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பின் தலைவர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளிர் வலையமைப்பு மாநிலத் தலைவர், சார்க் மகளிர் வலையமைப்பின் திட்டக்குழு உறுப்பினர், பெல்ஜியம் உலகக் கல்வி அமைப்பின் உறுப்பினர் என பல்வேறு மகளிர் அமைப்புகளில் பொறுப்புகள் வகிக்கிறார்.

ஐ.நா, யுனெஸ்கோ, யூனிசெப், உலகவங்கி, ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகளால் நடத்தப்பட்ட கருத்தரங்குகளில் பங்கேற்று. மகளிர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பல்வேறு நாடுகளுக்குச் சென்று உரை நிகழ்த்தியுள்ளார்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “கனவுகள் மெய்ப்படும்”

Your email address will not be published. Required fields are marked *