நீலகண்ட பிரம்மச்சாரி

150.00

தமிழ்நாட்டின் விடுதலைப் போராளிகளில் பெரிதும் பாராட்டப்படாமல் வரலாற்றில் பதியப்பட்டிருக்கும் நீலகண்ட பிரம்மச்சாரியின் வரலாற்றை நாடக வடிவில் தந்திருக்கும் நண்பர் கோமதி சங்கருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். நூலுக்காக அவர் சிரமப்பட்டிருப்பது, படிக்கும்போதே நமக்கு விளங்குகிறது. ஒரு விவரிப்பாக, உரைநடையில் அந்த வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது என்பது வேறு. அதையே, தற்போது அரிதாக எழுதப்படும் நாடக வடிவில் அளிப்பது என்பது வேறு.

இந்த உத்தி, கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, வேறொரு இடத்தில், வேறொரு காலகட்டத்திற்குப் பின் சென்று, தொடர்புடைய சம்பவத்தை விவரிப்பதற்குப் பெரிதும் உதவுகிறது. உரையாடலின் போக்கில், அவரது வாழ்க்கையின் விரிந்த அளவிலான சித்திரம் ஒன்று நம் கண் முன் தோன்றுவது இன்னொரு சிறப்பு.

இறுதிவரை மக்களுக்கே தொண்டாற்றி மறைந்த நீலகண்டரின் வரலாறு, ஏனைய தலைவர்களுக்கு இணையாகப் போற்றப்பட வேண்டிய ஒன்று.

அக்களூர் இரவி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “நீலகண்ட பிரம்மச்சாரி”

Your email address will not be published. Required fields are marked *