தெருக்கூத்து தொடங்கி டிஜிட்டல் சினிமா வரைக்கும் வளர்ந்து நிற்கும் காட்சி ஊடகம் மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இந்தப் புத்தகம் ஒரு தேர்ந்த சினிமாக் கலைஞனின் கைகளால் எழுதப்படவில்லையென்பதுதான் விளிம்புநிலைக் கவலையாகக் கொள்ளப்பட வேண்டிய விஷயம் என்பதை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தக் கட்டுரைப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்துமே தான்தோன்றித்தனமாக எழுதப்பட்டிருப்பவை ஆகையால், விஞ்ஞானிகள் விலகி நிற்பது சாலச் சிறந்தது. இது முற்றிலும் என்னுடைய பார்வை என்பதைச் சொல்லிக்கொள் கிறேன். ‘உன்னோட பார்வைன்னா நீயே படிக்க வேண்டியதானே?’ என்று கேள்வி கேட்போர் இருந்தால், நீங்கள்தான் முதலில் இதைப் படிக்க வேண்டும் கிருத்துருவம் புடிச்சவனின் எழுத்து களைப் படிக்க இன்னொரு கிருத்துருவம் புடிச்சவ னாலத்தான் முடியும்.
நன்றிகள் ஏசப்பா!
மாண்புமிகு கட்டுரையாளர்

Be the first to review “சக்ரவர்த்தி திரையரங்கம்”