சட்டி நிறைய கடல்

130.00

‘கோலத்தை விட கோலமிட்டவள் கொள்ளை அழகு’ என்பதுபோல,வசியச்சொற்களோ வனப்பூட்டும் அரிதாரப் பூச்சுக்களோ இன்றி, நயினார் தோழரின் கவிதைகள் அனைத்தும் அழகியலோடு அணிவகுத்து நிற்கின்றன.

துளிப்பா. குறும்பா. விடுநிலைப்பா. மின்மினிப்பா. சுரந்தடி, வாமனக் கவிதை அணில்வரிக் கவிதை எனப் பல்வேறு வடிவங்களை எடுத்தாலும் சொல்ல வந்த விஷயத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்வதில்தான் இருக்கிறது கவிதையின் வெற்றி. அந்த வகையில் இந்தத் தொகுப்பு முழுவதும் விரவிக்கிடக்கிற யதார்த்தங்களே இந்த நூலுக்கான வெற்றியைச் சொல்லாமல் சொல்லிவிடுகின்றன.

கவிஞர் அழ. இரஜினிகாந்தன்

மனித உணர்வுகளை லாவகமாகக் கைக்கொண்டு. மீண்டும் அதே உணர்வை வாசிக்கும் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் வகையில் எழுதும் வித்தைகார மருத்துவர் நயினார். அதனாலேயே அவருக்கு உணர்வுக் கவிஞர் என்ற பெயரும் உண்டு

ஹைக்கூவின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருக்கிறார் கவிஞர். அவரது முதல் ஹைக்கூ தொகுப்பு விருது பெற்றது இந்த சட்டி நிறைய கடல். ஹைக்கூ கவிஞர்களை உணர்வுக் கவிஞர் பக்கம் ஈர்க்கும் என்பதில் அய்யமில்லை.

கவிஞர் அ.சுந்தர செல்வன்

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “சட்டி நிறைய கடல்”

Your email address will not be published. Required fields are marked *