சமூக ஜனநாயகம் முதன்மைத் தேவை என்றவர் அறிஞர் அம்பேத்கர். ‘நம் வாழ்க்கையின் நோக்கம் புகழிலோ, கௌர வத்திலோ. ஒழுக்கத்தைப் பேணுவதிலோ. உள்ளொளி பெறுவதிலோ இல்லை: நம் வாழ்வின் சாரம், சமூக விடுதலையில் இருக்கிறது’ என்றவர் புத்தர்.
அரசியலிலிருந்து மதத்தையும் அறிவிய லிலிருந்து தொன்மங்களையும் பகுத்தறிவி லிருந்து நம்பிக்கைகளையும் வர்க்கத்தி லிருந்து சாதியையும் சரியென்பதிலிருந்து தவறையும் வேறுபடுத்திக் காட்டிய புத்தரை. உலகின் முதல் அரசியல் சிந்தனையாளராகக் காஞ்ச அய்லய்யா முன்னிறுத்துகிறார்.
‘அசல் தன்மையும் முற்போக்குச் சிந்தனை வழியில் வரலாற்றை முன் நகர்த்தும் ஆற்றலும் சமுதாய மாற்றத்தை நோக்கிய தெளிவான பார்வையும் செயல்திறமும் கொண்டவரே உண்மையான பகுத்தறிவாளர்’ என்று சொல்லும் புத்தரை, ஒரு சாமானியனாக இந்த நூலில் நாம் சந்திக்கிறோம்.
– எழுத்தாளர் அக்களூர் இரவி






Be the first to review “கௌதமன் புத்தரான கதை”