நவீன காலச் சிக்கல்கள் பலவற்றைப் பேசுகின்றன கைகோள் தொகுப்பிலுள்ள கதைகள். பேச்சின் விசேஷம் சுரேஷ் பரதனின் நடை சொல்லல் முறை, காற்றுக்குக் குந்தகம் செய்யாமல் தாழ்ந்த குரலில் பேசும் நடை சுரேஷ் பரதனுக்கு. இன்றைய பிரச்சினையை முப்பது வருஷத்துக்கு முன்னால் ஒரு பெரிய எழுத்தாளர் எழுதியிருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது சுரேஷ் பரதன் எழுதியிருக்கும் பாணி. இந்தத் தன்மை இந்நூலைத் தனித்துக் காட்ட உதவும்.
கதைகளின் முடிவுக்குப் பின்னால், நாம் சில நிமிடங்கள் யோசிக்க ஏதோ இருக்கிறது என்பது இவற்றின் சிறப்பு. அழுத்திச் சொல்லாமல் அடக்கிச் சொல்வதால் அவற்றில் ஏமாற்றும் எளிமைகூடிவிடும். ஏமாறாமல் இருப்பது நம் பொறுப்பு. சில கதைகளில் தென்படும் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ வகையிலான உணர்வுகள், நம்மை ரெட்ரோஃபீலிங்குக்குள் அழைத்துச் செல்ல வல்லவை. இது ரெட்ரோக்கள் வெல்லும் காலம்.
ரமேஷ் வைத்யா









Be the first to review “கைகோள்”