கவிஞர் தங்க. ஜெயபால் ஜோதியின் கவிதைகள் தனக்காக மட்டுமல்லாமல் குமுகாயத்தின் குளிவுகளைப் போக்கும் நோக்கிலேயே அமைந்திருப்பது நமக்கெல்லாம் விருந்தும் மருந்துமாய் மகிழ்ச்சி தருவதாகும். படைப்பாளியின் படைப்பெல்லாம் அவனது சொந்த அனுபவம் என்று எண்ணிவிடலாகாது. தன்னை ஈர்த்த அல்லது பாதித்தவற்றை அதன் கனத்திற்கேற்ப, தன்மை, முன்னிலை, படர்க்கை என எந்நிலையினின்றும் எழுதுவான். அது அவனது ராஜ்யம்; அவனது சொந்தச் சுதந்திரம். ‘கவிதை, கவிஞனின் சிறகு’ எனும் இந்நூலில் புசிக்கவும் சுவைக்கவும் நிறையவே படையல் உண்டு. இது என் மதிப்பீடு மட்டுமல்ல; மகிழ்ச்சியின் வெளிப்பாடு.
கவிஞர் சி. பி. கபிலர்









Be the first to review “கவிதை கவிஞனின் சிறகு”