கோணூசி

By (author)சேது

150.00

வேள்பாரி வாசகர் மன்றம் வாசகப் பரப்பி னூடே தோழமையை மலரச்செய்து படர்கிறது. செயலும் சிந்தனையும் ஆக்கமும் ஊக்கம் பெறும் களமாக வாசகர்

மன்றம் வினையாற்றுகிறது. இம்மன்றம் மூலமாக இணைந்த வாசகர்கள் பறம்பு பாட்டாபிறை குழுவின்மூலம் படைப்பாளி களைக் கண்டறிந்து அவர்களின் படைப்பு களை நூல்களாக வெளியிட்டுப் புதிய துவக்கங்களை உருவாக்குகின்றனர்.

எழுத்தாளர் சு. வெங்கடேசன் நாடாளுமன்ற உறுப்பினர்

சேதுவின் கதைகள், பின்நவீனத்துவக் கூறுகள் அதிகம் கொண்டவை. சில கதைகள் கட்டுடைக்கின்றன; சில கதைகள் வேறொரு கோணத்தைக் கட்டமைக் கின்றன. கதையின் முடிவைச் சொல்லாமல் வாசகனைத் தமக்குள் எழுத வைக்கிறார் சேது. அவ்வகையில் இது ஒரு ஜனநாயகப் பிரதி எனலாம். என்ன செய்ய வேண்டும் என வாசகனை முடிவெடுக்க வைத்த தொகுப்பு இது.

கவிஞர் அமிர்தம் சூர்யா

சேதுவின் கனவுகள் அலாதியானவை; தனி மொழி கொண்டவை. சமூகத்தின் புற விளிம்புகளையும் அதன் மனிதர்களையும் ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்வது நமக்குள் ஒரு நடுக்கச் சலனத்தை ஏற்படுத்தும். தனக்கேயுரிய நவீன பாணியில் தன்னுடைய படைப்புகளைத் தொடர்ந்து படைத்து வருகிறார் சேது.

-பா. திருப்பதி வாசகன்

book-author

Publisher

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “கோணூசி”

Your email address will not be published. Required fields are marked *