விஜோஸ் புக்ஸ் பார்ன் (ViJos Books Barn) என்ற நூலகத்தின் நிறுவனர்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர். மென்திறன் மற்றும் ஆங்கில மொழிப் பயிற்சியாளர் (Soft Skills and English Language Trainer). பெற்றோர் கல்வியாளரான (Parent Educator) இவர், சிறுவர்களுக்கான கதை சொல்லல் நிகழ்வுகளும் வாசிப்பு நிகழ்வுகளும் நடத்தி வருகிறார்.
முன்னணி நாளேடுகள் மற்றும் சிறார் இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். ‘இதிரா” சிறார் நாவலுக்காக கொ.ம.கோதண்டம் விருது பெற்றுள்ளார்.
கதைகள் குழந்தைகளின் உலகத்தை வண்ணமயமாக்கும். வாசிப்பின் மீது அவர்களது ஆர்வத்தைத் தூண்டும். பாதி மீசைக் கரடியில் இருக்கும் நகைச்சுவைக் கதைகள் குழந்தைகளை வெகுவாகக் கவரும். அவர்களது மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் பன்மடங்கு பெருகச் செய்யும்.









Be the first to review “பாதி மீசை கரடி”