தந்தை பெரியாரின் சிந்தனைகளை வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்து வரும் முனைவர் தி.நெடுஞ்செழியன், அறிவியல் தமிழில் முனைவர் பட்டமும் இதழியலில் கூடுதல் முதுகலைப் பட்டமும் பெற்றவர். மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியிலும் திருச்சி தூய வளனார் கல்லூரியிலும் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தற்போது சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவராக உள்ளார். இவரும் இவருடைய சகோதரர்கள் அறுவரும் சுயமரியாதைத் திருமணம் புரிந்தவர்கள் என்பதே, இவரது குடும்பத்தினர் அனைவருமே பெரியாரியச் சிந்தனைகளைப் பின்பற்றி வாழ்பவர்கள் என்பதற்குச் சான்று.









Be the first to review “பெரியார் வாழ்ந்துகொண்டிருக்கிறார்”