எழுத்தாளர் நிஷாந்தன் எழுதியுள்ள சாயல் சிறுகதைத் தொகுப்பு, மொழிதலில் யாருடைய சாயலும் இல்லாமல் இருப்பதும் உள்ளார்ந்த அறத்தின் சாயலைத் தன்னளவில் கொண்டுள்ளதும் சிறப்பு.
அறத்தின் நுண்ணுணர்வைச் சம்பவத்தின் மூலமாக, உரையாடல் வழியாக வாசகனுக்குக் கடத்துவதுதான் எழுத்தின் சாகச வேலை. அதை நிஷாந்தன் மிகத் துல்லியமாகவே செய்து காட்டியுள்ளார். அறத்தை முன் வைப்பதன் பொருட்டு, தோப்பில் முகமது மீரான், கீரனூர் ஜாகிர் ராஜா வரிசையில் இயல்பாக வந்தமர்கிறார் நிஷாந்தன்.
அறத்தின் படிமமாக ஒளியும் வெளிச்சமுமாய் வியாபித்திருக்கும் இக்கதைகள், அண்மைக்காலத்தில் சிறந்த கதைத் தொகுப்பை வாசித்த திருப்தியைத் தருகின்றன. சாயல் – இலக்கியவெளியில் மறுதலிக்க முடியாத இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும்.
அமிர்தம் சூர்யா கவிஞர், எழுத்தாளர்









Be the first to review “சாயல்”