மிகச்சிறிய கட்டுரைகள் கொண்ட மிகக் குறைந்த பக்கங்களுடைய நூல் இது. ஆனால் சமகாலக் கல்விச் சிந்தனைகளென்னும் விரிந்த பொருளின் சாறு நிறைந்த, அக்கறையுடன் எழுதப்பட்ட நூல். ஒரு கோணத்தில், அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறளை நினைவூட்டிய நூலும்கூட.
– கவிஞர் தி. பரமேசுவரி
இன்றைய தமிழ்நாட்டின் பள்ளிக்கல்விச் சூழலில், முடியுமா? முடியுமா? என்ற கேள்விகளைச் சுக்குநூறாக்கி, முடியும் என்று நிரூபித்தவர் உமா மகேஸ்வரி. நாளும் பொழுதும், அரசுப் பள்ளியும் மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் அவரது சுவாசமாக இருக்கின்றன. அவர் எழுதும் சிறு குறிப்பும் பள்ளிக்கல்வியின் நிலையைப் பிரதிபிலிக்கும் சிந்தனையாகத்தான் இருக்கிறது. இந்நூலில், நம்முடைய கல்வி முறையின் எதார்த்தத்தை மிக எளிய முறையில் பொட்டில் அடித்தாற்போல் சொல்லிச் செல்கிறார் உமா.
– பத்திரிகையாளர் சுந்தரபுத்தன்


Be the first to review “சமகாலக் கல்விச் சிந்தனைகள்”