சென்னைக்கென்றே தனியான வாசனை இருக்கிறது. அந்த வாசனை எனக்கு எப்பவும் பிடிக்கும். எப்போது சென்னைக்கு வந்தாலும் மூச்சை அடர்த்தியாய் உள்ளிழுத்து உடலின் சகல பாகங்களிலும் ஆழங்களிலும் சென்னையின் வாசனையை நிரப்பிக்கொள்வேன், நிலைநிறுத்துவேன். எல்லாப் பெருநகரங்களுக்கும் தனித்துவமான அடையான வாசனை இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஒருவேளை அப்படி இருந்தால், அது சென்னையின் வாசனைக்கு முன்பாக மண்டியிடத்தான் வேண்டும். ‘அது வாசனை இல்லப்பா, நாத்தம், கூவம் நாத்தம்’ என்பீர்களானால், நீங்கள் பொதுப்புத்திக்கு உங்களை அடிமைச்சாசனம் எழுதித் தந்துவிட்டீர்கள் என்றுதான் சொல்வேன். அது உழைப்பின் வாசனை ‘எப்பாடு பட்டாவது வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்துவிடமாட்டோமா?’ என்ற கனவுகளோடு பல லட்சம் மனிதர்கள் உழைக்கும் வாசனை






Be the first to review “சுரங்கப்பாதையில் ஓர் ஓவியம்”