நாடெங்கும் தீபாவளிக்கு வெடி வெடித்துச் சிரிக்கும் மகிழ்ச்சிக்குப் பின்னாலிருக்கும் இருள் வாழ்வைப் பேசுகின்ற நாவல் இது. கரிசக்காட்டின் வாழ்க்கையை, விவசாய மண்ணிலிருந்து வெடி மருந்துக்கு மாறும் காலத்தின் கட்டாயத்தை, அது எரித்துப் போகும் வாழ்க்கையை, வெல்வதற்காகவெல்லாம் இல்லாமல் கடந்து போய்க்கொண்டே இருப்பதற்கான தொடர் சவால்கள் நிறைந்த பெண் வாழ்வை, தடங்கல் இல்லாமல் சலசலவென்று ஓடும் நீரோட்டம்போல் சொல்லும் கதையோட்டம் நம்மைக் கதாபாத்திரங் களாக மாற்றி உட்கார்த்தி வைத்துவிடுகின்றது.
புரியாத மொழிகள், சிடுக்கான தேடல்கள், புது இஸங்கள் ஏதுமின்றி, மக்கள் மொழியில் வாசகனிடையே பேசும் மண்ணின் நாவல்.
– எழுத்தாளர் திலகபாமா






Be the first to review “வெந்து தணியாத வெண்பாஸ்பரஸ்”