விரைவில் – சுருக்கமான வடிவில்

வெளியாகிப் பல பத்தாண்டுகள் கடந்தும் இன்றளவும் பொன்னியின் செல்வன் புதினத்திற்கு வாசிப்பாளர்களிடம் வரவேற்பு குன்றாமல் இருப்பதே, இலக்கிய உலகில் கல்கி பதித்துள்ள அழிக்க இயலாத முத்திரைக்குச் சான்று.

மொத்தம் 5 பாகங்களில் 2000-க்கும் கூடுதலான பக்கங்களைக் கொண்ட இந்நாவலை இன்றைய அவசரகால உலகில் வாசிக்க இயலவில்லை என்ற குரல்களை ஆங்காங்கே கேட்க முடிகிறது. இந்தக் குறையை நீக்கும்வண்ணம், இதுவரை வாசிக்காதவர்களுக்கு ஒரு அறிமுகமாகவும், மீள் வாசிப்பு செய்ய விரும்புவோருக்கு ஒரு துரித வாசிப்புக்கான வழிவகையாகவும், பொன்னியின் செல்வனின் சாரத்தை மட்டும் எடுதது, சுவை குன்றாது சுவடு வாசகர்களுக்காக சுருங்கத் தரவுள்ளார் எழுத்தாளர் சவிதா.

காத்திருங்கள், அடுத்த அறிவிப்பு விரைவில்…


Comment (1)


Yalinisri
Yalinisri
July 18, 2022

சிறப்பு காத்திருக்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *