விதி
ஓங்கி உயர்ந்த மரத்தில்
இலைகளும் கிளைகளும்
பறவைக் கூடும் பான்பராக் கறையும்
பட்டைமேல் படர்ந்திருந்தன
இலைகள் விழ விழ
மரம் தளர்ந்து
மனநோயாளி ஆகவில்லை
அவ்வப்போது
பருவநிலை மாற்றத்தில்
சில நாள் நிர்வாணமும்
பல நாள்
வழிந்தொழுகும் மேகமுமாய்
அனிச்சை நிகழ்வாகின
சில சமயம்
கிளைகளில் சுளுக்கிருக்கும்
அதற்கு யாரோ எறிந்த
குப்பை மூட்டையும்
காரணமாய் இருக்கலாம்
கால தாமத வானிலை அறிக்கையால்
பல நேரம் காற்றும் கற்பழிக்கும்
பூச்சிகளும் எறும்புகளும்
குகையாய் மாற்றிக்கொள்ளும்
வருடத்தில் என்றேனும்
நேரமிருப்பின்
மழையும் கொஞ்சம் முத்தமிடும்
தொடர்ந்து அடிக்கடி பார்த்ததனால்
இவை சலிப்பு தந்து தித்திக்கும்
அவ்வப்போது
உடலில் வலியும்
முதுகுத்தண்டில் விரிசலும்
என்றோ விழுந்த மின்னலில்
உச்சந்தலைக் கருகலும்
இவை ஏன் எனக்கு மட்டும் என
கேட்கத் தோன்றும்
விழும் இலைக்கும்
முறியும் தண்டுக்கும்
விதிகள் ஏதுமில்லை
இயற்கையிலனைத்தும்
மாற்றமெடுப்பவையே
விதியின் ஓட்டத்தில் நிகழ்ந்தவை
எல்லாம் இயற்கையே
காய்ந்து விழுந்த இலைக்காக
மரம் மரிக்கவில்லை
ஓங்கிக் குட்டிய மின்னலுக்கும்
நெடுக வளர்ந்த மரத்திற்கும்
முன்பகை ஏதுமில்லை
நிகழ்வுகள் நிச்சயமாயின்
எவர் மீதும் பழி வீண்
- அமாசே

magimai
June 8, 2023ஆசிரியருக்கு மிக்க நன்றிகள். இது போன்ற ஊக்குவிப்புகள் மேலும் பல திறமையாளர்களை உருவாக்கும் மற்றும் ஊக்குவிக்கும்.
Mahalakshmi
June 8, 2023Excellent write up xavier. Congratulations! Wish you many more laurels.
magimai
June 8, 2023நனிநன்றிகள் மேடம்
Kasthuriba
June 8, 2023ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க மகி
மரங்களின் உரையாடல் ஏதோ ஒருவித நெருடலை ஏற்படுத்தும்
magimai
June 8, 2023மிக்க நன்றிகள் மேடம்
Sudhakar
June 8, 2023Superbbbb ji
Vennila
June 8, 2023Very nice Anna
Pushparaj
June 9, 2023Nice lines
சுதர்சனம்.E.S
June 15, 2023காய்ந்து விழுந்த இலைக்காக
மரம் மரிக்கவில்லை👏👏