மோகத்தைக் கொன்றுவிடு

கவிதைகள்

  • நீயோ உறங்கிப்போய்விட்டாய்
    நிலவும் இரவும் இன்னும்
    விழித்திருக்கின்றன.
    கிறக்கத்துக்கும் மயக்கத்துக்கும்
    இடையிலான திரிசங்கில்
    ஊடாடுகிறேன் நான்
  • தேனூறும் நிலவோடும்
    காதோரம் இசையோடும்
    எத்தனை நேரம் இவ்விரவில்
    எனக்குத் தனிமையைச் சபிப்பாய்.
    அவ்விரண்டில் எழும்
    மோகத்தை சமன் செய்யும்
    உன்னிரண்டு தனங்களை
    நானெப்போது சேர்த்தணைப்பது?
  • கால மயக்கத்தில்
    இரவைத் தன் அலகிற்கவ்வி
    அங்குமங்கும் மாறிமாறிப்
    பறக்கிறதொரு ஆக்காட்டி.
    அஃதெழுப்பும் அரற்றல்கள்
    தழுவவுனைத் தேடியரற்றும்
    என் மோகத்தின்
    ஓசைகளை ஒத்திசைக்கின்றன
  • நதியலைகளின் மீதொரு தக்கையென
    மிதந்தாடுகிறது நிலவு
    தூண்டிலோ உன் கையில்.
    முள் தொங்கும் புழுவெனவும்
    புழு கவ்வும் மீனெனவும்
    இரட்டுற உருக்கொள்கிறது
    உன்மீது நான் கொண்ட மோகம்
  • விடியாமல் தவித்து
    நீளும் இவ்விரவும்
    தணியாமல் தவித்துத்
    துடிக்குமென் மோகமும்
    சமநிறைப் பொருட்களாய்
    உன் தராசுத் தட்டுகளில்.
    எதைக் கொள்வாய்?
    எதைக் கொடுப்பாய்?
  • சுரேஷ் பரதன்

Comments (2)


Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
July 29, 2023

எத்தனை அழகான சொல்லாடல்.. சபாஷ் பரதன்..

Anita Srikanth
Anita Srikanth
July 29, 2023

வணக்கம் சுரேஷ் அண்ணா..

//முள் தொங்கும் புழுவெனவும்
புழு கவ்வும் மீனெனவும்
இரட்டுற உருக்கொள்கிறது
உன்மீது நான் கொண்ட மோகம்//

எவ்வளவு ஏக்கம்…அதை எவ்வளவு அழகா சொல்லி இருக்கீங்க….
உங்க கவிதை ரொம்ப அழகா இருக்குண்ணா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *