பேனா வீரர் பிரேம்சந்த்

பேனா வீரர் பிரேம்சந்த்

வாழ்வாவது மாயம் என்று எழுதியவர்களும் எழுத்தாளர்கள்தான்; வாழ்க்கை வாழ்வதற்கே என்று முழங்கியவர்களும் எழுத்தாளர்கள் தான்; இரண்டும் கெட்டானாக, வெந்ததைத் தின்று விதி முடிந்தால் சாவோம் என்ற தோரணையிலே வளவளா சித்தாந்தங்களை வழங்கியவர்களும் எழுத்தாளர்கள்தான். இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் வாழ்ந்த உலகிலேதான் பிரேம்சந்த் – அன்பு நிலவன் என்ற எழுத்தாளரும் வாழ்ந்தார். மானுடத்தை உயர்த்துவது இலக்கியம்தான் என்று கருதிய இவர், நோய்வாய்ப்பட்ட காலத்தை, வெளியூர்ப் பயணம் மேற்கொண்டிருந்த காலத்தைத் தவிர மற்ற நேரங்களில், ஒவ்வொரு நாளும் எழுதுவதை ஒரு தவமாகக் […]

திருப்பூர் எனும் திருப்புமுனை

திருப்பூர் எனும் திருப்புமுனை

திணறுகிறது திருப்பூர், திண்டாடுகிறது திருப்பூர், இனி பின்னலாடைத் தொழில் அழிந்துவிடும் என்றெல்லாம் பல்வேறு செய்திகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே இந்தச் சமூகத்தின் பேசுபொருளாக இருந்துவருகின்றன. உண்மை நிலவரம் என்ன? உள்ளபடியே இத்தொழில் அழிந்துவிடுமா? திருப்பூரின் எதிர்காலம் என்னவாகும்? ஊடங்கங்களிலும் பொதுமக்களிடமும் பரவும் செய்திகளுக்கும் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் தரவுகளை உள்ளடக்கிய அவதானிப்பை விடையாகப் பகிர்கிறார், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளரும் ஈஸ்டர்ன் குளோபல் க்ளோத்திங் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தின் தலைமைச் செயல் […]

பொன்னியின் செல்வன் – 30

பொன்னியின் செல்வன் – 30

மதுராந்தகன் கொடிய எண்ணங்களுடன் சேந்தன் அமுதன் குடிசையை நோக்கிச் செல்கையில், பார்ப்பதற்கு அருவருப்பான தோற்றத்துடன், கருத்திருமன் மதுராந்தகனை மறிப்பதுபோலக் குறுக்கிட்டான். தன் கையிலிருந்த குறுவாளை, கருத்திருமனை நோக்கி மதுராந்தகன் ஓங்கினான். உடனே கருத்திருமன், தான் அவனுக்கு எதிரியல்ல என்றும் அவனுக்கு உதவுவதற்காகவே வந்திருப்பதாகவும் கூற, மதுராந்தகன் திகைத்தான். தன்னை மதுராந்தகனின் தந்தையாருடைய உண்மையான ஊழியன் என அறிமுகப் படுத்திக்கொண்ட கருத்திருமன், மதுராந்தகனின் தந்தை யார் என்ற ரகசியத்தை மதுராந்தகனின் காதில் சொன்னான். அவனும் ராஜகுமாரன் எனவும் தன்னுடன் […]

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 8

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 8

9. வியாசர் வம்சாவழி விளக்குவதென்ன? அம்பையின் கதை பீஷ்மரின் வாழ்க்கைச் சரித்திரத்தில் துடைத்தெறியப்பட முடியாத களங்கமாகும். ஏனென்றால், அம்பை ‘ராட்சதத் திருமணம்’ பற்றி எடுத்துவைத்த வாதம், மறுக்கப்பட முடியாத சட்ட நியதியாகும். அம்பை சால்வனைக் காதலித்தவள் என்பது உண்மையாக இருந்தாலும்  ராட்சதத் திருமண முறையில் பெண்ணின் விருப்பு வெறுப்பிற்கு முக்கியத்துவமில்லை என்பதால், அதைக் காரணம் காட்டி அவளைத் திருமணம் செய்ய மறுத்தது ஏற்றுக்கொள்ளவே முடியாத அதர்மம். மற்றவர்களின் சார்பில் அவர்களுடைய பிரதிநிதியாக, சுயம்வர மண்டபத்திற்கு வந்திருப்பதை வெளிப்படச் […]

மரு வைத்து வந்துள்ள மணற்கேணி

மரு வைத்து வந்துள்ள மணற்கேணி

புதிய கண்டுபிடிப்புகளைப் போலவே கல்வித் துறையிலிருந்து ஒவ்வொரு அறிவிப்பும் வெளியிடப்படுவது குறித்து என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆன்லைன் கல்விக்கு அடிகோலும் முயற்சிகள்தான் டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் அனைத்தும். இதற்காகப் பணியாற்றி, கடும் உழைப்பைத் தந்திருக்கும் கல்வித்துறையின் அத்தனை ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளாக அந்த ஆசிரியர்களின் பணியிடங்களில் வகுப்புகளை கவனிக்க, பாடம் நடத்த, வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் சிறப்பு. இல்லை என்றால் அது குழந்தைகளுக்குச் இழைக்கப்படும் துரோகம்; அநீதி. கல்வித் துறையில் மணற்கேணி என்ற செயலி […]

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 7

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 7

8. அம்பையைக் கொன்ற பீஷ்மர் விசித்திரவீரியன் சார்பில் காசி இளவரசிகள் சுயம்வரத்தில் பங்கேற்க பீஷ்மர் சென்றார் என்பதை முந்தைய பகுதியில் பார்த்தோம். மகாபாரதக் காலத்தில் பல திருமண முறைகள் அங்கீகரிக்கப்பட்ட திருமண முறைகளாக இருந்தன. அதில் ஒன்றுதான் ‘ராட்சதத் திருமண முறை’ என்பதாகும். ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண், தன்னுடைய போட்டியாளர்கள் அனைவரையும் யுத்தம் செய்து தோற்கடித்து, பலவந்தமாகக் கவர்ந்துகொண்டு போய்த் திருமணம் செய்துகொள்ளும் முறைக்குத்தான் ‘ராட்சதத் திருமண முறை’ என்று பெயர். சுயம்வரத்திற்கு […]

பாசிசத்தின் பாலியல் வன்கொடுமை அரசியல்

பாசிசத்தின் பாலியல் வன்கொடுமை அரசியல்

மணிப்பூர் மாநிலத்தில் சென்ற மே 4ஆம் நாள் நடந்த கொடுமை இந்திய நாடு முழுவதையும், எல்லைகளுக்கு அப்பாலும் கூட, அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது. குக்கி இனப் பெண்கள் இருவரை மைதேயி சமூக ஆண்கள் குழு ஒன்று அம்மணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்ச்சியின் காணொளி இப்போதுதான் சமூக ஊடகங்கள் வழியாக வெளிவந்துள்ளது. அந்தக் காட்சியைக் காட்ட வேண்டாம் என்று இந்திய அரசு கேட்டுக்கொண்ட பின் ஊடகங்களில் மறைப்புச் செய்து காட்டப்படுகிறது. இருப்பினும் […]

ஆயிஷா

ஆயிஷா

திரை விமர்சனம் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள மாசூம் எனும் செல்வந்தர் வீட்டிற்கு, ஒரு பணிப் பெண்ணாகக் கேரளாவில் இருந்து செல்லும் ஆயிஷா, சில சிரமங்களைத் தாண்டி, அரண்மனை போன்ற அந்த வீட்டின் நடைமுறைகளை அறிந்துகொண்டு, நாளடைவில் குடும்பத்தின் தலைவி மமாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார். விளைவு, சக பணியாளர்களின் மகிழ்ச்சிக்கு உகந்தவராகவும் அதுவரை மமாவின் முதன்மைப் பணியாளர்களாக இருந்த பெண்களுக்கு எதிரியாகவும் ஆகிவிடுகிறார். மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த வாழ்வில், ஆயிஷா குறித்த ஒரு உண்மை வெளிப்பட, நிலைமை […]

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 6

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 6

7. பீஷ்ம சபதமும் மீனவக் குடிவழிக்குப் போன அரசுரிமையும் கங்காதேவி எட்டாவது குழந்தையைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு போனபின், சந்தனு மகாராஜனுக்கு அவர்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் நீண்டகாலம் வாய்க்கவே இல்லை. மனநிம்மதியின்றி, எப்போதும் கங்கைக் கரையில் உலாவிக்கொண்டிருந்த சந்தனு மகாராஜன், மிக அழகானவனும் ஆஜானுபாகுவானவனுமான ஒரு இளைஞன் கங்கையின் ஓட்டத்தை அம்புகள் எய்து நிறுத்திவைத்ததைப் பார்த்தான். அந்த அற்புதமான செயல் சந்தனு மகாராஜனைத் திகைக்க வைத்துவிட்டது.வியாசர் எந்தவொரு கதாபாத்திரத்தையும் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியுடன் மட்டுமே அறிமுகம் செய்வாரே தவிர, […]

அக்கா

அக்கா

சிறுகதை “அப்பா.. அப்பா போயிட்டாருடா கதிரு…” சென்னையில் உறங்கிக்கொண்டிருந்தவனை மதுரையிலிருந்து அண்ணன் செல்வத்தின் குரல் இப்படியா வந்து எழுப்பி உலுக்கிப் போட வேண்டும்?! இரவு தூங்கியவர் காலையில் எழவேயில்லையாம். கதறி அழுதான் அண்ணன். ‘இப்படி விடியத்தான் காத்திருந்ததா இந்த ஞாயிறு’ என்று ஒரு கணம் நாளினைச் சபித்துத்கொண்டது நாக்கு. “அக்காவுக்கு சொல்லிட்டியாண்ணே?” அடுத்த வார்த்தையாய் இதுதான் வந்து விழுந்தது கதிரிடமிருந்து. “இப்பத்தான்டா டாக்டரக் கூட்டியாந்து கன்பஃர்ம் பண்ணேன். முதல்ல ஒனக்குத்தான் போடுறேன். இனிமேத்தான் எல்லாருக்கும் சொல்லணும். சொல்லாம […]

உணவுத் தீண்டாமை

உணவுத் தீண்டாமை

இந்தச் சமூகத்தில், நாம் உண்ணுகிற உணவு என்பது, ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு வேறுபட்டுள்ளதைப்போல, ஒவ்வொரு மனிதருக்கும் உணவுப் பழக்கவழக்கம் வேறுபட்டே உள்ளது. உணவு விருப்பம் என்பது எல்லாருக்கும் ஒன்றுபோல இருக்கிறதா என்றால், இல்லை என்பதே உண்மை.   உலக நாடுகளில், அந்தந்த நாடுகளின் வாழ்வியல் சார்ந்து மக்கள் உணவுப் பழக்கத்தை வைத்திருக்கிறனர். அதில் ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் போன்றவை பொதுவான அசைவ வகை உணவுகளாக அறியப்படுகின்றன. மேற்சொன்னவை மட்டுமல்லாது, நிலத்திலும் நீரிலும் வாழும் பல்வேறு […]

பொன்னியின் செல்வன் – 29

பொன்னியின் செல்வன் – 29

குந்தவை தன் தமையன் கரிகாலனின் இழப்பினாலும் வந்தியத்தேவன் பேரில் அந்தக் கொலைப்பழி விழுந்து கிடப்பதாலும் பெரும் கலக்கத்திலும் வருத்தத்திலும் இருந்தாள். அப்போது வானதி அங்கு வந்து, அவளை ஒரு இளம்பெண் பார்க்க வந்திருப்பதாகக் கூறினாள். வந்தவள் மணிமேகலைதான். அவள் மிகுந்த சோர்வுடன் வந்து நின்றாள். அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தபோதும் தன் தமையன் அவள் அரண்மனையில்தான் கொலையுண்டான் என்பதால் குந்தவையால் மணிமேகலையின்மீது இரக்கம் கொள்ள இயலவில்லை. ஆனால் வந்தியத்தேவன் – கந்தமாறன் நட்பும் அதனால், கந்தமாறன் தன் […]

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 5

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 5

6. மகாபாரதத் திருமணங்களில் ‘சமூக ஒப்பந்தம்’ இருந்ததா? இன்றைய சட்டங்களின்படி வேறொரு தம்பதிக்குப் பிறந்த குழந்தையை ஒருவர் தத்து எடுத்துக்கொள்ள முடியுமே தவிர, தன் மனைவிக்கு வேறொரு ஆண்மூலம் தனது சம்மதத்துடன் பிறந்த குழந்தையைத் தத்து எடுக்க முடியாது. மகாபாரதக் காலத்தில் நடந்ததையே பாருங்களேன்..! கர்ணன் பாண்டுவின் மகனும் அல்ல; பாண்டுவின் வாரிசும் அல்ல; அதனால் ராஜ்ஜியத்திற்கு உரிமை கோர அருகதை உள்ளவனும் அல்ல. அதேபோல் அவன் மகனுக்கும் முடிசூட்டிக்கொள்ள உரிமையில்லை. மகாபாரதக் காலத்தில் நடைமுறையில் இருந்த […]

மனிதத் தொழிற்சாலைகள்

மனிதத் தொழிற்சாலைகள்

மொழிபெயர்ப்புக் கவிதை நாட்கள்… ஒருவேளை அவற்றில் பலவகை இருக்கலாம்ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும், சகோதரி டுமல்ட்? என் கடிதம், நானே செய்த அசைந்தாடும் நாற்காலி, என் வீணை எதுவுமே உனக்குக் கிடைக்கவில்லை என்பது தெளிவாகிறது உன் வெளிச்சத்தில் என்குடியிருப்பை நிறுவ நான் விரும்பினேன்என்னுடைய ஒளிக்கீற்றுகளின் இருப்பை நீஅடையாளம் காணவில்லை என்கிறாயா? எனில், நிச்சயமாக எங்கோ ஒருதவறு நிகழந்திருக்க வேண்டும் நகரத்தின் பொழுதுபோக்கு மையத்தில்நீச்சல் குளத்தின் அருகேஉன் குழந்தையுடன் நீநடமாடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்,ஒருமுறை […]

அகப்படாத ஒன்று

அகப்படாத ஒன்று

சிறுகதை சில மாதங்களாக இப்படித் தூக்கமில்லாமல் தவிப்பது, பெரும் ரோதனையாகவே பட்டது. வாழ்க்கை எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்று தெரியாமல், கண்களை இறுக்கிக் கட்டிவிட்டதுபோல் அல்லாடியது மனது. ஏதோவொரு கோபம். பல நினைவுகளையெல்லாம் ஒன்றுதிரட்டி, அவை ஏளனமாகச் சிரிக்கும்போதெல்லாம் அறைக்குள்ளிருக்கும் டேபிள், முகம் பார்க்கும் கண்ணாடி, டம்ளர், தலகாணி, போர்வையென்று, கையில் கிடைக்கும் பொருட்களெல்லாம் தூக்கியெறியப்படும். அதில் ஒருசில மதுபாட்டில்களும் அடங்கும். முன்பைவிடவும் இப்போதெல்லாம் பாட்டில்கள் அதிகமாகச் சிதறுகின்றன. அதொருவகையில் ஆறுதல் கொடுத்தாலும் போதாமையாகவே ஆட்டிப் படைக்கிறது. சத்தம் […]

மூன்றாம் விதி

மூன்றாம் விதி

சிறுகதை பாதி பூச்சு வேலை இன்னும் பாக்கி இருக்கு. ஷோகேஸ் வேலை, அடுப்படில கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு. இருந்தாலும் வேற வழி இல்லாம வீடு கிரகபிரவேசம் நடத்தி, அதில இருந்து வசூலாகுற பணத்துலதான் பாக்கி வைச்ச கொத்தனார் கூலியைக் குடுக்கணுமுனு முடிவு பண்ணீட்டேன். பேங்குல வாங்குன வீட்டுக் கடனுக்கு மேல பிரசனல் லோன், நகைக் கடன் எல்லாம் வாங்கியும் வீட்டை முழுசா கட்டி முடிக்க முடியல. இதுல சில சவரன் நகை ஏலம் போயிருச்சு. கொஞ்சத்த […]

சிறுகதைகளின் பேரரசன்

சிறுகதைகளின் பேரரசன்

ஆன்டன் செகாவ் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை சுவை, பயன், காலத்தை வெல்லும் தன்மை, பிறந்த இடத்திலே மட்டுமல்லாமல் செல்லும் இடமெங்கும் சிறப்பும் புகழும் பெறுகின்ற தன்மை ஆகிய பண்புகள் ரஷ்ய இலக்கியத்திற்கு உண்டு. மாளிகையிலே மதோன்மத்தராக இருந்தவர்களுக்கு, மாளிகை வாசம் பெற்ற பேனா தூக்கித் தந்த களிப்பு பானம் அல்ல ரஷ்ய இலக்கியம். பசியுடனும் பட்டினியடனும் பாதகருடனும் பாதிரியுடனும் போராடிச் செத்துக்கொண்டிருந்தவர்களுக்காகத் தீட்டப்பட்டது தான் ரஷ்ய இலக்கியம். புதியதோர் உலகு எழ, விழிப்புறச் செய்ததன் மூலம் உலகெங்கும் […]

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 4

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 4

5. கர்ணன் பாண்டு புத்திரனா? மகாபாரதத்தில், பீஷ்மப் பிதாமகர் அம்புப் படுக்கையில் இருந்து பேசிய, சத்திரிய – சூத்திரத் தகுதிகள் பற்றிச் சொல்லி சென்ற பகுதியை முடித்திருந்தோம். பீஷ்மர் இதுபோல் பலமுறை சட்டங்கள், தர்மங்கள் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். கர்ணனை, குந்திதேவிக்குப் பிறந்திருந்தாலும் ஏனைய பாண்டவர்களின் தந்தையான பாண்டுவின் மகனாக வீடுமன் கருதவில்லை என்பதைப் பார்த்தோம். ஏன்?கர்ணன் பிறந்தபோது, குந்திதேவி திருமணமாகாத பெண். கர்ணன் பிறந்த பின் திருராஷ்டிரனின் தம்பி பாண்டுவைத் திருமணம் செய்துகொள்கிறாள். பின்னர், பாண்டு சல்லியனின் […]

அக்கா-மவ

அக்கா-மவ

க(வி)தை ஆறு வயசிருக்கும்அக்காவை அயித்தான்மேளம் கொட்டி தாலி கட்டயில.. அயித்தான் கைபிடிச்சி அக்கா போகயிலே‘அக்கா’ன்னு ஓடிப்போயி அவ கால கட்டிக்கிட்டேன்கண்ணுல தேக்கிவைச்ச மடை ஒடைச்சிஅக்கா சேலைய நான் நனைச்சேன் ஆத்தா மூக்கைச் சிந்தி அப்பால வீசிப்போட்டுஅக்கா காலவுடு; வாக்கப்பட்டு போறா அவவாடா ராசான்னு கை புடிச்சி வலிச்சிட்டா.. ஆத்தா கைய வுடு அக்காகூட போறேன்னுஅழுது புரண்டு மல்லுக்கட்டி நாந்திமிர.. திலும்பி திலும்பி பாத்து தெருவெறங்கி போன அக்காசட்டுனு ஓடியாந்து குனிஞ்சி முத்தமிட்டுசீரு பானையோடே கண்ணுல கரைஞ்சி போனா.. […]