நகைச்சுவை

“சார் எங்கே ஒரு வாரமாய் வாக்கிங் வரலே.” “சுகர் ஜாஸ்தி ஆயிடுச்சி.”  “கொரோனா”வில் வீட்டிலிருந்ததால மன அழுத்தம் அதிகமாக இருந்திருக்கும்.’’ ‘‘ஆமாம் சார் டாக்டரும் அதை தான் சொன்னாரு.’’ ‘‘பார்த்தீங்களா! நான் சொன்னது மாதிரியே சொல்லியிருக்காரு!’’ ‘‘ஆமா சார், உங்களால எப்படி சொல்ல முடியுது.’’  ‘‘எனக்கும் அதே பிராப்ளம் தான்…’’

சிம்மாசனங்கள் என்ன ஆகும்..!

சிம்மாசனங்கள் என்ன ஆகும்..!

நாடற்றவர்களா இவர்கள்..? இல்லை. இந்த நாட்டின் முதுகெலும்புகள். நாதியற்றவர்களா இவர்கள்..? இல்லை . இந்த நாட்டின் இரத்தமும் சதையுமானவர்கள். இவர்கள் இல்லையேல் உங்கள் இந்தியா ஏது.‌? ஆனால்- செருப்பாய் தேய்ந்து இந்த தேசத்தின் உயர்வுக்காக உழைத்தவர்களை தேய்ந்த செருப்பாய் எண்ணி தெருவில் வீசி எறிந்து விட்டதே இந்த அரசுகள் . காரணமென்ன..? பெருமுதலாளிகளின் எடுபிடிகளான அரசுகள் இந்த உழைக்கும் மக்களை ஊர் கொண்டு போய் சேர்த்தால் கார்ப்பரேட்டுகளின் கரன்சி பசிக்கு பங்கம் வந்துவிடும் என்பதால் காரணம் கூறாமல் […]

வாசிப்பை மீட்டெடுக்கும் நுழைபுலம்!

கற்றனைத்தூறும் அறிவு என்றார் திருவள்ளுவர். கற்றலின் கேட்டலே நன்று என்றார் முன்றுரை அரையனார். வாசிப்பு என்பது நம் சிந்தை மகிழச் செய்வது மட்டுமன்று. அது நம் கற்பனைச் சிறகுகளை விரிக்கச் செய்து சிந்தனைத் திறனை மேம்படுத்தவல்லது. பரபரப் பான இந்த நுகர்வுலக வாழ்வில், வாசிக்கும் பழக்கம் அருகிவிட்டது. தொலைக்காட்சி, உள்ளங்கை இணையம், கேளிக்கை உள்ளிட்டவை புத்தகம் வாசிக்கும் பழக்கத்துக்கு முட்டுக் கட்டைகளாகி விட்டன. அருகிவிட்ட வாசிப்பை மீட்டெடுக்கவும், வாசிப்பு அனுபவத்தைப் பலருடன் பங்கிட்டுப் பரிமாறிக்கொள்ளவும், தென்சென்னைப் பகுதியில் […]

கேலிச் சிரிப்பு

கேலிச் சிரிப்பு

சென்னை பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த போக்குவரத்திலிருந்து சற்றே ஒதுங்கி இருந்த வங்கியின் வாசலுக்கு அருகாமையில் இடம் தேடி வண்டிகள் வரிசையாகவும் , நெரிசலாகவும் இருந்த ஓர் இடத்தில் இரண்டு வண்டிகளுக்கு இடையில் தன்  ஸ்கூட்டியை சொருகி நிறுத்தினாள்.  அவசரத்துக்கு பேங்குக்கு வந்துபோக முடியுதா? பார்க்கிங் எப்பவும் புல்லாதான் இருக்கு. இப்படி பார்க்கிங் வசதியில்லாத இடத்தில் எதுக்காக பேங்கை நடத்து றாங்க என ஒருவகை சலிப்புடன் தனக்குத் தானே புலம்பியபடியே வண்டியின் சீட்டை தூக்கி அதற்குள்ளே தன் தலைக்கவசத்தை […]

இந்த அரசு யார் உயிரைக் காப்பாற்றப் போகிறது?

இந்த அரசு யார் உயிரைக் காப்பாற்றப் போகிறது?

கேள்வி எழுப்புகிறார் முன்னாள் எம்.எல்.ஏ சிவசங்கர் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க-வின் அரியலூர் மாவட்டச் செயலாளரும் குன்னம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான எஸ்.எஸ்.சிவசங்கரிடம், புலம்பெயர் தொழிலாளர்களின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் மாநில அரசு இவர்களுக்கு வழங்கி வரும் அத்தியாவசிய உதவித் திட்டங்கள் குறித்துப் பேசினோம். ‘‘எங்கள் அரியலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை விவசாயம் பொய்த்துப் போன மாவட்டம் இது. மேலும் இந்த மாவட்டத்தில் தான் அதிகப்படியான சிமெண்ட் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இதனால் இம்மாவட்ட மக்கள் […]

பொன்மகள் வந்தாள்

பொன்மகள் வந்தாள்

ஜோதிகா நடிப்பில் இணையத்தில் நேரடியாக வெளியான முதல் தமிழ்த் திரைப்படம்! முதலில், நேரடியாக இணையத்தில் ஏன் இந்தப் படம் வெளிவந்தது என்பதை பார்ப்போம்! மார்ச் 25 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால், கொரோனா காரணமாக அதற்கு முன்பே ஊரடங்கை அரசு அறிவித்தது. தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் எப்போது அவை திறக்கப் படும் என்பதும் உறுதியில்லை. இப்போது லாக்டவுன்-4ல் இருக்கிறோம். இது மேலும் நீடிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே, திரைப்படம் எடுப்பது ஒரு […]

வெட்டுக்கிளி ராணுவம் பராக் பராக்..!

வெட்டுக்கிளி ராணுவம் பராக் பராக்..!

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் பிரளயமாக அதிகரித்து வரும் புயல், வெயில், பூகம்பம், தீவிரவாதத் தாக்குதல்கள் என்ற வரிசையில் தற்போது பரவி வரும் கொரானா எனும் கொடிய வைரஸ் உலகில் உள்ள மக்கள் அனைவரையும் உயிர் பயத்தில் ஆழ்த்தி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 4 லட்சம் உயிர்களை பலி வாங்கிய இந்த வைரஸ் தாக்குதலையும் தாண்டி, இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு அடிமேல் அடியாக உருவெடுத்து வருகிறது வெட்டுக்கிளி படையெடுப்பு. ஏற்கனவே வாழ்வாதாரம் சீரழிந்து உள்ளதைச் […]

விடியலை நோக்கி…

விடியலை நோக்கி…

வந்த வழிகளின் வனப்புகள் அனைத்துமே வளங்களை மட்டும் பறைசாற்றவே இல்லை… நெளிவு சுளிவுகளைக் கடந்தே வந்தாலும் வாழ்க்கை வழி மட்டும் இதுவரை வாய்க்கவே இல்லை… முகம் மட்டும் சிரிக்க அகமனைத்தும் அழ வயிறெனும் நிலம் மட்டும் பசிக்களையில் நிறைந்தே… களை பிடுங்க யாரும் வருவாரில்லை இங்கே வார்த்தைகளில் பொட்டிட்டு வாழ்க்கை மட்டும் தொலைந்தது… என் வாழ்வின் வழியையே தீர்மானிக்க உரிமையில்லை சுவடுகளைத் தீர்மானிக்க மட்டும் சிந்தனைகள் ஆயிரமாயிரம்… என் வலியறிந்தோர் வசமில்லை எதுவுமிங்கே வறுமையின் வரலாறுகளை சுருக்கங்களில் […]

வெள்ளிக் கொலுசு சப்தம்

வெள்ளிக் கொலுசு சப்தம்

துள்ளிவரும் அலையாட்டம்கள்ளி நீ ஓடையிலேசொல்லி அழைக்குதடிசோட்டையாட கேக்குதடி பள்ளிப் பருவத்திலேதுள்ளியாடி போகயிலேவெள்ளிக் கொலுசு சப்தம்வேற்றுமொழி சொல்லலையே கெஞ்சலடி நாவுன்னைகொஞ்சவேண்டி நீயென்னைநஞ்சைத் தின்னவைக்காமல்நன்னெறியை தந்திடடி

கருணாநிதி 97

கருணாநிதி 97

இந்தியாவில் எந்தவொரு அரசியல்வாதியும் இவ்வளவு விமர்சனங்களை எதிர்கொண்டதாகச் சரித்திரம் இல்லை. எந்தக் காரியத்தில் இறங்கினாலும் எதிர் விமர்சனம் இன்றி கருணாநிதி வென்றதாக வரலாறும் இல்லை. ஒருவேளை இவரின் வெற்றிக்கு இந்த விமர்சனங்கள் தான் ஊன்றுகோலாக இருந்தனவோ என்ற எண்ணம் அவ்வப்போது எழுவதுண்டு. தனது அரசியல் பிரவேசம் முதல் கட்சியின் தலைவர் பொறுப்பு, முதல்வர் பதவி மற்றும் கடைசித் தருணம் வரை இவரின்  ஒட்டுமொத்த செயல்பாட்டையும் அக்குவேறு ஆணிவேறாக விமர்சனம் செய்வதற்கென்றே ஒரு வலைப் பின்னல் கட்டமைக்கப்பட்டிருந்தது கருணாநிதி […]

தென்றல் வந்து தீண்டும்போது….

தென்றல் வந்து தீண்டும்போது….

இசைஞானி இளையராஜாவிற்கு மணி மகுடம் சூட்டுகிறது “தென்றல் வந்து தீண்டும் போது” குறும்படம். தமிழ் சினிமாவில் இசை என்றாலே இளையராஜாவிற்கு முன், இளையராஜாவிற்கு பின் என்ற சகாப்தத்தை உருவாக்கி, இன்று உலக சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு தமிழ் இசை அரசனாக முடிசூட்டப்பட்ட இசைஞானி  இளையராஜாவின் பிறந்த நாள் வாழ்த்துக்களை இசை ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாணியில் கொண்டாட, பரந்து விரிந்த அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவரான அருள் சங்கர் என்பவர் தனது இசைத் தலைவனுக்கு […]

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை என்பதை நோய் என்றும் கூறலாம், அறிகுறி என்றும் கூறலாம். மஞ்சள் காமாலைக்கு ஆங்கிலத்தில் jaundice.  இது jaunice எனும் ப்ரெஞ்சு மொழியில் இருந்து வந்தது. இதன் பொருள் மஞ்சள் நிறமாதல். இதை மருத்துவ ரீதியில் icterus என்றும் அழைப்பர். மஞ்சள் காமாலை நோயானது பிலிருபின்(Bilirubin) என்ற ஒரு மூலக்கூறினால் ஏற்படுகிறது. பிலிருபி னின் வாழ்க்கையை அறிந்து கொள்வோம். அப்போது தான் மஞ்சள் காமாலை எளிதாகும். நம் உடல் இயங்க இரத்தம் தேவை, இரத்தத்தில் இரத்த […]

சுவடு கடந்து வந்த பாதை

சுவடு கடந்து வந்த பாதை

2007 சனவரியில் ‘சுவடு’ மாத இதழ் வெளிவந்தது. ஒரு தாய் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை பிரசவிக்கும்போது ஏற்படும் வலியையும் துன்பத்தையும் எப்படிப் பொறுத்துக்கொண்டு பெற்றெடுக்கிறாளோ, அப்படியே ‘சுவடு’வும் மாத இதழாகப் பிரசவமானது. ஈராக்கில் சதாம் உசேன் அமெரிக்க ஏகாதிபத்திய அரசால் தூக்கிட்டுக் கொல்லப் பட்டபோது… மனித இனமே அழுதது; அந்த ஒளிப்பட அட்டையுடன் 2007 சனவரியில் சுவடு வெளிவந்த நினைவு உள்ளத்தில் அழியாச்சுவடாகப் பதிந்துள்ளது. 2007 சனவரி முதல் 2012 டிசம்பர் வரை தொடர்ந்து பல்வேறு […]