சொன்னவண்ணம் செய்த பெருமாள்

சொன்னவண்ணம் செய்த பெருமாள்

தாய்மொழி தின நாடகம் காட்சி 1 காலம்: ஆறாம் நூற்றாண்டில் ஒரு மாசி மாதம்தினம்: மகம்இடம்: திருவெஃகா விண்ணகரம்நேரம்: காலைபாத்திரங்கள்: சீதையம்மை, திருமழிசை ஆழ்வார், கணிகண்ணன், கோயில் பட்டர் திருக்கோயிலைச் சுத்தம் செய்து வரும் சீதையம்மை அன்றும் சுத்தம் செய்து திரும்பிக்கொண்டிருக்கும் நேரம். எதிரே திருமழிசை ஆழ்வாரின் சீடன் வருகிறான். சீதையம்மை: வணக்கம் ஐயா. கணிகண்ணன்: வணக்கம் அம்மையே, ஏன் சோர்ந்தாற்போல் வருகிறீர்கள்? சீதையம்மை: வயதாகிவிட்டதல்லவா. இந்தப் பெருமாளுக்கு இன்னும் எத்தனை நாள் நான் சேவை செய்யக் […]

குமிண் சிரிப்பு

குமிண் சிரிப்பு

நாடக விமர்சனம் : மது ராஜேந்திரன் சிவபுரம் நடராஜர் சிலை கடத்தப்பட்டு, அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்ட உண்மைக் கதையின் அடிப்படையில், சுஜாதா விஜயராகவன் எழுத்தில், திரைப்பட இயக்குநரும் வீணைக் கலைஞருமான எஸ்.பாலச்சந்தர் அவர்களின் மகன் எஸ்.பி.எஸ். ராமன் இயக்கத்தில் மேடையேறி  இருக்கும் நாடகம்தான் ‘குமிண் சிரிப்பு.’ புதுப்பிப்பதற்காகத் தம்மிடம் வந்த  ராஜநல்லூர் சிவன் கோவில் நடராஜர் சிலையைப் போன்றே அச்சு அசலான ஒரு சிலையைப் பணத்தாசையால் மாணிக்க ஆசாரி செய்து விற்றுவிடுகிறார். அச்சிலை பல கைகள் மாறி, அமெரிக்காவில் […]

நீலகண்ட பிரம்மச்சாரி – 24

நீலகண்ட பிரம்மச்சாரி – 24

காட்சி 24 காலமும் இடமும் பாத்திரங்களும் : முந்தைய காட்சியின் தொடர்ச்சி (ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் உரையாடலைத் தொடர்கிறார்கள்) ஓம்கார் சுவாமிகள் : குமரப்பா விருந்தினர் விடுதிக்குப் போனதும் சர்தார் பட்டேலிடமும் மகாதேவ தேசாயிடமும் என்னைப்பற்றிச் சொல்லிவிட்டு, ‘நீங்கள் இவரைச் சந்திக்க வேண்டும். தவறினால் நீங்கள் வருத்தமடைவீர்கள்’ என்று சொல்ல, ஆர்வம் கொண்ட அவர்கள் என்னை வந்து பார்த்துப் பேசிவிட்டுப் போனார்கள். என் சந்திப்பு பற்றிய விவரம் காந்தியடிகளிடம் சொல்லப்பட்டது. காந்திஜி என்னைப்பற்றி முன்னமே கேள்விப்பட்டிருந்தார். […]

நீலகண்ட பிரம்மச்சாரி – 23

நீலகண்ட பிரம்மச்சாரி – 23

காட்சி 23 காலம் : 1936ஆம் வருடம் மே மாதம் இரண்டாம் தேதிஇடம் : ஓம்கார் ஆசிரமம்பாத்திரங்கள் : ஜே.சி.குமரப்பா மற்றும் சிலர் ஜே.சி.குமரப்பாவுடன் வந்தவர் : (அங்கிருக்கும் ஆசிரமவாசியிடம் கன்னடத்தில்) இதோ, இவர் பெயர் ஜே.சி.குமரப்பா. மகாத்மா காந்திஜியின் சீடர். சுவாமிஜியைப் பார்க்க வந்திருக்கிறார். ஆசிரமவாசி : சுவாமிஜி அந்தக் குன்றின் மேல் இருக்கிறார். இப்போதெல்லாம் அவர் கீழே வருவதில்லை. அவரைப் பார்க்கவேண்டுமென்றால் நீங்கள்தான் மேலே போய்ப் பார்க்க வேண்டும். ஜே.சி.குமரப்பாவுடன் வந்தவர் : (குமரப்பாவிடம் […]

நீலகண்ட பிரம்மச்சாரி – 22

நீலகண்ட பிரம்மச்சாரி – 22

காட்சி 22 இடம் : ஓம்கார் ஆசிரமம், நந்தி மலை.பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன் ஓம்கார் சுவாமிகள் : இந்த நந்திமலை வனத்திற்குள் ஒரு சுனை இருக்கிறது சங்கர கிருஷ்ணன். தட்சிணப் பிநாகினி இங்கிருந்து கிளம்பி ஓடுகிறாள். இவள் தமிழ்நாட்டுத் தென்பெண்ணை. இங்கிருந்து கிளம்பித் தமிழ்நாட்டுக்குப் போகிறாள். நான் தமிழ்நாட்டிலிருந்து கிளம்பி இவள் மடிக்கு வந்து சேர்ந்தேன்.இந்த நதி கடலில் சேரும் இடத்திற்கும் எனது சொந்த ஊரான எருக்கூருக்கும் சுமார் நாற்பது மைல்கள் இருக்கலாம். […]

நீலகண்ட பிரம்மச்சாரி – 21

நீலகண்ட பிரம்மச்சாரி – 21

காட்சி 21 காலம் : 1930ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் தேதிஇடம் : ‘தி ஹிந்து’ பத்திரிகை அலுவலகம், சென்னை.பாத்திரங்கள் : ஹிந்து ஆசிரியர் கஸ்தூரி சீனிவாசன், நீலகண்டர் நீலகண்டர் : நமஸ்காரம். அடியேன் நீலகண்டன்.. நீலகண்ட பிரம்மச்சாரி. என்னை நீங்கள் அறிவீர்கள். சீனிவாசன் : நமஸ்காரம் நீலகண்டர். உம்மைத் தெரியுமே.. உமது சுடர் விடும் கண்களில் கனிவும் உமது முகப்பொலிவில் சாந்தமும் இப்போது காண்கிறேன். சிறைவாசம் உம்மை மாற்றியிருக்கிறது போலும். எப்போ வெளியில் வந்தீர்..? […]

நீலகண்ட பிரம்மச்சாரி – 20

நீலகண்ட பிரம்மச்சாரி – 20

காட்சி 20 காலம் : 1928ஆம் வருடத்தில் ஒருநாள் காலைஇடம் : ரங்கூன் சிறைச்சாலை, பர்மாபாத்திரங்கள் : சிறை அதிகாரி, நீலகண்டர் சிறை அதிகாரி : நீலகண்ட பிரம்மச்சாரி.. மதராசி.. Age thirty nine.. தமிழன்.. நீலகண்டர் : நீங்கள் தமிழ் அறிவீரா? சிறை அதிகாரி : ஆம், நன்றாகத் தெரியும். records பார்த்தேன். ஆரம்பத்தில் இருந்தது போல இல்லை. நல்ல பிள்ளையா மாறிட்டு வாறீங்க. continue பண்ணுங்க. இன்னும் நாலு வருசம் இருக்கு, நன்னடத்தை continue […]

நீலகண்ட பிரம்மச்சாரி – 19

நீலகண்ட பிரம்மச்சாரி – 19

காட்சி 19 இடம் : ஓம்கார் ஆசிரமம்(ஓம்கார் சுவாமிகள் – சங்கர கிருஷ்ணன் உரையாடல் தொடர்கிறது) ஓம்கார் சுவாமிகள் : ஆசிரமத்தின் பக்கத்தில் ஓடும் தென்பெண்ணை நதியைப் பார்த்தீர்கள் அல்லவா சங்கர கிருஷ்ணன்..? ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் அமைதியாக ஓடுகிறது. மலைச் சரிவில் ஆர்ப்பரிக்கும் புனல், சமவெளியில் அமைதியாகப் போவது போல, என் வாழ்க்கை காட்டாற்று வெள்ளமாகப் பிரவாகித்து வயலுக்குப் பொசியும் வாய்க்கால் போல அமைதி ஆனது. இங்கு வந்தபோது நான் இந்த நதியைப் போல அமைதியாக இருந்தேன். […]

நீலகண்ட பிரம்மச்சாரி – 18

நீலகண்ட பிரம்மச்சாரி – 18

காட்சி 18 (திரை விலகும்முன் மேடையில் செவ்வொளி பரவியிருக்க குரல் மட்டும் கேட்கிறது) குரல் : மீண்டும் ஒருமுறை உங்களிடம் பேசவேண்டியதாகிவிட்டது. நீலகண்டரின் கதையில் பாரதியின் இறுதி நாளில் அவர் அங்கிருந்தார் என்பதாலேயே, பாரதியின் பிரிவை நாடகத்தில் விரிவாகக் காட்டவேண்டி வந்தது. இந்த நாடகம் தொடங்கிய பாரதி வீட்டிலேயே முடிந்தும் போனால் நன்றாகத்தான் இருக்கும். ஒரு காவியப் பூச்சுகூடக் கிடைத்து விடும். ஆனால், இன்னும் கொஞ்சதூரம் நாம் போய்த்தான் ஆக வேண்டும். (திரை விலகி ஓம்கார் ஆசிரம […]

நீலகண்ட பிரம்மச்சாரி – 17

நீலகண்ட பிரம்மச்சாரி – 17

காட்சி 17 காலம் : 1921 செப்டம்பர் 11ஆம் நாள் முற்பகல்இடம் : இந்த வரலாற்றின் ஆரம்பக் காட்சியில் நாம் பார்த்த திருவல்லிக்கேணி பாரதியார் வீடுபாத்திரங்கள் : பாரதியார், செல்லம்மா, சகுந்தலா, வ.வே.சு.அய்யர், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, பரலி நெல்லையப்பர், குவளை கிருஷ்ணமாச்சாரி, ஹரிஹரசர்மா, வைத்தியர், இன்னும் சிலர். (பாரதி கண்மூடிப் படுத்திருக்கிறார். பக்கத்தில் செல்லம்மாவும் சகுந்தலாவும் இருக்கிறார்கள். நீலகண்டரும் குவளை கிருஷ்ணமாச்சாரியும் அருகில் நின்றுகொண்டிருக்கிறார்கள். வாசலில் சத்தம் கேட்கிறது. பலர் உள்ளே வரும் சலசலப்பில் செல்லம்மாவும் […]

                 நீலகண்ட பிரம்மச்சாரி – 16

                 நீலகண்ட பிரம்மச்சாரி – 16

காட்சி 16 காலம் : 1921ஆம் வருடம் ஜூலை மாதம்இடம் : சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை (சந்திப்பு தொடர்கிறது)பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர் சுரேந்திரநாத் ஆர்யா : தீர்ப்புக்கு அப்பீல் முயற்சிகள் செய்தீர்களா..? நீலகண்டர் : என்வரையில் அன்றும் சரி, இன்றும் சரி, பிரிட்டிஷ்காரன் கோர்ட்டை நான் நம்புவதில்லை.. ஆகவே என்னைத் தவிர எல்லாரும் அப்பீல் செய்தார்கள். நான் எதிர்பார்த்தது போலவே அப்பீல் மனுக்களை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துவிட்டது. பாரதியார் : உமது […]

நீலகண்ட பிரம்மச்சாரி – 15

நீலகண்ட பிரம்மச்சாரி – 15

காட்சி 15 காலம் : 1921ஆம் வருடம் ஜூலை மாதம்.இடம் : சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை (சந்திப்பு தொடர்கிறது)பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர். ஆர்யா : நீலகண்டரே, சரணடையும் முடிவைக் கல்கத்தா போய் எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது..? நீலகண்டர் : நான் இயங்கி வந்த இயக்கத்தின் நண்பர்கள் வங்கத்தில்தான் இருந்தார்கள். உண்மையில் நான் மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். புதுச்சேரி நண்பர்கள் ஏதோ செய்யப்போகிறார்கள் என்று அறிந்திருந்தேன். அவர்களின் இலக்கு ஆஷ் […]

நீலகண்ட பிரம்மச்சாரி -14

நீலகண்ட பிரம்மச்சாரி -14

காட்சி 14 காலம் : 1921ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள்இடம் : திருவல்லிக்கேணி கடற்கரைபாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர். (பாரதியாரும் நீலகண்டரும் கடற்கரையில் அமர்ந்திருக்கின்றனர். தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கவிதையை பாரதியார் படித்துக் காட்டுகிறார்.) பாரதியார் : கேள்! விடை கூறினள் மாதா! நம்மிடையாவனே யிங்கு தோன்றினன்? இவன் யார்?உலகப் புரட்டர் தந்திர உரையெலாம்விலகத் தாய்சொல் விதியினைக் காட்டுவான்.மலைவு செய்யாமை; மனப்பகை யின்மை ;நலிவுறுத்தோரை நாம் எதிர்த்திடாமை ;தீச்செயல் செய்யும் […]

நீலகண்ட பிரம்மச்சாரி – 13

நீலகண்ட பிரம்மச்சாரி – 13

காட்சி 13 காலம் : 1911 ஏப்ரல் மாதத்தில் ஒருநாள்இடம் : பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் வெள்ளவாரி ஓடைபாத்திரங்கள் : நாகசாமி, கண்ணுப்பிள்ளை, வாஞ்சிநாதன்.(நாகசாமி, வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கிச் சுடப் பயிற்சி தருகிறார்) நாகசாமி : வாஞ்சி, உமக்குத் துப்பாக்கிச் சுடுவதில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. கையில் நடுக்கம் குறைந்துவிட்டது. குறி வைப்பதிலும் நல்ல தேர்ச்சி வந்துவிட்டது. இன்னும் சிலநாள் பயிற்சி போதும். இலக்கைத் தவறவிடமாட்டாய். வாஞ்சிநாதன் : வந்தனம் ஐயா. நாகசாமி : உமது இலக்கு 6 அடி […]

நீலகண்ட பிரம்மச்சாரி – 12

நீலகண்ட பிரம்மச்சாரி – 12

காட்சி 12 காலம் : ஓம்கார் ஆசிரமத்தில் சங்கர கிருஷ்ணன் வந்த மூன்றாம் நாள்பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன். ஓம்கார் சுவாமிகள் : தம்பி, நேற்று மாலை மலை ஏறிப்போய் வந்தீர்கள் போல.. எப்படி இருந்தது..? சங்கர கிருஷ்ணன்: அருமையான அனுபவமாக இருந்தது சுவாமி. நீங்கள் கொஞ்சகாலம் முன்பு வரை மலை மேலேதான் இருந்தீர்களாமே..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம். கீழே என்னை அவதாரம் போல மக்கள் நினைக்க ஆரம்பித்துப் பல இடங்களில் இருந்தெல்லாம் […]

நீலகண்ட பிரம்மச்சாரி – 11

நீலகண்ட பிரம்மச்சாரி – 11

காட்சி 11 காலம் : 1911ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வாஞ்சிநாதன் புதுவை வந்த அடுத்தநாள்இடம் : உடற்பயிற்சிக் களம், பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம்.பாத்திரங்கள் : நாகசாமி, வாஞ்சிநாதன், வ.வே.சு.அய்யர், கண்ணுப்பிள்ளை மற்றும் சில இளைஞர்கள்.(உடற்பயிற்சிக் களத்தில் சிலம்பப் பயிற்சி நடந்துகொண்டிருக்கிறது.. வ.வே.சு.அய்யர் கவனித்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்கள் வட்டமாகச் சுற்றிநின்று பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நாகசாமியும் வாஞ்சிநாதனும் வருகிறார்கள்)வ.வே.சு.அய்யர் : வாருங்கள். சிலம்பப் பயிற்சி முடியட்டும். அமர்ந்து பாருங்கள்..(அமர்ந்து கொள்கிறார்கள். மோதல் பயிற்சி உச்சத்தில் வருகிறது. ஒருவரின் சிலம்பம் கையிலிருந்து நழுவிவிடுகிறது. போட்டி […]

நீலகண்ட பிரம்மச்சாரி – 10

நீலகண்ட பிரம்மச்சாரி – 10

காட்சி 10 காலம் : 1911ஆம் வருடம்.ஜனவரி மாதத்தில் அதே நாள்இடம் : பாண்டிச்சேரி ‘தர்ம இல்லம்’பாத்திரங்கள் : வ.வே.சு.ஐயர், வாஞ்சிநாதன், நாகசாமி. (வ.வே.சு.அய்யரும் வாஞ்சிநாதனும் ஒரு இல்லத்தின் முன்பு நிற்கிறார்கள். வாசலில் ஒரு இளைஞர் நிற்கிறார்) வ.வே.சு.அய்யர் : வாஞ்சிநாதன்.. இதுதான் ‘தர்மம்’ பத்திரிகாலயம்.. இவர் நாகசாமி. இவர்தான் ‘தர்மம்’ பத்திரிகையைக் கவனித்துக்கொள்கிறார். நாகசாமி : வாருங்கள் அய்யர்.. வாரும் தம்பி.. தம்பி யார்..? வ.வே.சு.அய்யர் : இவர் வாஞ்சிநாதன். நீலகண்டரின் தயாரிப்பு. அவரைத் தேடித்தான் […]

நீலகண்ட பிரம்மச்சாரி – 9

நீலகண்ட பிரம்மச்சாரி – 9

காட்சி 9 காலம் : 1911 ஜனவரி மாதத்தில் ஒருநாள்இடம் : ஈசுவரன் தர்மராஜா வீதி, பாண்டிச்சேரிநேரம் : காலை 8 மணிபாத்திரங்கள் : வாஞ்சிநாதன், வ.ரா., வ.வே.சு.ஐயர் வாஞ்சிநாதன் : (வீதி முனையில் நின்றுகொண்டு எதிரே வரும் நபரிடம்) ஐயா, இங்கே பாரதியார் வீடு எங்கே இருக்கிறது..? எதிரே வந்த நபர் : இதே தெருவில் கடைசி வீடுதான்.. நீர் யார்? பாரதியாருக்கு என்ன உறவு..? வாஞ்சிநாதன் : ஐயா, நான் பாரதியாரைப் பார்க்க வரவில்லை. […]

நீலகண்ட பிரம்மச்சாரி – 8

நீலகண்ட பிரம்மச்சாரி – 8

காட்சி 8 காலம் : 1910ஆம் வருடம் கோடைக்காலத்தில் ஒருநாள்இடம் : தென்காசியில் மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை வீடுபாத்திரங்கள் : நீலகண்டர், மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, சங்கர கிருஷ்ணன், வாஞ்சிநாதன், இன்னும் சில இளைஞர்கள் (காளி படம் ஒன்றுக்கு மாலை போட்டு வைத்திருக்க, பொரியும் கடலையும் படைக்கப்பட்டிருக்கிறது.. சிறிய செம்பு ஒன்றில் தண்ணீரும் பக்கத்தில் செப்பு ஒன்றில் குங்குமமும் இருக்கிறது) நீலகண்டர் : என்ன சிதம்பரம் பிள்ளை.. எல்லாரும் வந்தாச்சா..? மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை : ஓட்டப் […]

நீலகண்ட பிரம்மச்சாரி – 7

நீலகண்ட பிரம்மச்சாரி – 7

காட்சி 7 இடம் : ஓம்கார் ஆசிரமம்காலம் : மறுநாள் காலை 10 மணிபாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன் ஓம்கார் சுவாமிகள் : நேற்று ராவுல நல்லா தூங்கினீங்களா..? சங்கர கிருஷ்ணன் : நல்லா தூங்கினேன் சுவாமிஜி. காலை வேளையில் இந்த மலைச் சாரல் மிக ரம்மியமாக இருக்கிறது. அதிலும் தெளிந்த கண்ணாடி போன்ற நதியின் பிரவாகத்தில் என்னை மறந்து போனேன். ஓம்கார் சுவாமிகள் : இந்த நதியை இங்கே ‘தட்சிணப் பிநாகினி’ என்று […]