குட்டீசுடன் கும்மாளம்

குட்டீசுடன் கும்மாளம்

இப்ப எல்லாம் நாம வேலைக்குப் போறதைவிட அதிகமா கவலைப்படறது குழந்தை வளர்ப்பு பற்றிதான். இதைப் பார்க்கும் வீட்ல இருக்கற பெரியவங்க “அட, நாங்க எல்லாம் அஞ்சாறு புள்ளைகளை அழகா பெத்து வளர்த்தோம். ஆனா இவங்க ஒண்ணு ரெண்டு புள்ளைகள வைச்சிகிட்டு பண்ற அலம்பல் இருக்கே… தாங்க முடியல” அப்படின்னு சொல்லுவாங்க. நாம குழந்தைகளா இருந்த காலத்தில் எல்லா சொந்த பந்தங்களும் அக்கம் பக்கத்தில் ஒன்னு மண்ணா இருந்து வந்தாங்க. இன்னைக்கு நாம குழந்தை களுக்குச் சொல்ற “ஷேரிங் […]

மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள்!

மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள்!

பெரும் பதட்டமும் பரபரப்பும் என்னைச் சூழ்ந்து கொண்டது. இவ்வளவு பிரமாண்டமான ரயில் நிலையத்தில் உயரமான படிக்கட்டுகளில் ஏறி இறங்கி நீண்ட பிளாட்பாரங்களில் நடந்து கவுண்ட்டர் கவுண்ட்டராகத் தேடி, தேவையான பதிலைப் பெறுவது பெரும் சங்கடத்தையும் மனச்சோர்வையும் தந்தது. கொல்கத்தா ரயில் நிலையம் நான் நினைத் ததற்கு  மேலாக பிரம்மாண்டமாக இருக்கிறது. இருக்காதா என்ன? 1911 வரை இந்தியாவின் தலைநகரமாக கொல்கத்தாதான் இருந்தது. அதற்கேற்ற வகையில் நிர்மாணிக்கப்பட்டது இந்த ரயில் நிலையம். இந்தியாவின் மிகப் பரபரப்பான ரயில் நிலையங்களில் […]

இன்றைய சூழலில் கல்வி – 2

இன்றைய சூழலில் கல்வி – 2

ஆசிரியர்களே தேவையில்லை என்கிறார் ரூசோ, பள்ளிக்கூடமே அவசியமில்லை என்கிறார் ஜான்ஹோல்ட். நோய்த்தொற்றின் அச்சுறுத்தலும் ஊரடங்குச் சூழலும் இவர்கள் கூற்றை உண்மையாக்கியிருப்பது யதார்த்தம். குழந்தைகளுக்கான மூன்றாவது இடத்தைச் சிந்திப்பது குறித்து  சென்ற இதழில் பேசினோம். ஆனால் இன்று வேறொரு பிரச்சனை நம்மைத் திசை திருப்பி யுள்ளது. ஆம், நமது கல்வி முறையில் பள்ளிக் கல்வியின் இறுதி வகுப்புகளாக  அமைந்துள்ள 11 , 12 ஆம் வகுப்புகளின் சேர்க்கையில் இந்தக் கல்வியாண்டு முதல் கொண்டு வந்துள்ள மாற்றம்தான் அந்தப் பிரச்சனை. […]

இசையோடு சில இனிய நினைவுகள்

இசையோடு சில இனிய நினைவுகள்

அன்பிற்கினிய சுவடு மின்னிதழ் வாசகப் பெருமக்களே வணக்கம்! ஒரு படைப்பாளி வெகுஜன ஊடகங்களில் எழுதுவதே பெருமையென நினைத்து வாய்ப்புத்தேடி எழுதிய காலமொன்றிருந்தது. அவ்வகையான ஊடகங்கள் இலக்கியத்திற்கென் இணை ஏடுகள் நடத்தத் தொடங்கியதும் அதில் எழுதுவதை பெருமை யாகப் பார்க்கப்பட்டது. அதன் பின் வந்த கால மாற்றத்தில் எல்லாம் வணிக மயம் என்றான பின் படைப்பாளிகள் சிற்றிதழ்கள் பக்கம் திரும்பினர். தொடங்கிய திலிருந்தே வியாபார நோக்கமின்றி தரமானதைத் தேடி அச்சிட்டுத் தந்து கொண்டிருக்கும் சில பல சிற்றிதழ்களுக்கு மாற்ற […]

பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

“ஈ.வே.ராமசாமியாகிய நான், தமிழர்களின் மீதான சூத்திரப் பட்டம் என்னும் இழிவைத் துடைத்தெறிய யாரும் முன்வராத காரணத்தால், நானே அந்தப் பணியை என் தோளில் சுமந்து செல்கிறேன்” என்று தமிழர்களுக்காகத் தானே முன்வந்து பகுத்தறிவுச் சிந்தனைகளை, சுயமரியாதைச் சிந்தனைகளை விதைத்த பெருமைக்குரியவர் தந்தை பெரியார். அவரின் பெருமைகள் எதையும் அறியாத 5 வயதில் 1965-இல், மதுரை தமுக்கம் மைதானத்தில் 2 நாள் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் முதல்முறையாகப்  பெரியாரைப் பார்த்தேன். அப்போது பெரியாரின் எந்தக் கருத்துகளும் என்னை […]

”பா.ஜ.க. காலூன்றினால் தமிழகம் மோசமான நிலைக்குத் தள்ளப்படும்!”- பியூஸ் மானுஷ் ஆவேசம்

”பா.ஜ.க. காலூன்றினால் தமிழகம் மோசமான நிலைக்குத் தள்ளப்படும்!”- பியூஸ் மானுஷ் ஆவேசம்

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சூழியல் போராளி பியூஸ் மானுஷ். பிறப்பால் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்றாலும் அவரின் செயல்பாடுகள் அனைத்தும் தமிழக சுற்றுச் சூழலை பாதுகாப்பதிலேயே உள்ளது. சுவடுக்காக அவரிடம் பேசினோம். “காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கான பாரீஸ் ஒப்பந்தத்தின் வாக்குறுதியின்படி இந்தியா நடந்து கொள்ளவில்லை என்று முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு காரணம் என்ன?” “கொரோனா காலத்தில் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தைக் கொண்டு வந்ததே […]

இனி என்னவாகும் கூட்டுறவு வங்கிகள்?

இனி என்னவாகும் கூட்டுறவு வங்கிகள்?

இந்திய நாட்டின் அனைத்து வங்கிகளின் வங்கியாகச் செயல்பட்டு வருவது RBI என அழைக்கப்படும் பாரத ரிசர்வ் வங்கியாகும். இது நாட்டின் மைய வங்கி. நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும் இதன் நேரடி கட்டுப்பாடு மற்றும் விதிகளின்படியே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை முறைப்படுத்துவது இதன் முக்கியப் பணியாகும். கடந்த 25/06/2020 அன்று இந்திய அரசு, “நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (RBI) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும்” […]

முகிலோடும் முகடோடு…

முகிலோடும் முகடோடு…

இந்தப் புவியின் ஒட்டுமொத்த இயற்கை அழகையும் ரசித்து முடிக்க ஒரு பிறவி போதாது. உலகம் முழுக்க புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் பல இருந்தாலும் இந்தியாவுக்குள்ளேயே நாம் இதுவரை கண்டிராத பேரழகு கொட்டிக் கிடக்கிறது. அதிலும், ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் உலகிலேயே வேறெங்கும் காணக்கிடைக்காத  அற்புதங்கள் ஏராளம்… ஏராளம்…! அந்த அற்புதக் காட்சிகளைக் கண்கள் குளிரக் கண்டு, உள்ளம் குளிர உலா வந்தது எங்களுக்கு அமைந்த நல்வாய்ப்பு. ஏழு சகோதரிகள் (Seven Sisters) என அழைக்கப்படும் […]

பெண் என்ன பொதுச் சொத்தா?

பெண் என்ன பொதுச் சொத்தா?

அண்மையில் நிகழ்ந்த ஒரு பெண்ணின் மறுமணம் ஊடகங்களால் செய்தியாக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் அந்தத் திருமணம் ஒரு பெருங்கூட்டத்தால் அருவருக்கத்தக்க வகையில் விமர்சிக்கப்பட்டது. ஒரு பெண் மறுமணம் புரிவது இவர்களுக்கு ஏன் இவ்வளவு உறுத்துகிறது? ஆண்டாண்டு காலமாக நம் சமூகத்தில் மனைவி இறந்த பின்னோ, பிரிந்த பின்னோ அல்லது உடன் இருக்கும்போதோ கூட ஒரு ஆண், இரண்டாம் திருமணம் புரிவது அல்லது மணம் புரியாமல் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவது போன்றவை நமக்கெல்லாம் ஒன்றும்  புதிதல்ல. அவற்றையெல்லாம் பக்கத்து […]

கொரோனா அயலகத் தமிழர்கள்  எதிர்கொண்டது எப்படி?

கொரோனா அயலகத் தமிழர்கள் எதிர்கொண்டது எப்படி?

தமிழகத்தில் இருந்து சென்று பல்வேறு உலக நாடுகளிலும் பணியில் இருப்பவர்கள் அந்தந்த நாடுகளில் அரசாங்கங்கள் மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ள கருத்துகளின் தொடர்ச்சி…  ஸ்பெயின்:  சீனாவுக்கு அடுத்ததாக, மார்ச் மாதத்தில் தலைப்புச் செய்தியில் இடம்பிடித்த நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள். கோபிசெட்டிப்பாளையம் அருகில் உள்ள கோபிப்பாளையத்தைச் சேர்ந்த முனைவர் குமார் பழனிசாமி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையின் தலைவராகப் பணிபுரிந்து […]

ஜோக்ஸ்

ஹலோ… மிஸ். அறிவழகி வீடா. ஆமா… நான் அவங்கம்மா பேசறேன்… அறிவு இருந்தா அவ கிட்டே போனைக்குடுங்க… கணவன்: என்னம்மா இட்லி பூப்போல இருக்குன்னு சொல்லிக் கொடுத்துவிட்ட… சாப்பிட்டுப் பார்த்தா சவ சவன்னு இருக்கே..? மனைவி: அடப்பாவி மனுசா… மாஸ்க்கைக் கழட்டிட்டு சாப்பிடுயா… இந்த நாடு முழுவதும் கொரனாவ எதிர்த்து போராடிட்டிருக்குது. நான் மட்டும் ஒரு காக்காவ எதிர்த்து போராடிட்டு இருக்கன்… டேய் அந்த வடகத்த பாத்துக்கடா… (Work From home) “என்னை வாழ வைத்தது சென்னை” […]

பயணம்

இரவு பத்து மணியை நெருங்கிக் கொண்டி ருந்தது. “காளிய வச்சி தார்பாயை கட்டிகிட்டு இரு. நான் போய் டீ சாப்ட்டு வந்துடறேன்” என்று புதிதாக வேலைக்கு வந்திருந்த சீனியிடம் சொல்லிக்கொண்டே கைலியின் மடிப்பில் பீடி இருக்கிறதா? எனப் பார்த்தபடி டீக்கடை வாசலை அடைந்தார் டிரைவர் சாமி. சற்று நேரத்தில் வண்டியை எடுக்க வேண்டும். ‘மழை வருகிறதா?’ என வானத்தைப் பார்த்த போது மனைவியிடம் இருந்து அழைப்பு வந்தது. “சொல்லு” “கெளம்பிட்டீங்களா?” “இல்ல, இனிமே தான். வந்துட்டானா?” “இல்ல. […]

இந்தியாவின் தேவை, சீனாவுடன் போரா? பொருளாதாரக் கட்டமைப்பா?

இந்தியாவின் தேவை, சீனாவுடன் போரா? பொருளாதாரக் கட்டமைப்பா?

உ னையாள்வதே பெரும்பாடம்மா… ஊராள்வது எனக்கேதம்மா… தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான பாடல் வரிகள் இவை. இது யாருக்கு ஒத்துப் போகிறதோ இல்லையோ, இன்றைய நிதர்சன அரசியலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கனக்கச்சிதமாகப் பொருந்துகிறது. உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளைத் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக வல்லரசு நாடான அமெரிக்காவே கதிகலங்கிப் போயுள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, சுயசார்பு இந்தியா எனும் திட்ட வரைவு ஒன்றை அறிவித்துள்ளார் பிரதமர் […]

நரைத்தடம்

நரைத்தடம்

வயதானவர்கள் என்றால் வெட்டிக்கதை பேசிக்கொண்டு, ஊர் வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டு, மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு மரத்தடியில் கட்டில் போட்டு சுகமாக ஓய்வெடுப்பவர்கள் என்கிற சினிமா மாயையை உதறிவிட்டு, நரைகூடிக் கிழப் பருவம் எய்தி – கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?! என்ற பாட்டுடைக் கவிஞன் பாரதியின் வரிகளுக்கு உயிர்ப்பித்துக் காண்பிக்கிறது ‘நரைத்தடம்’. பொதுவாகக் குறும்படம் என்றால் காமெடி, தினசரி ஹாட் டாபிக் மற்றும் காதல் கதைகளையே முக்கியமாகத் தேர்ந்தெடுக்கும் […]

மூடிய கேள்விகள்?

மூடிய கேள்விகள்?

மூடிட்டுப் போ என்கிறார்கள்.. தீர்வு அறியாததற்கும் விடை தெரியாததற்கும் எப்போதும் பேசும் பேச்சு இது.. திறனாய்ந்த மருத்துவன் காயத்தை திறந்து பார்க்கிறான்.. நோய்மை புரியாத வைத்தியன் கடவுளுக்குத் தான் தெரியும் என்று மூடிட்டுப் போகிறான்.. இயங்காமல் இருப்பது நோய்மை.. மூடுண்ட தொழிற்கூடமே நோய்மைப்பட்ட நிறுவனமாகிறது.. திறக்காத வான்குடைதான் எமனேறும் வாகனமாகிறது.. இதழ்கள் மூடிய மலருக்குள் எப்போதும் வண்டின் குடைச்சல்.. மூடிக் கிடக்கும் வானம் அழுகிறது.. வெளிறி கிடக்கும் வானம்தான் விண்மீன்களால் ஜொலிக்கிறது.. பெருவெடிப்பே ஜீவனின் ஆதாரம்.. உறுதிறத்தலே […]

தியானம்!

தியானம்!

உன் முதல் சிரிப்பையும் முதல் அழுகையையும் ரசித்த முதல் ரசிகன் நான்!.. நித்தம் உந்தன் நினைவலையில் நீர்த்துப் போனேன் நிராயுதபாணியாய்!.. சங்குவலை கழுத்தில் சாய்ந்தாட சஞ்சிகை அவதாரம் காண்பேனோ சயனநிலையில்!.. அணிகளைந்து ஆடைகளைந்து நித்தம் எஞ்சுவதை நோக்கி ஏங்கித் திகைப்பேனா!.. கால்பிணைத்து கட்டியணைத்து காயம் பேசிடும் ஆழ்மனதின் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை… அள்ளியெடுத்து பொங்கும் அன்பின் நுரைசொல்ல முடியா உணர்வுகளை சொல்லிவிடத் துடிக்கும் தேகத்தின் தியானம்!.. ஈருருளியில் நீண்ட பயணம்மரமில்லா பொட்டல் சாலைநிழலைத் தேடும் மரவியாபாரி!

அவதானம்!

அவதானம்!

மலரிடை கொடியிடையாள் மனமதில் குடியுடையாள் தேகத்தின் ஆர்ப்பரிப்பில் தேன்பருகிட துகிலுரித்தாள் கள்வனும் கணவனாய் காத்திருப்பில் அவதானம்!..

“என்னையும் புதைத்துவிடுங்கள்”

“என்னையும் புதைத்துவிடுங்கள்”

பசுமைக் குடை பிடித்து, பகலவன் கதிர் தடுத்து, பனி கூட உருகாமல் பகலையும் குளிராக்குவேன். பசிக்கு உணவு தந்து, புசிக்கும் பழங்கள் தந்து, ருசிக்கும் எல்லாம் தந்து, தவிக்கும் நோய்க்கு மருந்தாம் மூலிகை தருவேன். காடுகரை வளர்த்து கழனி  செழிக்க கார்மேகம் தடுத்து, கண்மாய் நிறைக்கும் கனமழை தருவேன். வீட்டிற்கு நிலைக்கதவாக, விலங்கிற்கும் இரையாக, விளைச்சல் தரும் பயிராக, விறகாக, நீ வெட்டியெடுக்கும் கட்டித்தங்கம் நிலக்கரியாக, இலையாகத்  தழையாக, உரமாக, மரமாக, நீ, உயிர் வாழ உள்ளிழுக்கும் […]

சாதிப் படுகொலையும் நீதிப் படுகொலையும்!

பட்டப் பகலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த படுகொலை அது. அந்தக் கொலைக்கு எதிராக சமூகத்தின் ஒரு பகுதி கொந்தளித்த அதே வேளையில், சமூகத்தின் மற்றொரு பக்கம் அக்கொலையைக் கொண்டாடியது. நியாயம் கற்பித்தது. கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட போது சற்றும் தளராமல் போராடி, கொலைக்குக் காரணமானவர்களை விடுவித்துவிட்டது. இன்றும் இந்த சமூகத்தின் அழுகிப்போன பகுதி, தன் வெற்றியைக் கொண்டாடுகிறது. கொலையுண்டவனின் ஆன்மாவும், குடும்பமும் கொலை நடந்த நடுத்தெருவில் நீதியைத் தேடுகிறது. கொலைக்கான நியாயம் கற்பிப்பவர்கள் […]