திராவிட மாடல் – கவிதைகள்

திராவிட மாடல் – கவிதைகள்

சமத்துவம் நான் உனக்காக மாறிவிடநிறைய இருக்கின்றன நீயும் எனக்காக மாறிக்கொள்ளகொஞ்சம் இருக்கிறது ஆனால்நமக்காக மாறிக்கொள்வதில் மட்டும்கவனம் கொள்வோம் மற்றவை மாறிடினும்மாறாவிடினும் என்ன? நீ பாதி நான் பாதி என்பதில்உனக்கு நம்பிக்கை உண்டா? நீயும் முழுமைநானும் முழுமைஎன்பதே சரிஅதற்கு மாறிக் கொள்வோம் ============================ சுயமரியாதை என்னிடத்திலான உன்எதிர்பார்ப்புகளெவையும்நமுத்துப் போகாதவரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு உன் அன்றாடத் தேவைகளெதுவும்எள்ளளவும் அயர்ச்சியுறாத வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு என் சுயத்தை முற்றிலுமாய் ஒழித்துஉன் சுயத்துக்காய் நான் ஒடுங்கியிருக்கும் வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு உன் நினைவின் பின்னோடேஎன் நடை நழுவாதிருக்கும் வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு அடுப்பங்கறை தாண்டிஎன் சிந்தைகளுக்குச்சிறகு முளைக்காதவரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு கிள்ளியெடுக்கும் பூவில்வழியும் வலி யாரறிவார்?! முனை மழுங்கிப்போன என்சுயமரியாதையைப் புதைத்த இடத்தில்முளைத்து நிற்கும் சுயபச்சாதாபத்தைவேரோடு பொசுக்கிவிட்டால்உனதன்போடு பின்னிக்கொள்வதில்எந்தத் தடையும் இருக்கப்போவதில்லைஎனக்கும்

அம்மாவுக்குக் கல்யாணம்

அம்மாவுக்குக் கல்யாணம்

வேர்களாகும் விழுதுகள் – 3 “அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில குடை பிடிப்பானாம். ஆனாலும் ரெண்டாங் கல்யாணத்துக்கு இம்புட்டு ஆடம்பரம் ஆகாது”. கெட்டி மேளச் சத்தத்தை மீறி, பின்னாலிருந்து குரல் வந்தது. திரும்பிப் பார்த்தேன். மெல்லிய குரலென  நினைத்துப் பேசிக்கொண்டிருந்த பெண்கள்  அசடு வழிய சிரித்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தனர். அது ஒரு திருமண வீடு. மணப்பெண்ணின்  முதல் திருமணம் தோல்வியுற்றதால் நடைபெறும்  மறுமணம், அப்பெண்களின் வாயில் அவலாகிக் கொண்டிருந்தது. கணவனை இழந்தவர்கள், பிரிந்து வாழ்பவர்கள், மணமுறிவு பெற்று வாழ்பவர்கள், திருமணமாகாதவர்கள் என, தனித்து வாழும் கணிசமான  பெண்களால் நிரம்பிக் கிடக்கிறது  இந்தச் சமூகம். ஆனாலும்கூட, ஒரு  பெண்ணிற்கு  மறுமணம் என்பதை இன்னும்  இங்கு இயல்பாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பெண்களின்  சிறகுகளை முறிப்பதில் இதுபோன்ற  பெண்களுக்கும் பங்குண்டு. ஐ.நா.வின் ‘உலகப் பெண்களின் முன்னேற்றம் 2019 – 2020; மாறும் உலகில் குடும்பங்கள்’  என்ற தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ள அறிக்கையில், உலகிலேயே கணவனை இழந்த பெண்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. அதே நேரத்தில் இந்தியாவில்தான் மிகக்  குறைந்த அளவில் 1.3 சதவீத  விவாகரத்துகள் (1000 திருமணங்களில் 13 திருமணமே மணமுறிவு)  நடைபெறுவதாகவும் குறிப்பாக  நகர்ப்புறங்களில் மட்டுமே நிகழ்வதாகவும்  கூறுகிறது. இந்த இரண்டு முரண்களுக்குமான காரணத்தை ஆராய்ந்தால் மீண்டும் பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்ற சக்கரங்களுக்குள்ளேயே சுழல வேண்டியிருக்கும்.  இந்தியாவின் இந்த மிகக் குறைவான மணமுறிவுகளுக்கு பின்னால் இருப்பது மகிழ்வான, புரிதலான திருமண உறவா? அல்லது சமுதாய அழுத்தமா? என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியே. பில்கேட்ஸ் – மெலிண்டா இணையரின் திருமண முறிவு அறிக்கையைக்கூட  ஏற்றுக்கொள்ள முடியாமல் பொங்கும் கூட்டத்தை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. ஏனெனில், இன்றும் இங்கு விவாகரத்து  என்பது, தனி மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல் எனப் புரிந்து கொள்ளப்படாமல், வெட்கத்திற்குரியதாகவும் அவமானத்திற்குரியதாகவும், குடும்ப கௌரவமாகவும் மட்டுமே பார்க்கப்படுகிறது.  இந்தியாவின் முதல் (கணவனை இழந்த) பெண் மறுமணம் 1856 டிசம்பர் 7 ஆம் தேதி ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் முயற்சியால்  வங்கத்தில் நடைபெற்றதாக  வரலாறு கூறுகிறது. ஆனால் இன்றும்கூட கணவனை இழந்த பின்போ அல்லது மணமுறிவுக்குப் பின்போ மறுமணம்  செய்யத் தயங்கி, துவண்டு நிற்கும் பெண்களே இங்கு அதிகம். அங்கொன்றும் இங்கொன்றுமாக மறுமணங்கள் இன்று பரவலாக மனதளவில்  ஏற்றுக் கொள்ளப்பட்டாலும்கூட, ஆணின் மறுமணம் போல பெண்ணின் மறுமணம் எளிதாகக் கை கூடுவதில்லை. குறிப்பாக குழந்தையுடைய  பெண்கள்  மறுமணம் செய்யக்கூடாது என்றே உலகம் எதிர்பார்க்கின்றது. பெண் என்பவள் ஆணைச் சார்ந்தே வாழவேண்டும் என நிர்பந்திக்கும் இதே சமூகம், இணையர் இறந்து விட்டாலோ, பிரிந்து விட்டாலோ பெண் தனியாகவே வாழ்ந்து முடிக்க  வேண்டும்  என்றும் எதிர்பார்க்கிறது. குழந்தையுடன் மறுமணம் நோக்கிச் சிந்திக்கும் பெண்ணைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி, அவளை வாழ்நாளெல்லாம் காயப்படுத்திக் கொண்டேயிருக்கிறது, இன்றும்.  ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே  பெண்களின் மறுமணம் குறித்து சிந்தித்திருக்கிறார் எழுத்தாளர் சூடாமணி. இவரது ‘இரண்டாவது அப்பா’  என்ற சிறுகதை, ஏழு வயதுக் குழந்தையுடன் கணவனை இழந்த கதைநாயகி, துணிவுடன் இரண்டாம் திருமணம் முடித்து அதனை எதிர்க்கும் தன் தாயையும் ஏற்கத் தயங்கும் மகனையும் அழகாக சமாளித்து, தன்னம்பிக்கையுடன்  புது வாழ்வைத் தொடர்வதை விவரிக்கிறது. சூடாமணியின் ‘இரண்டாம் அப்பா’  காலத்திற்கும்  முன்பே  ஒலித்த  குரலாய், பெண்கள் மறுமணத்தை ஓங்கிச் சொல்கிறது. இன்றும்  பெண்ணின் மறுமணத்தை கள்ளத்திருமணம் போல் நடத்தும் பெற்றோர்களுக்கிடையே தன் மகள்   சௌந்தர்யாவின் மறுமணத்தை  ஊரறிய  நடத்தி, பொருள் பொதிந்ததாக மாற்றி,  வாழும்  உதாரணத் தந்தையாகத் திகழ்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.  இந்த சமூகத்தில் அப்பாவாக இருப்பதற்கும் அம்மாவாக இருப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. அப்பா மறுமணம் முடித்தால் ஏற்றுக் கொள்ளும் குழந்தைகளால்  அம்மாவுக்கு மறுமணம் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடிவதில்லை. காரணம், நாம் உருவாக்கி வைத்திருக்கும்  அம்மா என்ற புனித பிம்பம்.  தன் உணர்வுகளை அழித்து, குழந்தைகளுக்காகவே தங்கள் வாழ்வை  ஒப்புக் கொடுத்துவிடுபவள்தான்  தியாகத்தாய் என  செல்களில் உறைந்து கிடக்கும் அழுக்கை அகற்றினாலன்றி  பெண்ணிற்கான மறுமணங்கள் சாத்தியப்படாது. இப்படிப்பட்ட சூழலில்தான் அம்மாவிற்கும் தனிப்பட்ட வாழ்க்கை உண்டு  என்பதைப் புரிந்து, தங்கள் தாய்க்கு திருமணம் முடித்து வைத்து நம்பிக்கை வெளிச்சம் தந்திருக்கின்றனர் இரண்டு  இளைஞர்கள் தமிழகத்திலும் கேரளாவிலும். அவர் பெயர் மினி. கேரளாவில் கொல்லம் அருகில் பள்ளிமோன் என்னுமிடம். திறமையான, அன்பான ஆசிரியை. மகன் கோகுல் ஸ்ரீதர். கணவரின் கட்டளைக்கிணங்க, குழந்தைக்காக பணியை உதறிய உதாரண மங்கை.    திருமண பந்தம் சுகப்படவில்லை. தினந்தோறும் வாக்குவாதம், பிரச்சினை, சண்டை. குழந்தைக்காக கசப்பான திருமண வாழ்வை சகித்துக்கொண்டு, பூட்டிய கதவுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கானோரில் ஒருத்தியாக  வாழ்ந்தார். அப்படியான ஒரு நாளில்  தலையில் விழுந்த அடியால் இரத்தம் சொட்டச்சொட்ட நின்ற அம்மாவைப் பார்த்து பதறிய மகனிடம், “ஒண்ணுமில்லடா, அம்மா உனக்காக என்ன வேணா தாங்கிக்குவேன்” என்று சொன்ன அம்மாவின் வார்த்தைகள் தன்னைத் தூங்க விடவில்லை எனக் கூறுகிறார்  கோகுல் ஸ்ரீதர். ஏனெனில், இது போன்ற வன்முறைகள் அம்மாவின் மீது ஏவப்படுவது  முதன்முறையல்ல.  ‘உனக்காகத் தாங்குவேன்’ என்பது மினியின் வார்த்தைகள் மட்டுமல்ல. இந்தியாவின் பெரும்பான்மை அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்காகவே  எந்தத் துன்பத்தையும்  தாங்கிக் கொண்டு, திருமண பந்தத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சண்டை, சச்சரவு, பிரச்சினைகள் சூழ்ந்த சூழலில் வாழும், வளரும் குழந்தைகள் நம்பிக்கையின்மை, மன அழுத்தம், தனிமை உணர்வுடனே வாழ்வதாகக் கூறுகிறது சைல்ட் ட்ரெண்ட்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வு.  கோகுலும் அப்படியே வளர்ந்தான், வாழ்ந்தான்.  தொடர்ந்த பிரச்சினைகளுக்குப் பிறகு, தன்  அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அப்பாவின் வீட்டை விட்டு வெளியேறிய அந்தக் கணத்தில் அவருக்கென ஒரு வாழ்வை அமைத்துத் தரவேண்டும் என, தான் முடிவெடுத்ததாக கோகுல் கூறுகிறார். தனக்காக தன் தாய் இதுவரை அனுபவித்த கொடுமைகளின் முற்றுப் புள்ளியாக  மறுமணத்தை யோசித்திருக்கிறார் இந்த இளைஞர்.  “எனக்காக இவ்வளவு காலம் எல்லாவற்றையும் எதிர்த்து வாழ்ந்த அம்மா கொஞ்சம் தனக்காகவும் வாழட்டும்” என விரும்பினேன் எனக் கூறும் கோகுல், மறுமண முடிவுக்கு தன் தாயை சம்மதிக்க வைக்க, பெருமுயற்சி எடுக்க வேண்டி இருந்திருக்கிறது. தன் தாயின் பள்ளிப் பருவ நண்பன் வேணு என்பவரே வரனாக வந்தபோது இந்த மறுமணம் கைகூடியிருக்கிறது. தன் அம்மாவின் மறுமண முடிவை மற்றவர்கள் தவறாக சித்தரித்து விடக் கூடாது என்பதே கோகுலின்   கவலையாக இருந்தது. அதனால் அவரே இந்த நிகழ்வை முகநூலில் பகிர்ந்து  “அம்மாவின் இரண்டாவது திருமண முடிவை ஏற்றுக்கொண்டு, அவருக்கான மரியாதையை அளியுங்கள்” என்று கூறிய இந்த முற்போக்கு இளைஞனை சமூக வலைத்தளங்கள் கொண்டாடித் தீர்க்கின்றன. “அப்பாக்கள் மறுமணம் செய்தால் ஏற்றுக்கொள்ளும் குழந்தைகள், அதையே அம்மாக்கள்  செய்தால் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை?” என்று முடித்த  கோகுலின் நியாயமான கேள்விக்கு  இளைஞர்களே பதிலாக வேண்டும்.   தமிழ்நாட்டின் சித்தார்த்தன் கருணாநிதி எழுதியுள்ள, Right to Marry  என்ற நூலை வாசித்துவிட்டு, அவரைத் தொடர்புகொண்டு I’m proud of you என்று கூறிய என் வார்த்தைகளுக்கு கேள்விகளாலேயே சாட்டை வீசுகிறார் அவர். “இதில்  பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது? இன்றும்  இதைப் பெருமையாகப் பேசுகிறோம் என்பதே வேதனைக்குரிய விஷயமல்லவா? இது சாதாரணமான, இயல்பான ஒரு நிகழ்வாக மாற இந்தச் சமூகத்திற்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்கும்?” என்று கேள்வியால் அசரடிக்கும்  சித்தார்த், தந்தை இறந்து  பத்தாண்டுகள் கழித்து தன் அம்மா செல்விக்கு, 47 வயதில்  மறுமணம் செய்து வைத்திருக்கிறார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம், வலையாம்பட்டு என்ற கிராமத்தில் வறுமையில் சுழன்ற குடும்பம் அது. 2009-ல் கணவர் இறந்துவிட,  கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்த சித்தார்த் கருணாநிதி, பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மகிழ்னன்  என்ற இரு மகன்களோடு, வறுமையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார் செல்வி அம்மாள்.  இளம் வயதில் கணவனை இழந்த பெண்கள் படும் அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்தார்.   வழக்கமான தமிழ் அம்மாவாக தன் ஆசாபாசங்களைத் தள்ளிவைத்து, தன் பிள்ளைகளின் படிப்பிற்காக உழைத்துத்  தேய்ந்தார். மகன்கள் இருவரும் படித்து, வேலை தேடி, நகரம் நோக்கி நகர்ந்துவிட தனிமை அவரைத் தின்றது.  நல்லகாலம்,  சராசரி மகன்களாய் இல்லாமல், இருவரும் தாயின் வலியை உணர்ந்து கொண்டனர். சித்தார்த், தன் தம்பியோடு கலந்தாலோசித்து அம்மாவுக்கு மறுமணம் செய்யும் முடிவைக் கையிலெடுத்தார். ஆனால் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் சமூகத்தின் கட்டமைப்பு குறித்தும் கவலைப்பட்ட செல்வி அம்மாள் மறுத்து ஒதுங்கினார். மனம் தளரவில்லை சித்தார்த்தன். 2017 ல் ஆரம்பித்த பேச்சுவார்த்தை, நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்தது. இறுதியில் பிள்ளைகளே வென்றனர்.  அருகிலுள்ள சூலாங்குறிச்சியில் மறுமணம் முடிய, இன்று குடும்பமுமே உற்சாகத்தில். “பத்தாண்டுகளுக்கு முன்பே எனது ஆசிரியர் ஒருவர் அம்மாவின் மறுமணம் குறித்து என்னிடம் பேசியபோது அருவெறுப்பாக இருந்தது. ஆனால் நானும் காதலித்து,  பிரிவு நேரிட்டபோதுதான், அம்மாவிற்கு மறுமணம் தேவை என்பதை உணர்ந்தேன்” என்கிறார்  கோவையில் ஆங்கில மொழிப் பயிற்றுனராக இருக்கும் சித்தார்த் கருணாநிதி.  “ஆணோ, பெண்ணோ இணையரில் ஒருவர்  இறந்து விட்டால் சிறிது காலம் எடுத்துக் கொண்டு மீண்டும் மணம் புரிவதில் என்ன தவறு?”  என்று அவர் கேட்கும் கேள்வியின் நியாயத்தை ஆண்கள், பெண்கள் அத்தனை பேரும் உணர வேண்டிய தருணமிது. “நான் கணவரை இழந்து தனியாக இருந்தபோது உதவி கேட்டு எந்த ஆண்களிடமாவது பேசினால் கூட, என்னைத் தவறாகப் பேசியவர்கள், நான் மறுமணம் முடித்த பிறகு என்னை அவ்வாறு பேசுவதில்லை. என் மீதான அவர்கள் பார்வை மாறியிருக்கிறது” என மகிழ்ச்சியோடு கூறும் செல்வி அம்மாளின் வார்த்தைகளிலுள்ள மற்றொரு கோணம் பெண்கள் மறுமணத்திற்கு வலுசேர்க்கிறது. இந்தியாவில் 1.36 மில்லியன் பேர்   விவாகரத்தானவர்கள் என்றும், 40 மில்லியன் பெண்கள் கணவரை இழந்தவர்கள் என்றும் 2016-ல் வெளியான BBC  அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, தனித்து வாழும் ஆண்களை விட, தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகம்.  முறிந்து  போகும் திருமண பந்தங்களிலும், முடிந்துபோன திருமண வாழ்க்கையிலும் தோற்றுப் போய்விட்டோம் என்று எண்ணாமல் மீண்டும் ஒரு வாழ்வை ஏற்றுக்கொள்ள பெண்கள் முன்வர வேண்டும். புராதனச் சிந்தனைகளைத் தூக்கிக்கொண்டு, தனிமையில்  உழலாமல், விருப்பமான வாழ்வை அமைத்துக் கொள்வதில் தவறேதுமில்லை.   ஊர்