மனிதன் தெய்வமாகும் தருணம்

தேசிய மருத்துவர்கள் தினம்: ஜூலை 1 – பி.சி.ராய் பிறந்த தினம் உலகில் இறைவனுக்கு இணையாக மதிக்கப்படும் ஒருவர் உண்டு என்றால் அவர்கள் மருத்துவர்கள்தான். அவர்களைப் போற்றிப் பாராட்டி வாழ்த்தும் விதமாக ஆண்டு தோறும் ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctor’s Day) கொண்டாடப்படுகிறது. மாபெரும் மருத்துவ மேதையும், மேற்கு வங்க மாநிலத்தின் 2- வது முதல்வர் என்ற பெருமைக்குரியவருமான மறைந்த டாக்டர் பிதான் சந்திர ராய் (பி.சி. ராய்) அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளான ஜூலை முதல் தேதி, தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு இடங்களில் பல்லாயிரம் உயிர்களை மருத்துவர்கள் காப்பாற்றி வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பரவல் காலத்தில், கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் கடமையையும் பொறுப்பையும் மருத்துவர்கள் செவ்வனே செய்ததன் பலனாகவே இப்போது நாம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளோம். மரணத்தைத் தள்ளிப்போடும் மருத்துவர்களுக்கு நன்றி சொல்வது நமது கடமையாகும். தேசிய மருத்துவர்கள் தினத்தில் அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக, கவிஞர் பிருந்தா சாரதி எழுதியுள்ள கவிதை: முன்களப் போராளிகளுக்கு இதயம் துடிக்கிறதுஅதற்கு யாரும் தினசரிநன்றி சொல்வதில்லை ரத்த ஓட்டம் நிகழ்கிறதுஅதற்கு எவரும் ஒவ்வொரு நாளும்வணக்கம் சொல்வதில்லை சுவாசம் நடக்கிறதுஅதனை யாரும்நொடிதோறும் தொழுவதில்லை ஒவ்வொரு உறுப்பும்உயிரின் இயக்கத்திற்குஆதாரமாகத்தான் இருக்கிறதுஅவை எல்லாவற்றையும் நாம்ஒவ்வொரு நிமிடமும்நன்றியோடு சிந்திப்பதில்லை ஆனால் இவற்றில் ஏதாவது ஒன்றுசிறு வேலை நிறுத்தம் செய்தாலும்கூடஉடனே நாம் நாடுவதுஒரு மருத்துவரைத்தான் ‘டாக்டர், எப்படியாவதுஇந்த உசுர காப்பாத்திருங்க’என்று ஒவ்வொரு நாளும்எங்காவது ஒரு குரல்கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருக்கிறது மருத்துவமனைகள்ஆலயமாகும் கணம் அது ‘டாக்டர் நீங்க கடவுள் மாதிரி’என்றுஏதாவது ஒரு இதயம்நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறது மனிதன்தெய்வமாகும் தருணம் அது முன்கள வீரர்கள் என்றுகொரோனா காலத்தில் போற்றப்பட்டவர்கள்,போற்றப்படுபவர்கள் மருத்துவர்கள் அவர்களுக்கு ஒரு நாள்நாம் நன்றி சொல்லும் நாள்அது இந்நாள் மருத்துவர்கள் நாளான இன்றுஉலகெங்கும் சேவை மனப்பான்மையுடன்செயலாற்றும் மருத்துவர்கள்அனைவரையும் வணங்குகிறேன்…🙏வாழ்த்துகிறேன் 💐 பிருந்தா சாரதி