வன்மம் களைந்த மெய்
கவிதைகள் மயில் குட்டி ஒளியை உள் வாங்கியமகிழ்வுந்தின் கண்ணாடியொன்றுகம்பி மயிலுக்குக் கதவு திறந்திடஅது கருக்கொண்டுவெண்சுவரில் பிரதிபலித்தாடுகிறது அது கண்டுசிறு திடலென மேடு கண்டதன் வயிற்றில் குறுகுறுத்தகுட்டி மயிலை விரல் பூசிவண்ணம் செய்கிறாள்தோகதவதி வன்மம் களைந்த மெய் மொழி தவிர்த்த துக்கம்சில உடைந்துவெளிக்கொணராமல் இருக்கஇறுகிய குரல்வளைகயிற்றை அறுத்தெறியதேவையாக ஒருகுளியலறை கிட்டியது பொதுபொதுவெனக் கொட்டியநீர் தாங்கிய குழாயினைத்திறக்கும் ஓசையில்அடித்துச் செல்லப்பட்டவிழி நீரும்உடைந்த வார்த்தைகளும்‘ஓ’வெனச் சிதறியமன இரைச்சலும் மறுசுழற்சி செய்த பின்ஒரு குளிர் தேகம்வெற்றுடலுடன் கடந்து வருகிறதுவன்மத்தை வாழைக்காய்ப் படகோட்டி வியாழக்கிழமைச் சந்தையில்அப்பாபச்சை நிறப் படகுஒன்று வாங்கி வந்தார் அது அண்டா தண்ணியில்பத்திரமாக இறக்கப்பட்டதுநிசப்தத்தில் அதுஒரே இடத்தில் நிலைகொண்டது செம்பு கொண்டுஅம்மா நீரெடுக்கையில்அலை மோதி அவள்கை தொட்டது அதை விரலால் குத்திமூழ்கச் செய்து பார்த்தான்அண்ணன் அன்றிரவு என் கனவில்ஆளில்லாப் படகில் நான்ஏறிக்கொண்டேன் அது குதித்துக் குதித்து இப்போதுஒரு சுறா மீன் ஆனது இறுகப் பற்றிக்கொண்டுநீர் சூழப் பயணித்தேன்படாரென்றுபத்துத் தலைப் பாம்பாகியது வாலைப் பிடித்துசறுக்கு மரம் போல் ஏறினேன்உந்தி ஏறுகையில்கடற்குதிரையானது வசமான முதுகு இல்லாததால்அதன் பிடரி சதையைப்பிடித்திழுத்தேன்பிடியகல விடாததால் அதுஎனையொரு பெருங்கடலில்இறக்க நினைத்தது போகும் நதிகடல் சேரும் முன்கை மாற்றப்பட்டதுஇப்போது என் சாயலில்ஒரு யுவதி அதை இயக்கிவீட்டுப் பாத்திரத்தில் போடுகிறாள்கரத் துடுப்பு