வன்மம் களைந்த மெய்

வன்மம் களைந்த மெய்

கவிதைகள் மயில் குட்டி ஒளியை உள் வாங்கியமகிழ்வுந்தின் கண்ணாடியொன்றுகம்பி மயிலுக்குக் கதவு திறந்திடஅது கருக்கொண்டுவெண்சுவரில் பிரதிபலித்தாடுகிறது அது கண்டுசிறு திடலென மேடு கண்டதன் வயிற்றில் குறுகுறுத்தகுட்டி மயிலை விரல் பூசிவண்ணம் செய்கிறாள்தோகதவதி வன்மம் களைந்த மெய் மொழி தவிர்த்த துக்கம்சில உடைந்துவெளிக்கொணராமல் இருக்கஇறுகிய குரல்வளைகயிற்றை அறுத்தெறியதேவையாக ஒருகுளியலறை கிட்டியது பொதுபொதுவெனக் கொட்டியநீர் தாங்கிய குழாயினைத்திறக்கும் ஓசையில்அடித்துச் செல்லப்பட்டவிழி நீரும்உடைந்த வார்த்தைகளும்‘ஓ’வெனச் சிதறியமன இரைச்சலும் மறுசுழற்சி செய்த பின்ஒரு குளிர் தேகம்வெற்றுடலுடன் கடந்து வருகிறதுவன்மத்தை வாழைக்காய்ப் படகோட்டி வியாழக்கிழமைச் சந்தையில்அப்பாபச்சை நிறப் படகுஒன்று வாங்கி வந்தார் அது அண்டா தண்ணியில்பத்திரமாக இறக்கப்பட்டதுநிசப்தத்தில் அதுஒரே இடத்தில் நிலைகொண்டது செம்பு கொண்டுஅம்மா நீரெடுக்கையில்அலை மோதி அவள்கை தொட்டது அதை விரலால் குத்திமூழ்கச் செய்து பார்த்தான்அண்ணன் அன்றிரவு என் கனவில்ஆளில்லாப் படகில் நான்ஏறிக்கொண்டேன் அது குதித்துக் குதித்து இப்போதுஒரு சுறா மீன் ஆனது இறுகப் பற்றிக்கொண்டுநீர் சூழப் பயணித்தேன்படாரென்றுபத்துத் தலைப் பாம்பாகியது வாலைப் பிடித்துசறுக்கு மரம் போல் ஏறினேன்உந்தி ஏறுகையில்கடற்குதிரையானது வசமான முதுகு இல்லாததால்அதன் பிடரி சதையைப்பிடித்திழுத்தேன்பிடியகல விடாததால் அதுஎனையொரு பெருங்கடலில்இறக்க நினைத்தது போகும் நதிகடல் சேரும் முன்கை மாற்றப்பட்டதுஇப்போது என் சாயலில்ஒரு யுவதி அதை இயக்கிவீட்டுப் பாத்திரத்தில் போடுகிறாள்கரத் துடுப்பு

கரையற்ற நீர் – நூல் அறிமுகம்

கரையற்ற நீர் – நூல் அறிமுகம்

காதலையும் சமூக அக்கறையையும் கரைகளாகக் கொண்ட தீராநதி கவிஞர் சூரியதாஸின் ‘கரையற்ற நீர்’. இரண்டு பகுதிகளை கொண்ட இக்கவிதைத தொகுப்பின் முதல் பகுதி சமூகத்திற்கானதும் ஒவ்வொரு மனிதனுக்குமான உணர்வுக் குவியலும். இரண்டாம் பகுதி தனக்கே தனக்கெனக் கொள்ளும் காதலைச் சொல்லும் குட்டிக் குட்டி நட்சத்திரக் கவிதைகள். சமப்ர்பணத்தில் ‘கவிதைப் ப்ரியர்களுக்கும்’ எனக் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. இக்கவிதைத் தொகுப்பை எல்லோருக்குமானதாகவே கொள்ளலாம். உதிரி மல்லிகையைச் சுமந்துகொண்டு அந்தத் தெருவின் வீடுகளையெல்லாம் வாசத்தால் கோர்க்கும் பூக்காரியின் வாசமிகு கவிதையில் ஆரம்பமாகும் கரையற்ற நீரின் பயணம், ‘மலம் தின்ன வைக்கும் சாமியை விட சோறுண்ண வைக்கும் பூச்சாண்டி மேல்’ எனச் செல்வது நெகிழ்வு. ‘கோடிட்ட இடத்தின் மீதுநீட்டிப் படுத்திருக்கிறான் நியூட்டன்ஒரே ஒரு மதிப்பெண்ணுக்காக’என்ற கவிதை இன்றைய கல்வி முறை கேள்வி பதில்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைச் சொல்கிறது. கவிஞரின் அரசியல் சாடல் அலாதியானது. அக்கவிதைகளில் உடனிருக்கும் பகடி சமூக அக்கறை கொண்டது. எடுத்துக்காட்டிற்கு சில கவிதைகள்: ‘யார் வந்தாலும் குரைத்து எச்சரித்து அனுப்புகிறதுதிருடன் உள்ளே படுத்திருக்கிறானென்றுஅமைச்சர் வீட்டு நாய்’ ‘தெய்வம் ஒளிந்து கொண்டதுசாமி கும்பிட வருகிறார்அமைச்சர்’ காதலியின் இதழ் புன்னகை இழைகளால் தூக்கணாங்குருவிக் கூடு கட்ட முற்படும் கவிஞர்,‘உன்னைப் பார்த்ததும் முதலில்ஆச்சர்யக்குறி இட்டுவிட்டேன்அப்புறம்தான் கவிதையே எழுத ஆரம்பித்தேன்’என்று குறிப்பிடும் மோகத்தில் வார்க்கப்பட்ட காதல் நம்மையும் மயக்கத்தான் செய்கிறது. ‘முதன்முதலாக நாம் சந்தித்தபொழுது பருகியமுதல் கோப்பை தேநீருக்குமது என்று பெயர்’போதை தரும் துளியிது. ‘தெய்வத்தை வாசலில் பார்த்தேன்தேவதையை வரவேற்கநீ கோவிலுக்கு வருகிறாய்’எனும் வரிகள் காதலிக்கான அதிகபட்ச ஆராதனை. யானையைப் பற்றியான ஒரு கவிதையை மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்திருப்பது ஒரு கவிஞருக்குச் செய்யும் ஆகச்சிறந்த மரியாதை. வாழ்த்துகள் மொழிபெயர்த்தவர்களுக்கும். இது கரையற்ற நீர் மட்டுமல்ல; கறையற்ற நீரும் கூட. இதில் யாவரும் மூழ்கித் திளைக்கலாம். முகிழ்ந்து முத்தெடுக்கலாம். சமூகம் ஒதுக்காது காதல் செதுக்கிக் கவிதை படைத்த கவிஞருக்கு வாழ்த்துகள். வாசுகி தேவராஜ்