காவியக் கலை
கவிஞர் பொன்மணிதாசன் கவிதை புன்னகை யொளியில் பூத்தநல் என்னை சிலிர்ப்பாக்கும் – அவள்கண்ணடி காணும் கவிதை மொழியோகண்களை விரிவாக்கும்! விரிகுடை போலிரு விற்புரு இரண்டுவிழியிடம் கடன்கேட்கும் – நான்சொரிகிற பார்வை சூட்சம மறிந்துசூடும் நாணமதுவாக்கும்! கரைய மறந்த கார்முகில் குழலதுகாலை தான்நோக்கும் – என்விரல்சிறைபடச் செய்த சிகையின் அழகுசேர்த்தநல் வலையாக்கும்! வரைய இருந்த வனப்புறு அழகின்வடிவம் அவளாக்கும் -நான்நிறைய நிறைய நினைத்த வண்ணநித்திலப் பூவாக்கும்! உண்டு உருண்டு உதடுகள் உலரஉணர்வுகள் உசுப்பேத்தும் – தேனில்வண்டு விழுந்த வகையென் மனதுவழிதொட கொதிப்பேத்தும்! கண்டு நெருங்கி கலப்பது காவியகலையில் ஒன்றாக்கும் – அவளைக்கொண்டு குலவி கொஞ்சும் வேளைகுமணன் நானாக்கும்! பொன்மணிதாசன்