வலிகள்
கவிதைகள் பிரிவு மிகவும் ரசித்துத்தான்எழுதிக்கொண்டிருக்கிறேன்நம் பிரிவையும் இணைந்திருந்தஇனிப்புத் தருணம் பரிசளித்தஅதே அடிவயிற்றுச் சில்லிடல்இதிலும் நேர்கிறது இதயம் படபடக்கஉடலெங்கும் அதிவேகமாய்ஓடிய புதுக்குருதிஇப்போதும் பாய்கிறது சொற்களற்றுத் தடுமாறிகண்களால் மட்டும்பேச முடிந்தது போலவேஇப்போதும் நடக்கிறது மழைநாளின் சிறு தூறல்நாம் ஒன்றென உறுதி சொல்லிஆசிர்வதித்தது போன்றேநாம் வேறுவேறெனச் சொல்லவும்சாரலை அனுப்பியுள்ளது இயற்கை எனக்குள் இறங்கிய உன்னையும்உனக்குள் புதைந்த என்னையும் மட்டுமேகாணவில்லை என்பதைத் தவிரபிரிவுக்கும் இணைவிற்கும்பெரிதாய் ஒன்றும் வித்தியாசமில்லைதானே? கற்கள் காலம் வாழ்வை அகழ்ந்தெடுத்துசந்தோஷங்களை சலித்துப்பிரித்தெடுக்க முயல்கிறதுஒரு கூட்டம் வறண்ட எண்ணங்களைக்குழைத்தெடுக்கவெனஎப்போதாவது வரமாய் வாய்க்கிறதுஒரு காதலும் சிறு கூடலும் அவ்வப்போது கிடைக்கும்தேநீரின் சுவையைநேர்த்தியான துண்டுகளாக்கிஅடுக்கிவிட இயலுகிறதுஅவர்களால் கிளர்ந்தெழும் ஆசைகளைவெயிலில் இட்டுஇறுகச் செய்துவிடமனம் வாய்த்திருக்கிறது மொத்தத்தில் சூளையில் இட்டுஇவர்கள் சுட்டெடுப்பதுசெங்கற்களோடு சேர்த்துசொந்த ஊர் நினைவுகளையும்தான் சொற்களின் வலி என்ன சொல்லாடல்கள்எதிர்பார்க்கிறாய்என் கவிதையில் பசித்துக் கிடக்கும் வயிறுகள்தவித்து நிற்கும் அகதிகள்கொதித்து எரியும் போர்முனைஉடல்கள் ஒதுங்கும் கடற்கரைஒருமுறை கண்டு வா வார்த்தைகளற்றுப்போய்தொண்டை அடைக்கநெஞ்சில் உருளும் பாறை நசுக்கிவெளிவரும் சொற்களில்ரத்தக் கவுச்சியன்றிபன்னீரின் மணமாமுகரக் கிடைக்கும்?