வலிகள்

வலிகள்

கவிதைகள் பிரிவு மிகவும் ரசித்துத்தான்எழுதிக்கொண்டிருக்கிறேன்நம் பிரிவையும் இணைந்திருந்தஇனிப்புத் தருணம் பரிசளித்தஅதே அடிவயிற்றுச் சில்லிடல்இதிலும் நேர்கிறது இதயம் படபடக்கஉடலெங்கும் அதிவேகமாய்ஓடிய புதுக்குருதிஇப்போதும் பாய்கிறது சொற்களற்றுத் தடுமாறிகண்களால் மட்டும்பேச முடிந்தது போலவேஇப்போதும் நடக்கிறது மழைநாளின் சிறு தூறல்நாம் ஒன்றென உறுதி சொல்லிஆசிர்வதித்தது போன்றேநாம் வேறுவேறெனச் சொல்லவும்சாரலை அனுப்பியுள்ளது இயற்கை எனக்குள் இறங்கிய உன்னையும்உனக்குள் புதைந்த என்னையும் மட்டுமேகாணவில்லை என்பதைத் தவிரபிரிவுக்கும் இணைவிற்கும்பெரிதாய் ஒன்றும் வித்தியாசமில்லைதானே? கற்கள் காலம் வாழ்வை அகழ்ந்தெடுத்துசந்தோஷங்களை சலித்துப்பிரித்தெடுக்க முயல்கிறதுஒரு கூட்டம் வறண்ட எண்ணங்களைக்குழைத்தெடுக்கவெனஎப்போதாவது வரமாய் வாய்க்கிறதுஒரு காதலும் சிறு கூடலும் அவ்வப்போது கிடைக்கும்தேநீரின் சுவையைநேர்த்தியான துண்டுகளாக்கிஅடுக்கிவிட இயலுகிறதுஅவர்களால் கிளர்ந்தெழும் ஆசைகளைவெயிலில் இட்டுஇறுகச் செய்துவிடமனம் வாய்த்திருக்கிறது மொத்தத்தில் சூளையில் இட்டுஇவர்கள் சுட்டெடுப்பதுசெங்கற்களோடு சேர்த்துசொந்த ஊர் நினைவுகளையும்தான் சொற்களின் வலி என்ன சொல்லாடல்கள்எதிர்பார்க்கிறாய்என் கவிதையில் பசித்துக் கிடக்கும் வயிறுகள்தவித்து நிற்கும் அகதிகள்கொதித்து எரியும் போர்முனைஉடல்கள் ஒதுங்கும் கடற்கரைஒருமுறை கண்டு வா வார்த்தைகளற்றுப்போய்தொண்டை அடைக்கநெஞ்சில் உருளும் பாறை நசுக்கிவெளிவரும் சொற்களில்ரத்தக் கவுச்சியன்றிபன்னீரின் மணமாமுகரக் கிடைக்கும்?

அடிக்கும்போதும் வராத அப்பா

அடிக்கும்போதும் வராத அப்பா

‘அப்பனை முழுங்கின சனியன்’ என்றுபாட்டி திட்டும்போதெல்லாம்என் தோழிகளின் அப்பாக்களைநினைவு கூர்வேன்அவ்வளவு உயரமாக இருக்கும் அப்பாவைநான் எப்படி விழுங்க முடியும் என்றுபுரியாமல் விழித்துவிட்டுபாட்டியிடம் கேட்டிருக்கிறேன்சிலசமயம் பாட்டி அடிப்பதுண்டுசிலசமயம் அலுப்பதுண்டுசிலசமயம் என்னை அடித்துவிட்டுஅவளும் அழுவாள்ஆனால் நான் எப்போதும்அப்பா என்றுதான் அழுதிருக்கிறேன்அப்பா என்று சொல்லி அழதே என்றுமேலும் அடித்திருக்கிறாள் பாட்டிஆனால் ஒருமுறைகூடஅப்பா வந்ததே இல்லை. பவித்ரா பாண்டியராஜூ

ஈசனின் நிர்வாணம்

ஈசனின் நிர்வாணம்

ஏதோவொரு தெருக்கூத்து நாடகத்தை போலஇந்த சூரியப்பகலில் நடந்துக் கொண்டிருக்கிறேன் ஈசனின் நிர்வாணத்தை மறைக்கும்சாம்பலின் நிறத்தில்எங்கோ எரியும் காட்டுத்தீயின் புகையைமேகமாக்கி என்னிடம் இழுத்து வருகிறாய் சலங்கை கட்டி ஆடும் கிளைகளும்தூரத்து மண் வாசமும்கொல்லையில் ஓயாது கத்தும் கன்றும்ரசனையற்றவளின் கண்களில் காட்சிகளாய் விரிக்கிறாய் பிணத்திற்கு முன்னால் ஓங்கி ஓங்கிஒப்பாரி வைக்கும்ரேடியோ பெட்டியைப்போலகேட்பாரற்று ஓரமாய் கிடக்கிறேன் அனுமானங்களை என்னுள் நிரப்பிவெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு வியர்வையை துளிர்க்க விடுகிறாய் முதிர்கன்னியின் மரணத்திற்குவயிற்றுவலிப் புனைக்கதைக் கேட்கும்பிணத்தைப் போலநடுவீதியில் படுத்துறங்கும் என்னுள்ளே வீசுகிறதுமரணத்திற்கான சிறு ஓலம். பவித்ரா பாண்டியராஜு