மயிலை சீனி எனும் தமிழ்த் தேனீ

வாழ்நாள் முழுதும் வரலாற்றைத் தேடியமயிலையின் வானம்பாடிஆழ்ந்த தமிழ்ஞானிஆனால் படிக்கவில்லை பள்ளிதாண்டி கோயில் வரலாறெனில் அதன் கொடி வரலாறாய் விரியும்சமய வரலாறெனில் தத்துவமும் குடைபிடிக்கும்பண்பாட்டைச் சொல்லவந்தால் பயன்பாடும் சேர்ந்துவரும்மொழியின் வரலாறென்றால் மூதறிஞரும் முகமன் சொல்வார் அதனால்தான்பாரதிதாசன் இப்படி அறையலுற்றார் ‘தமிழையே வணிகமாக்கித்தன்வீடு மக்கள் சுற்றம்தமிழிலே பிழைப்பதற்குதலைமுறை தலைமுறைக்குத்தமிழ்முதலாக்கிக் கொண்டபல்கலைத் தலைவன் எல்லாம்தமிழ்ச் சீனி வேங்கடத்தின்கால் தூசும் பெறாதென்பேன்’ மொழிக்கு சமயங்களின் கொடைகளைமுத்தான பலநூல் வழி மொழிந்ததெல்லாம்மொழிச் சரிதம் படிப்போருக்கு முழுநிலவாய்க் கூடவரும் ‘கிறித்துவமும் தமிழும்’ அவர் எழுதிய முதல்நூலாம்பொறிவாயில் ஐந்தவித்த புத்தனைப் பின்தொடர்ந்த‘பௌத்தமும் தமிழும்’ அடுத்து வந்தது‘சமணமும் தமிழும்’ ‘இசுலாமும் தமிழும்’‘இந்துமதமும் தமிழும்’ என்றெல்லாம்சமயத்தோடு மொழிவரலாற்றைச் சேர்த்து எழுதினார் அழகர் கோவில் வரலாறு எழுதப் புகுந்தஅறிஞர் தொ.பரமசிவன்மயிலை வேங்கடத்தின் ஆய்வையேமுதற்புள்ளியாகக் கொண்டார் தரவில்லாமல் இருண்டிருந்த களப்பிரர் வரலாற்றைஇலக்கிய வெளிச்சத்தில் கரம்பிடித்து அழைத்து வந்தார்பல்லவ மன்னர்கள் வரலாற்றைப்பலநூல்களாய் எழுதித் தந்தார் மகாபலி புரத்தை மாமல்லபுரம் என்றுகண்டுதமிழர் மனதில் மகிழ்ச்சி பெய்தார்மகேந்திரப் பல்லவனின் மத்த விலாச அங்கதத்தைதமிழில் தந்தவரும் மனோன்மணியத்தைபதிப்பு செய்தவரும் மயிலையார்தான் நுண்ணிய கலை ஆய்வும் அவரே தொடங்கிவைத்தார்சங்க கால வரலாறு தொட்டுசமகால இலக்கிய வரலாறு வரைமயிலை சீனி வேங்கடசாமியின் கொடை உண்டு கல்வெட்டு ஆய்வுக்கும் செப்பேட்டு ஆய்வுக்கும்சொல்வெட்டுச் செய்த மயிலை சீனி வேங்கடசாமிக்குசூலை எட்டில் நினைவு தினம் தமிழைக் கொண்டாடுமுகத்தான்தமிழ்த் தேனீயை அறிந்து போற்றுவோம் கோமதி சங்கர்