நாற்பத்தேழு

நாற்பத்தேழு

1947 எழுபத்தைந்தைக் கடந்த வயதெனக்கு யுத்த மகள் என்பார்கள் என்னை பெரிய யுத்தத்திற்குப் பின்னால் நானும்எங்கள் சேக்காளிகளும் பிறந்தோம்பிறந்ததும் எங்களைச் சொந்தம் கொள்ளஆலை அதிபர்களுக்கும் பண்ணையார்களுக்கும்கொள்ளை ஆசை 1948 எனக்கும் வயதாகிவிட்டதுபிறக்கும்போது சவலைப் பிள்ளையாக இருந்தாலும்இப்போது கொழுத்துத் திரிகிறேன்இப்போதெனக்குத் தோழர்கள் அதிகம்என்னை அன்று சவலை ஆக்கமுயன்றவர்களை எல்லாம்இல்லாமல் ஆக்கியோஅல்லது கூட்டாளி ஆக்கியோநான் ஊதி இருக்கிறேன் 1950 நான் நாற்பத்தேழுக்கும் நாற்பத்தெட்டுக்கும் இளையவள்தான்என்னை ஜனநாயகத்தின் மகள் என்றார்கள்சமதர்மத்தின் தங்கை என்றும் சொல்லி மகிழந்தார்கள்நானும் – என்னைக் கொஞ்சியகோடானுகோடி பங்காளிகளும்பூரித்துப் […]

மார்க்ஸின் கனவும் சிம்போர்ஸ்காவின் கவிதையும்

மார்க்ஸின் கனவும் சிம்போர்ஸ்காவின் கவிதையும்

கவிதை என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அபத்தமான பதில்கள் அளிக்கப்பட்டுவிட்டன. எனக்குத் தெரியாதெனினும் உயிரின் கீற்றினைப் போல் நான் இறுகப் பற்றியுள்ளேன். என் சகோதரியின் கணவரும், கவிதை எழுதுவதைவிட செத்துப்போவதையே விரும்புவார். இது ஏற்கனவே இருக்கும் ஒரு கவிதை போல எனக்குத் தோன்றுகிறது. எனது சொந்தக்காரர்கள் கவிதை எழுதுவதில்லை. கவிதை எழுதாமல் இருக்கும் அபத்தத்தைப் போக்கத்தான் நான் கவிதை எழுதும் அபத்ததத்தைச் செய்கிறேன் – விஸ்லாவா சிம்போர்ஸ்கா கவிஞர் விஸ்லாவா சிம்போர்ஸ்கா, 1923ஆம் ஆண்டு […]

பின்னப்பட்ட எண்ணங்கள்

பின்னப்பட்ட எண்ணங்கள்

நிகழ்வுகளின் நெளிவுசுழிவுகள்மூளைக்குள் பின்னப்பட்டுசொற்களாய் உருமாறிஇதழ்வழி உதிருமெனஎதிர்பார்க்கப்பட்ட நிலையில்நீருக்குள் புதைக்கப்பட்டமீள் ஒலியாய்குமிழ்களாகவே வெளிப்பட்டுகாற்றில் காணாமல் போகின்றன ரணங்களுக்கு மருந்திடாக் காலம்பின்னப்பட்ட எண்ணங்களைச்சுமந்திருக்கும் சுவர்களுக்குத்தலைகோதிவிட கைகளைத் தராததுஜென்ம சாபல்யம் என்றேஅதன்மீது ஊர்ந்து செல்லும் சிலந்திபரிதாபமுரைத்துச் செல்கிறது நிலவின் கறைகள் போலஆண்டாண்டாய் உள்ளூறக் குமைந்துநிஜத்தைப் பொலிவிழக்கச் செய்யும்நஞ்சூறிய சொற்களை உதிர்த்துஎம்மனதையும் மரணிக்கச் செய்திடாதுஅச்சுவர்களைத் தவிக்கவிட்டுப் பறந்ததுபெருமூச்சொன்று பேரண்டம் தேடி

நித்தியத் தேவை

நித்தியத் தேவை

கவிதைகள் நித்தக் கோடி மூச்சுமுட்டும் நெருக்கடியில்சேமிப்பைத் திரட்டிய களைப்போடுவிதவிதமான காரணங்கள் சுமந்துதிரள்கிறது கூட்டம் எப்போதும் வரம்பெல்லைக்கு உட்படாமலேகையில் வந்து சேர்கிறதுமானம் மறைக்கக் கண்டுபிடிக்கப்பட்டஆடம்பரம் துண்டு விழும் பணத்தைஎதில் சரிக்கட்டுவதென்ற யோசனையானதுமழுப்பித் திணிக்கப்படுகிறதுகட்டைப் பைகளுக்குள் வெளியே வரும்போதுபொறாமையோடு திரும்பிப்பார்க்க வைக்கின்றனதினமொரு புத்தாடையுடுத்தும்ஜவுளிக்கடை பொம்மைகள் தேவை உங்கள் இருப்பை மீறியாராவது ஏங்கினால்உடனே விட்டுக்கொடுத்துவிடுங்கள் கசியும் விழிநீரையாரும் அறியாதபடிதுடைத்துக் கொள்ள சிறிது நேரமேனும்சுதந்திரக் காற்றைச்சுவாசிக்க அருகில் கடக்கும்பேருந்திலிருந்து வரும்எதிர்பாராத சிறு புன்னகையைத்தரிசிக்க வயிற்றுவலியை முகபாவத்தில்பிறரறியாவண்ணம்மறைத்துக்கொள்ள பழைய காதலைபயணப் பொழுதுகளில் அசைபோட்டுஉயிர்த்திருக்க தேவைப்படலாம்அவர்களுக்கு […]

செவ்வகக் கூண்டு

செவ்வகக் கூண்டு

கவிதை அடைத்து வைக்கத் தோதானசதுர வடிவத் தர்ப்பூசணிகள்தம் இடம் தாண்டிபெட்டியின் மூலைகளைச் சுவாசிக்கஇடம் கேட்டு நச்சரிப்பதில்லை இதய வடிவத் திராட்சைகள்ஏற்கனவே ஏற்றிருந்தகோள வடிவை நீங்கியதில்ஏதொரு பதட்டமுமின்றித்தான்காற்றிலாடுகின்றன குண்டுக் கத்தரிக்காய்கள்புடலங்காயைப் பிரதியெடுத்ததில்குட்டையாகிப் போனதுகல் கட்டும் காய் மென்தோல் தக்காளிகள்வன்முறைக்கு மாறிவெகுநாட்களாயிற்று மெழுகிட்ட ஆப்பிள்ஆறு மாதமாய் அழுகாமலிருப்பது கண்டுகடித்துப் பார்க்கும் ஆசைகடவுளுக்கே வருகிறது ஒட்டுருவாக்கத்தில்குயில் முட்டையெனஆரஞ்சையும் ஏற்கிறதுமாமரம் வயலோரங்களில் குலுங்கிக் கிடந்தநினைவு மறந்துபாக்கெட்டுகளில் தஞ்சமடையத்தயாராகவே இருக்கின்றனஹைபிரிட்டில் சுட்ட பழங்கள் வெட்டி ஒட்டும் கலையில் தேறியசிற்றினம் ஒன்றின்மொத்த வாழ்வையும்செவ்வகத்துக்குள் அடக்கிச்சிரிக்கிறது இயற்கை

நெருப்பைத் துளையிட முயலும் புழுக்கள்

நெருப்பைத் துளையிட முயலும் புழுக்கள்

கவிதை நீள் சன்மார்க்க வெண் தந்தம்வண்ணத்துப் பூச்சிகளுக்குவளைந்துகொடுப்பதைக் கண்டுஉங்கள் எண்ணப் புழுக்களால்துளையிட்டு நுழைய முயல்கிறீர்கள் நெருப்பைத் துளையிடபுழுக்களால் முடியுமோ? சன்மார்க்கத்தைத் துளையிட்டுசனாதன இசை கேட்க விரும்பும்உங்கள் செவிகளால்சத்ய தரும சாலையின்சடசடப்பைத் தாங்க இயலுமா? உங்கள் அகப் பைகுப்பைகளை வாரக்கூடியதுதரும சாலையின் அகப்பைஎளியோரின் தவிப்பைத் தீர்க்கக் கூடியது இங்கே குப்பைகளைக் கொட்டாதீர்களெனமீண்டும் சொல்கிறோம் மட்கும் மட்கா என்றஇரண்டுள்ளும் அடங்காதவற்றைமறுசுழற்சி செய்ய முயன்றுசூழலுக்கு ஏன் சீர்கேடு செய்கிறீர்கள்? ஞானசபைக்கு வந்துநாடக சபையின் வசனமானஇந்திரசபை போலிருக்கிறது என்கிறீர்கள்இல்லைஇங்கே கற்பகத் தரு ஏதுமில்லை […]

பாவமன்னிப்பு

பாவமன்னிப்பு

உள்ளங்கையின் இதயரேகையைவிரல்முனைகள் நான்கும் அழுத்தஒலிவாங்கிமுன் விரைப்புடன்பாடிக்கொண்டிருக்கும் தேசியகீதத்தின்ஏதோவொரு ஏகார ஓசையில்வந்துத் தொலைக்கும்கொட்டாவியை எப்படித் தடுப்பது?! சுதேசி கோஷத்துடன்பரிந்துரைக்கப்பட்டதால்251 ரூபாய் செலுத்திவிட்டுக் காத்திருக்கும்எனக்கான செல்போன்தயாராகிவிட்டிருக்குமா?! பேரிடரில் பிழைத்தவர்கள்அளித்த கொடையில்பிழைப்பு நடத்தியவர் யாரோ?! உலகப் பணக்காரர்களின்வரிசைக் கோடுகளைபரோட்டோ சப்ளையர் கோடுகளாக்கிவிளையாடும் கபடிக் குழுவில்எனக்கும் இடம் கிடைக்குமா?! சற்றுப் பொறுங்கள் தேசத்துரோகச் சட்டம் பாயும்முன்ஆளுங்கட்சியில்ஐக்கியமாகிவிடுகிறேன்

முடிந்தது

முடிந்தது

கவிதை நெஞ்சைத் திருகிய வலியைசொல்லக்கூட நேரமில்லாதுநொடியில் முடிந்து போனான்ஒரு தகப்பன்சாமி அழுதழுது வற்றிப்போயிருந்தாள்தாய் அவள் மடிவிட்டு இறங்காதுஅழுகைகளை வேடிக்கை செய்துகொண்டிருந்தனசேய்களிரண்டு அணைந்து போகாதுஅழுகையைப் பற்றவைத்துக்கொண்டேயிருந்ததுகூட்டம் அவனின் மிச்சமெனஇனி இருக்கப்போகிறவர்களுக்காகத்தொழுதுவிட்டு வந்தேன்நான் அப்போதைக்குஅவரவர்க்குமுடிந்தது

தோள்களில் கருவறை சுமப்பவன்

தோள்களில் கருவறை சுமப்பவன்

அந்தப் பாதங்கள் இன்னமும்ஓடிக்கொண்டேதானிருக்கின்றனஅந்தக் கைகள் இன்னமும்என் விரல் பிடித்துதான் நடக்கின்றனஅந்தத் தோள்கள் இப்போதும்எனைத் தோள் சாய்த்து ஆறுதல் தருகின்றன தாடி முடி குத்தும் இடத்திலெல்லாம்பரிசாகக் கிடைக்கும் அவரின் முத்தம்அவர் முத்தம் கொடுக்கும்போதெல்லாம்தாடிமுடி குத்தும் அவருக்கும் கருவறை உண்டுதோள்களில்அவருக்கும் தாய்மை உண்டுமனத்தில் என் பையனுக்குப் பிடிக்கும்என் பொண்ணுக்குப் பிடிக்கும்என்னவளுக்குப் பிடிக்கும்என வாழும் அவர்மறந்தே போகிறார்தனக்கு எது பிடிக்கும் என்று அப்பா எனும் பாறைகள்தான்தனக்குள்ளான மென்மைகளில்பூக்களைப் பிரசவிக்கின்றனஅப்பா எனும் வழிகாட்டிகள்தான்வாழ்க்கைப் பாதையின் முள்ளகற்றிநம் கால்களில் கவசம் பூட்டுகின்றன தந்தையர் தின […]

புதிய நான்

புதிய நான்

கவிதை என்னைப் புதிதாக உணர்கிறேன்ஏனென்று புரியவில்லையானாலும்உங்கள் மீதான அன்பு குறைந்ததில்லை மிகவும் அழகாகத் திகழும்இரவுப் பயணங்களுக்குப் பின் நிகழும்விடியல் போலவே உள்ளதுஇந்தச் சமநிலை விடிந்த பின்னரும் சில கதைகளும்சில பயணங்களும்மனதிலிருந்து மறைவதில்லை நானும் நீங்களும்தொலைதூரத்தில் இருந்தாலும்நாம் சந்தித்த நாட்களையெல்லாம்நினைவுப் பூக்களாகவோமுட்களாகவோ உணரச் செய்யும்இனிவரும் இரவுகள் காலம்விரைவில் பதில் சொல்வதில்லைஇது கனவா? காதலா? நட்பா? எனும்குழப்பத்திலேயே முடிந்துவிடாதுநம் கதை இப்பொழுதாவதுஇதைத் திறந்து படித்துப் பாருங்கள்காகிதத்தின் உணர்வைஉங்கள் மூச்சு சுவாசிக்கும் நான் கிளம்புவதற்கான நேரம்நெருங்கிக்கொண்டுள்ளதுஉங்களுடன்ஒரு மிடறு தேநீர் அருந்தவோபுகைப்படம் எடுக்கவோஆசைதான்காலமும் […]

திராவிட மாடல் – கவிதைகள்

திராவிட மாடல் – கவிதைகள்

சமத்துவம் நான் உனக்காக மாறிவிடநிறைய இருக்கின்றன நீயும் எனக்காக மாறிக்கொள்ளகொஞ்சம் இருக்கிறது ஆனால்நமக்காக மாறிக்கொள்வதில் மட்டும்கவனம் கொள்வோம் மற்றவை மாறிடினும்மாறாவிடினும் என்ன? நீ பாதி நான் பாதி என்பதில்உனக்கு நம்பிக்கை உண்டா? நீயும் முழுமைநானும் முழுமைஎன்பதே சரிஅதற்கு மாறிக் கொள்வோம் ============================ சுயமரியாதை என்னிடத்திலான உன்எதிர்பார்ப்புகளெவையும்நமுத்துப் போகாதவரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு உன் அன்றாடத் தேவைகளெதுவும்எள்ளளவும் அயர்ச்சியுறாத வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு என் சுயத்தை முற்றிலுமாய் ஒழித்துஉன் சுயத்துக்காய் நான் ஒடுங்கியிருக்கும் வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு உன் நினைவின் […]

புனைவுகளால் நாம் வாழ்கிறோம்

புனைவுகளால் நாம் வாழ்கிறோம்

கதை சொல்பவர்களாகிய நாம் வெளியே சென்று நம் இதயம் விரும்பும் இரையைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். இங்கே எல்லாம் உள்ளது; எல்லாம் உண்மை; பூமி நம் காலடியில் ஒரு சிறிய தூசி மட்டுமே.    இதைச் சொன்னவர், 1923ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஐரிஷ் கவிஞர் வில்லியம் பட்லர் யீட்ஸ். அவருடைய பிறந்தநாள் இன்று. இவர் தனது நாட்டில் Abbey என்ற நாடக அரங்கு ஒன்றையும் நிறுவியுள்ளார். நாடக ஆசிரியராகவும் விளங்கி இவர், கலையின் பயன்பாட்டை மக்கள் […]

முறிக்கப்படும் கொம்புகள்

முறிக்கப்படும் கொம்புகள்

உங்கள் அன்பு எப்போதும்நியாமானது உங்களுக்கு வீட்டுத்திரையில் பார்த்துநேரில் காண விரும்பி என் வீடு தேடி வருவீர்கள் இன்னும் அருகில் அருகில் பார்த்தாலும்உங்களுக்கு அலுப்புத் தட்டாது கூடாரம் அமைப்பீர்கள் ஒரே கூடாரம் உங்களுக்குஎப்போதுதான் போதும்? ஒன்று நூறாகும்போதுபோதும் என்று துதிக்கை உயர்த்துவேன் ஆனால் உங்களுக்குஎன் துதிக்கை கீழ்ப்படிதல்தானே பிடிக்கும் பயப்படாமல் என்னைப் புரிந்துகொள்ளலாம்ஆனால்அட்டகாசம் என்று செய்தித் தலைப்பிடுவீர்கள் தீயிட்டும் வெடி வைத்தும் துரத்தும்போதுஎனக்குக் கோபம் வராமல் இல்லை நானும் உங்களோடு பழகியவன்தானே? பின் திரும்பினால் என்னை விரட்டிஇன்னுமொருமுறை என் […]

காற்றில் சிக்கிய பட்டம்

காற்றில் சிக்கிய பட்டம்

கவிதை மொட்டை மாடியில்தண்ணீர் தொட்டியின் மேல்அரை நிக்கர் போட்ட ஒரு சிறுவன்காலை மாலைகை விரலுக்கிடையே நழுவும்மணலைப்போலநேரம் மறந்துவானில் பட்டத்தைப்பறக்கவிட்டுக்கொண்டேயிருக்கிறான்இருட்டு மற்றும் வெளிச்சமெனஇரண்டு காலத்திலும்ஒரே சந்தோசமாய் எழுத்துச் சுழற்சியில் சிக்கிய எனக்குஅவன் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறான்காலையில்மஞ்சள் வெயில் நிறைந்தஎன் வாசல் முற்றத்தில்பட்டத்தின் கருநிழல் மட்டும்செவ்வகக் குடை விரித்தாற்போலத் தெரிந்தது நிஜத்தைவிடப் பெரிதாக அசையும்ராட்சச நிழல் கண்டுகண்கள் லயத்தில் மின்னினபட்டத்தின் நிழல்ஒரே இடத்தில் படபடத்துச் சுழன்றுதடுமாறித் தவித்ததுநான் வெளியே சென்றபோதுஎன் நிழலையோபட்டத்தின் நிழலையோகூடப்பார்க்கவில்லைஎன் வீட்டு மீட்டர் பெட்டியில்சிக்கலான அமைப்பில்சிக்கிய பட்டத்தைஆர்வத்தோடு மீட்டுஅவனிடம் […]

விழுதில்லா ஆலமரம்

விழுதில்லா ஆலமரம்

கவிதை வீழ்ந்து கிடந்தது தெருமூலையில்கிழிந்த கம்பளியில் கசங்கிய கவிதைகுலுங்கிய கம்பளியில் இருமலின் இசைஎழுதிய கவிஞர் எண்திசை ஓடினர்காற்றில் பக்கங்கள் பின்னால் புரண்டனகாலத்தின் கசடுகள் கவிதையாய்ச் சிரித்தனஞாலத்தின் தவறுகள் கிறுக்கலாய் விரிந்தன இருட்டிய பிறகுதான் இவர்களின் சொர்க்கம்முக்காடு மாக்களின் இடைகளின் ஏற்றம்சாக்காடுச் சல்லாபச் சரித்திரப் பதிவேற்றம்குலுங்கிய வளையினில் குதூகல ஆட்டம்குழைந்த மைதொட்டுக் கவிதையின் ஓட்டம்பல்மொழிக் கவிஞர் உரைபட்டி மன்றம்சிதைந்த கழிவாய்க் கம்பளியில் ஒடுக்கம் தேனிருந்த கூடுஅதுவோ தெருவினில் கிடக்குதுதேனுண்ட நரியெலாம் வேறெங்கோ சென்றதுமானென்று சொன்னதெலாம் மறுகி விலகிஓடியதுபழந்தின்ற வௌவால் […]

விதி

விதி

விதி ஓங்கி உயர்ந்த மரத்தில்இலைகளும் கிளைகளும்பறவைக் கூடும் பான்பராக் கறையும்பட்டைமேல் படர்ந்திருந்தன இலைகள் விழ விழமரம் தளர்ந்துமனநோயாளி ஆகவில்லைஅவ்வப்போதுபருவநிலை மாற்றத்தில்சில நாள் நிர்வாணமும்பல நாள்வழிந்தொழுகும் மேகமுமாய்அனிச்சை நிகழ்வாகின சில சமயம்கிளைகளில் சுளுக்கிருக்கும்அதற்கு யாரோ எறிந்தகுப்பை மூட்டையும்காரணமாய் இருக்கலாம்கால தாமத வானிலை அறிக்கையால்பல நேரம் காற்றும் கற்பழிக்கும் பூச்சிகளும் எறும்புகளும்குகையாய் மாற்றிக்கொள்ளும்வருடத்தில் என்றேனும்நேரமிருப்பின்மழையும் கொஞ்சம் முத்தமிடும்தொடர்ந்து அடிக்கடி பார்த்ததனால்இவை சலிப்பு தந்து தித்திக்கும் அவ்வப்போதுஉடலில் வலியும்முதுகுத்தண்டில் விரிசலும்என்றோ விழுந்த மின்னலில்உச்சந்தலைக் கருகலும்இவை ஏன் எனக்கு மட்டும் எனகேட்கத் தோன்றும் […]

மடிக்கனம்

மடிக்கனம்

மடிக்கனம் – கவிதை புழுதியை எழுதியெழுதிக்களைத்த பகல் கூடடைந்திருக்கவிழித்திருக்கிறதுநெடுஞ்சாலையின் இரவுவாடை மையொழுகும் விழிபொய்யொழுகும் இதழ்திட்டுத் திட்டாககோகுல் சாண்டலொழுகும் கன்னக்கதுப்பு புருவஞ்சுருக்கிக் கவனங்குவித்துபழக்கப்பட்ட லாரிக்காரனுக்காய்விழிநோக நிற்குமந்தக் கனகாவின்ஈரமொழுகும் ரவிக்கை வாடைக்குஇரவைக்கிழித்து ஊளையிடுகிறதுமுட்புதருக்குள் குட்டிகளைப் பதுக்கி வெளியேறும் மடிசரிந்த நாயொன்று குப்பையோரம் கிடந்த கொட்டாங்குச்சியில்தன் பாரம் அத்தனையும் இறக்கி வைத்துவிட்டுமேலும் கொஞ்சம் பவுடர் பூசிக்கொள்கிறாள் கனகா மடிகனத்த நெடுஞ்சாலைக் கிளிகளின் யாமம்விமோசனமில்லாப் பெருஞ்சாபம்

கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?

கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?

கலைஞர் 100 – சிறப்புப் பதிவு தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலை உலகிலிருந்து பிரிக்க முடியாத பெயர் கலைஞர். முத்துவேல் கருணாநிதியாகத் தோன்றி, மறைவுக்குப் பின்னும் கலைஞராக வாழ்ந்துகொண்டிருக்கும் அவரது நூறாவது பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவருடைய எழுத்தாற்றல் பற்றி நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். தமிழ் எழுத்துலக வரலாற்றில் கலைஞரைத் தவிர்த்துவிட்டு யாராலும் வரலாறு எழுதவியலாது. அவருடைய படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் இன்றியமையாதவையாக நிலைத்திருக்கின்றன. தனது தூக்குமேடை நாடகம் அரங்கேற்றத்தின் முடிவில் நடிகவேள் எம்.ஆர். இராதா […]

‘மல்’யுத்தம்

‘மல்’யுத்தம்

‘மல்’யுத்தம் மல்லுகட்டிமல்லுகட்டிபதக்கம் வாங்கினார்கள்தேசம் கொடி அசைத்துக்குதூகலித்ததுபிரதமரோடு படம் எடுத்துமகிழ்ந்துகொண்டார்கள் மல்லுகட்டிமல்லுகட்டிகோரிக்கை வைத்தார்கள்மல்லுகட்டிமல்லுகட்டிமறுக்கிறது அதிகாரம் மல்லுகட்டிவாங்கிவந்த பதக்கங்கள்புறக்கணிப்போம் என்றாலும்மல்லுகட்டிப் பார்க்கிறதுஅதிகாரம் பல்லைக்காட்டிச் சிரிக்கிறதுசெங்கோல்

காட்டுக்குப் புலிகள்; நாட்டுக்குக் கவிஞர்கள்

காட்டுக்குப் புலிகள்; நாட்டுக்குக் கவிஞர்கள்

உலகக் கவிதை நாள் /உலக வன நாள் / மார்ச் 21 புலிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்த ஒவ்வொரு வருடமும் ஜூலை 29 ஆம் தேதியைப் ‘புலிகள் தினமா’கக் கொண்டாடுகிறது உலகம். மற்ற விலங்குகளுக்கு இல்லாத முக்கியத்துவம் புலிகளுக்கு மட்டும் ஏன்? ஏனெனில் உலகச் சூழலியல் வட்டத்தின் மையமாகப் புலிகள் இருக்கின்றன. ஒரு காட்டில் புலிகள் இருந்தால் அவற்றுக்கு உணவான மானும் கால்நடைகளும் அங்கு இருக்கவேண்டும். மான் இருந்தால் மானுக்கு உணவான புல் மற்றும் தாவரங்கள் […]