பேசாத காரியம்

பேசாத காரியம்

பாரதியார் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை பாரதியை எத்தனைமுறை எழுதிப்பார்த்தாலும் சலிக்காது. இன்று அவனது நூற்றுநாற்பதாவது பிறந்தநாளில் அவனுடைய குருமணி நிவேதிதா தேவியுடனும் பாரதியார் கவிதைத் தொகுப்புகளில் காணக் கிடைக்காத அவனுடைய பாடல் ஒன்றுடனும் பாரதியைக் கண்டு மகிழ்வோமா? சகோதரி நிவேதிதா அயர்லாந்து தேசத்துப் பெண்மணி. சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக ஆளுமையால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்தவர். பெண்களுக்கான கல்வி நிறுவனம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்ட விவேகானந்தரின் முயற்சிக்கு உதவியாக இருப்பதற்காக விவேகானந்தரால் அழைக்கப்பட்டு இந்தியா வந்தார். 1902இல் விவேகானந்தரின் […]

தொலைந்த நூலகம்

தொலைந்த நூலகம்

அறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்கு அஞ்சலி ஒரு பல்கலைக் கழகம் கலைந்துவிட்டதுஒரு நூலகம் தொலைந்துவிட்டது ஓர் அவை ஒரு சபை என்றால்அதில் ஔவை இருந்தால்அதற்கு ஒரு கௌரவம் கடற்கரையோபுகைவண்டி நிலையமோஅவர் இருக்கும் இடம்தமிழ்ச்சங்கம் ஆகிவிடும் அங்கே தமிழ் விளையாடும்அங்கே கவிதை பூத்துக்குலுங்கும்கலைகள் அங்கே களைகட்டும் அறிஞர்களின் அறிஞரைஇழந்துவிட்டது தமிழ்புலவர் கோபோய்விட்டார் நம்மை விட்டு ஒரு பாடலுக்கு அவர் உரை சொல்வதைமூல ஆசிரியன் நேரில் கேட்டால்நிச்சயம் அவரைமுத்தமிட்டு உச்சிமுகர்வான் இயல் இசை நாடகம்மூன்று தமிழும் அறிந்தவர் தமிழின் ஈராயிரம் ஆண்டு […]

அடிக்கும்போதும் வராத அப்பா

அடிக்கும்போதும் வராத அப்பா

‘அப்பனை முழுங்கின சனியன்’ என்றுபாட்டி திட்டும்போதெல்லாம்என் தோழிகளின் அப்பாக்களைநினைவு கூர்வேன்அவ்வளவு உயரமாக இருக்கும் அப்பாவைநான் எப்படி விழுங்க முடியும் என்றுபுரியாமல் விழித்துவிட்டுபாட்டியிடம் கேட்டிருக்கிறேன்சிலசமயம் பாட்டி அடிப்பதுண்டுசிலசமயம் அலுப்பதுண்டுசிலசமயம் என்னை அடித்துவிட்டுஅவளும் அழுவாள்ஆனால் நான் எப்போதும்அப்பா என்றுதான் அழுதிருக்கிறேன்அப்பா என்று சொல்லி அழதே என்றுமேலும் அடித்திருக்கிறாள் பாட்டிஆனால் ஒருமுறைகூடஅப்பா வந்ததே இல்லை. பவித்ரா பாண்டியராஜூ

நினைவுகளின் துகள்

நினைவுகளின் துகள்

ஏதோ பழைய பொருட்களைபோட்டுவைப்பதைப் போலஎன் நினைவுகளைஒரு மூலையில் போட்டு வைத்திருக்கிறாய்என்றாவது ஒருநாள்உனக்குத் தேவையற்றதாகிவிடும் என்கிறாய்என் நினைவுகளின் மேல்புதிதாய் ஒரு பட்ரோஸ் செடி பூத்துக் குலுங்கலாம்அல்லதுமண்தொட்டியில் களை மண்டிக்கிடக்கலாம்அல்லதுஉன் பூச்சாடியில் மரம் முளைத்திருக்கலாம் ஆனால் நானோஇந்த நினைவுகளுக்குதினமும் சிரட்டையில் தானியம் இடுகிறேன்புராதனமான பொருட்களைப் போல்பத்திரப்படுத்துகிறேன்ஒருநாள் என் கல்லறையைத் தோண்டும்போதுஉன் கரங்களில் என் நினைவுகளின் துகள் வந்து விழும்தானே! பவித்ரா பாண்டியராஜூ

சாகாவரம் தேடு

சாகாவரம் தேடு

என் மனதுள் நுழையமுனைந்து முனைந்து என்னால்விரட்டப்படாமல்வாசலில் நிற்பவனே!! உனது அன்பின் ஆழம்மாவலி கங்கையின் நீளத்திலும்நீளமானதுஅறிவேன் நன்கு. என் விழிகளில் விழி நுழைத்துமுகம் புகழ்ந்துபருவத்தின் மீது புராணம் பாடிபாதச்சுவடுகளின் மீதுலவுகிறாய் என் செய்வேன்?உன் மீதுபரிதாபம் மட்டுமேபட முடிகிறது உலகம் நானென்கிறாய் – உலகவிந்தை நானென்கிறாய்கவிதைகளும் காட்சிகளும்அனைத்தின்பமும் நானென்கிறாய்எத்தனை பொய்!!! பகலின் இரவுகளில்நாடு கடத்தப்பட்டுகாடுகளின் சுதந்திரச் சிறைகளில்மனித இயந்திரங்களாய்இருநூறாண்டுகள் இருளுக்குள் உழலும் மக்கள்கூட்டத்திலிருந்துஎழுந்து வந்தவன் நீநினைவுகளை ஞாபகத்திற்கழை. எவனெவன் வாழ்வுக்கோ உதிரம் சிந்திஉழைத்து மரிக்கும்அறியாமைகளுக்குஉனை விட்டால் ஒளிப்பிழம்பு யார்? உலக […]

வாசிப்பைத் திசை திருப்பிய வண்ணதாசன்

வாசிப்பைத் திசை திருப்பிய வண்ணதாசன்

வண்ணதாசன் பிறந்தநாள் சிறப்புப் பதிவு 1982ல் நான் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது எங்கள் அக்கிரஹாரத்தினர் அனைவரும் மெஜுரா காலேஜ் அல்லது அமெரிக்கன் காலேஜில்தான் சேருவார்கள். அவை இரண்டும் தன்னாட்சிக் கல்லூரிகள், அதிலும் மெஜுரா காலேஜில் டபிள் மேஜர், கெமிஸ்ட்ரி பேராசிரியர்களாக நண்பன் விஸ்வநாத்தின் மாமா நடராஜன், மற்றொரு நண்பர்களான கோபால் – வாசு என்ற இரட்டையர்களின் மாமா மீனாட்சிசுந்தரம் ஆகியோர் இருந்தது போன்ற காரணங்களால் நான் பிடிவாதமாக தியாகராஜர் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தேன். எங்கள் தெருவினரில் 99 சதவிகிதத்தினர் […]

ஈசனின் நிர்வாணம்

ஈசனின் நிர்வாணம்

ஏதோவொரு தெருக்கூத்து நாடகத்தை போலஇந்த சூரியப்பகலில் நடந்துக் கொண்டிருக்கிறேன் ஈசனின் நிர்வாணத்தை மறைக்கும்சாம்பலின் நிறத்தில்எங்கோ எரியும் காட்டுத்தீயின் புகையைமேகமாக்கி என்னிடம் இழுத்து வருகிறாய் சலங்கை கட்டி ஆடும் கிளைகளும்தூரத்து மண் வாசமும்கொல்லையில் ஓயாது கத்தும் கன்றும்ரசனையற்றவளின் கண்களில் காட்சிகளாய் விரிக்கிறாய் பிணத்திற்கு முன்னால் ஓங்கி ஓங்கிஒப்பாரி வைக்கும்ரேடியோ பெட்டியைப்போலகேட்பாரற்று ஓரமாய் கிடக்கிறேன் அனுமானங்களை என்னுள் நிரப்பிவெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு வியர்வையை துளிர்க்க விடுகிறாய் முதிர்கன்னியின் மரணத்திற்குவயிற்றுவலிப் புனைக்கதைக் கேட்கும்பிணத்தைப் போலநடுவீதியில் படுத்துறங்கும் என்னுள்ளே வீசுகிறதுமரணத்திற்கான சிறு ஓலம். […]

பதவி வாங்கும் கருவி

பதவி வாங்கும் கருவி

கவிஞர் பொன்மணிதாசன் கவிதை பெட்டியிலே பணமிருக்கும்பேருசொல்ல ஆளிருக்கும்வட்டிக்கென்று சென்றபணம்வளர்ச்சியிலே தானிருக்கும் ஒட்டிசில உறவிருக்கும்உறவினிலும் முரணிருக்கும்அட்டியிலை பெற்றப்பேருஆகாசம் தொட்டிருக்கும்! வீட்டுக்கே சாமிவரும்வீராப்பு பேசவரும்ஓட்டுக்கு பணங்கொடுத்தால்ஓடோடிப் பதவிவரும் மாட்டுக்கும் மரியாதைமறக்காமல் தேடிவரும்நாட்டுக்குள் இவருக்கென்றுநாற்புறமும் புகழுவரும்!  வந்தநோய் விரட்டவரிசையிலே மருத்துவரும்அந்தநோய் தீர்ப்பதற்குஆயிரமாய் செவிலியரும் எந்தபணம் கொடுத்தாலும்ஏற்காமல் முதுமைவரும்அந்தநாள் வந்துவிட்டால்அடுத்தநொடி தனிமைவரும்! அறிவார் அறியவரும்அறிவார்ந்த தத்துவத்தைவிரிவாய் சொல்வதென்றால்விடுகதை யந்தவித்தை புரியாமல் ஆடும்களம்பூமியடா நீயறிந்தால்தெரியாமல் வந்தநிலைதெளிவாக்கு மிந்தகதை! பொன்மணிதாசன்

காவியக் கலை

காவியக் கலை

கவிஞர் பொன்மணிதாசன் கவிதை புன்னகை யொளியில் பூத்தநல் என்னை சிலிர்ப்பாக்கும் – அவள்கண்ணடி காணும் கவிதை மொழியோகண்களை விரிவாக்கும்! விரிகுடை போலிரு விற்புரு இரண்டுவிழியிடம் கடன்கேட்கும் – நான்சொரிகிற பார்வை சூட்சம மறிந்துசூடும் நாணமதுவாக்கும்! கரைய மறந்த கார்முகில் குழலதுகாலை தான்நோக்கும் – என்விரல்சிறைபடச் செய்த சிகையின் அழகுசேர்த்தநல் வலையாக்கும்! வரைய இருந்த வனப்புறு அழகின்வடிவம் அவளாக்கும் -நான்நிறைய நிறைய நினைத்த வண்ணநித்திலப் பூவாக்கும்! உண்டு உருண்டு உதடுகள் உலரஉணர்வுகள் உசுப்பேத்தும் – தேனில்வண்டு விழுந்த வகையென் […]

வாழும் கவிஞன் வாலி

வாழும் கவிஞன் வாலி

கவிஞர் வாலியின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவர் பாடல்களோடு சிறு பயணம்: “நன்றி சொல்லவே உனக்குஎன் மன்னவா வார்த்தை இல்லையேதெய்வம் என்பதே எனக்குநீயல்லவா வேறு இல்லையே” இன்று அதிகாலை காரில் உட்கார்ந்தபோது, பனிக்குளிரைக் கிழித்துக்கொண்டு எழுமாற்றாக வந்து குதித்தது இந்தப் பாட்டு. சிலரை நினைக்கும்போதோ அல்லது அவர்களை நினைப்பூட்டவோ பாடல்களும் தூண்டுகோலாகின்றன. இன்று கவிஞர் வாலியின் நினைவு நாள்; அவர் எழுதிய பாடல் முக விசேடம். கவிஞர் வாலியை ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,தான் […]

ஆனந்த யாழ் மீட்டியவன்

ஆனந்த யாழ் மீட்டியவன்

நா.முத்துக்குமார் தொண்ணூறுகளின் இறுதியிலேயே வந்து விட்டாலும் இரண்டாயிரத்தின் மத்தியப் பகுதியில் இருந்து 2015 வரை உச்சத்தில் இருந்த பாடலாசிரியர். பட்டுக்கோட்டை, கண்ணதாசன் ,வாலி, வைரமுத்து, பழனி பாரதி என்று தனி ஆளாகத் திரைத்துறையில் கோலோச்சிய பாடலாசிரியர் வரிசையின் கடைசிக் கண்ணி அவர்தான். இனி தனி ஒருவருக்கு அந்த இடம் சாத்தியமில்லை. இரண்டாயிரத்துக்குப் பிறகு அப்படி ஒரு நிலையில் அவரும் இருந்ததே பெரிய விஷயம். அந்த வகையில் அவர் முக்கியமானவர். அவருடைய வெற்றி என்பது யுவன் மற்றும் ஜி.வி […]

காலத்தால் அழியாத கவி கா. மு. ஷெரீப்

காலத்தால் அழியாத கவி கா. மு. ஷெரீப்

எளிமையான வார்த்தைகளைத் தேடிப்பிடித்து, பாமரனும் புரிந்துகொள்ளும் வண்ணம் பாடல்களை இயற்றுவதில் வல்லமை படைத்த, கதை, வசனகர்த்தா,எழுத்தாளர், கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்களது நினைவு தினம் இன்று. தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்று, சுயம்புக் கவிஞரான ‘காதர்ஷா முகம்மது ஷெரீப்’ என்ற பெயரை கா.மு.ஷெரீப் என்று சுருக்கிக் கொண்டார். இவர் தஞ்சை மாவட்டத்தில் அபிவிருத்தீஸ்வரம் என்னும் ஊரில், 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் காதர்ஷா ராவுத்தர். தாய் முகம்மது இப்ராகிம் பாபாத்தம்மாள். தமிழைத் […]

கானல் சுவாசிக்கும் கால்கள்

கானல் சுவாசிக்கும் கால்கள்

புகைப்படத்துக்கான கவிதைப்போட்டியில் பரிசு பெற்ற கவிதைகள்: கோபிப்பாளையம் புனித தெரசா தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. அரசு தாமஸ் அவர்கள், கடைத்தெருவில் கண்ட காட்சியைச் சிறைப்பிடித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு, ஒரு உழைப்பாளியின் நிலையை நமக்கெல்லாம் காட்சிப்படுத்தியிருந்தார். அந்தப் படத்திற்குப் பொருத்தமான கவிதை எழுதும்படி ஒரு போட்டியை நம்முடைய சுவடு இதழ் மற்றும் சுவடு பதிப்பகம் சார்பாக அறிவித்தோம். ஏராளமானவர்கள் போட்டியில் பங்கேற்றுக் கவிதைகளை அனுப்பியிருந்தார்கள். போட்டிக்கான நடுவராக இருந்து, கவிதைகளை வாசித்து, அவற்றிலிருந்து 3 கவிதைகளைப் […]

பிர்ச்மரக் காடுகள்

பிர்ச்மரக் காடுகள்

குளிர்காலச் சிறுவெயிலின் கதகதப்பான காலையில் நீயும் நானுமாய் கைகோர்த்துச் செல்லும் நடைகளிலே பேசித்தீர்க்கும் கணங்களும்  பின் மௌனமாய் உன் தோள் சாய்ந்து நடக்கும்  அழகான நேரங்களும்  நமது பாதையை நீளச்செய்ய இதோ இங்கே வலிமையாய் உயர்ந்திருப்பவை  பிர்ச் மரங்கள் மட்டுமல்ல – வலுவாய்நம் நேசமும்தான்…! கவிதை & ஓவியம்: அனிதாராஜ்

பண்டிகைக்காரி

பண்டிகைக்காரி

சின்னதாய்ச் சிங்காரித்துச்சின்னக்கண்ணில் மையிட்டுபுருவமிரண்டின் மத்தியிலேவண்ணக் குப்பிப் பொட்டுமிட்டேன்!உச்சி வகிடின் நடுவினிலேநெற்றிச்சுட்டி ஆடவிட்டேன்! மணிக்கட்டு அது நோகாது `சிறு வளையல்கள் பூட்டிவிட்டேன்,வீடெங்கும் நீ இசை நிரப்பகால்சலங்கைக் கட்டிவிட்டேன்! வண்ணமணி மேகலையும்தொங்கும் மணிஆரமும்அதன் இடங்கள் சேர்த்துவிட்டேன்!கூண்டுகிளிப் பொருத்தியகாதணியும் தொங்கவிட்டேன்! முல்லைப்பூக் கரங்களுக்குமருதாணி நிலாக்கள் வைத்தேன்!மல்லிப்பூ வாசனை நுகர்ந்துஅம்மா… இது வேண்டுமென்றாய்!அழகாய்ச் சரமொன்று கட்டிபின்னலிலே சூட்டிவிட்டேன்! அத்தனையும் முடித்துபாவாடை நுனிபிடித்து,பாட்டொன்றுப் பாடிபாங்காய் உன் தலைசாய்த்துகேட்டாய்…!“அம்மா, நல்லா இருக்குல்ல…”இதோ வந்துவிட்டது மகளேநம்வீட்டில் பண்டிகை நாள்! ஊரெங்கும் பொங்கலோநாடெங்கும் தீபாவளியோநீதானே என் பண்டிகைநீதானே என் […]

சூட்சுமங்கள்

சூட்சுமங்கள்

எப்போதும்போல எதுவுமில்லாதவர்ஏமாந்தே எலும்பாகிறார்எல்லாமுடையவர்வசதியோடு வள்ளலாகிறார்தெய்வமும் கைவசமிருப்பதைக்கொடுத்துதான் நிற்கிறதுதன் இருப்பிடத்தில்கட்டணமென்றால் சிறப்பு தரிசனத்தில் வரம்கட்டணமில்லையென்றால் கடைசியிலேதான் என்றசுகவாசிகளின் சூட்சுமங்கள்தான்தெரிவதில்லை பாவம்தெய்வங்களுக்கும் தெருக்கோடிகளுக்கும் கலை

பேரரசுகளின் கல்லறையில்..!

பேரரசுகளின் கல்லறையில்..!

காணுமிடமெங்கும்இரத்தம் உறைந்த பூமியில்வாழ்வுக்கும் சாவுக்கும்இடையே போராடுகிறார்கள் அண்டங்களுக்கு அப்பால் சென்றுகுடியிருப்புகளை நிறுவஇருபத்தியோராம் நூற்றாண்டு மனிதன்முயன்று கொண்டிருக்கையில்,உயிர் தப்ப எண்ணியோர்உயிரே பறக்கும் விமானத்தின்சக்கரங்களிலிருந்து வீழ்வது இருண்ட காலத்திற்குள் அவர்கள்விழுவது போலவே இருக்கிறது பஸ்தூன், டாஜிக்ஸ், ஹாசாரஸ்பழங்காலத்திலிருந்து பழங்குடிகளேபல்குடிகளாகப் பெருகிவாழும் தேசத்தில்வரலாற்றின் போக்கிற்கேற்ப வாழும் மக்கள்மாறும் போதெல்லாம்கற்காலத்தில் வாழவேகட்டாயப்படுத்தப்படுகிறார்கள்கொலைக்கருவி ஏந்திமதம் காப்பவர்களால் புதுமையோ புரட்சியோ இல்லாமல்பழமையிலேயே கிடக்கும்பழங்குடிகளின் தேசம்புவிசார் அரசியலில்வளங்களைக் கொள்ளையடிக்கும்வல்லூறுகளின் வேட்டைக் காடாகிவிட்டது ஆதிக்கம் எதுவாயினும்அடிபணியோம் என்பதைதுப்பாக்கி முனையிலும்பயமேதுமின்றிப் பதாகை ஏந்தும்பெண்கள் சொல்கிறார்கள் ஆதிக்கவாதிகள் எல்லாம்அழிந்து போன பேரரசுகளின் […]

எட்டப்பன்களின் பாஞ்சாலங்குறிச்சி

எட்டப்பன்களின் பாஞ்சாலங்குறிச்சி

ஆகஸ்ட் போராட்ட நினைவு சிறப்புக் கவிதை ஆகஸ்டு மாத இளம் வெயிலின்அகிம்சைக் கூடத்தில்தான்ஒத்துழையாமை உலைக்களம். ஒரு கிழவனின் அகிம்சைஇரும்பை எரியவிட்டுத்தான்பரிசோதிக்கப்பட்டது. உலகப் போரின் நெருக்கடியில்கூடமுகத்தோடு முகமாய் ஒட்டிக் கிடந்தவெள்ளையனின்அதிகார முகமூடி. ஒவ்வொரு இந்தியனின்இதயத்திலும்எரிமலையின் சாம்பல். பக்கத்திலேயே இருந்ததுபகத் சிங்கின்அறிவுத் துருத்தி ஆயுதக் கூடம்.இருந்தும்போர்க்களத்திற்குப் அருகிலேயேபுறமுதுகாளர்களின் கூடாரமும்.மதப் புராணிகங்களின் அம்பறாத்தூணியில்தகதகக்கும் ஜாதி அம்புகள். மார்பில் ரோஜா சூடியவனைமரணத்தைப்போல் பார்த்தார்கள். வேடிக்கைக்காரர்களின் கண்களில்வெறிகள் மினுங்கின“இந்தியச் சிறுமிக்குவெள்ளைக்கார துரையுடன்குழந்தைத் திருமணம்.” நாக்கிலும் முளைத்த நரிப்பற்கள். பசுமாடுகளுக்குப் பாதுகாப்பெனகாடே கைகூப்பிய போதேகள்ளச் சிங்கங்களுக்குக் […]

சுண்டிய குடலின் வாசம்

சுண்டிய குடலின் வாசம்

கங்குகளில் தெறிக்கும்அனலைக் குடித்துசிவப்பேறி வெந்து தணிந்தசூளையிலிட்ட செங்கல்களில்கொடும் பசியில் கொதித்துச்சுண்டிய குடலின் வாசம்பூத்துக் கிடக்கும் மணிக்கணக்காய்மூச்சடக்கி மிதித்தெடுக்கும்களிமண்ணின் பதத்தைகொப்புளங்கள் வெடித்துரணங்கூட்டி வதைக்கும் பாதங்கள்முணுமுணுத்துச் சொல்லும் வாங்கிய முன்பணத்துக்காய்இளைத்துப்போனவாங்காத கூலியில்வெந்தது வேகாததுகணக்கில் தப்பியதென்றுசேதாரம் போகஅதிகாரங்களின் அத்தனை நரித்தனத்துக்கும்ஈடு சொல்லி வீடு வந்துசேர்ந்த பணம்பொழுதுக்கும் கும்பி நிறைக்கும்டீக்கடை பாக்கிக்கும்மூட்டுவலி தைலத்துக்குமாய்மூச்சுமுட்டி நிற்கும் காலங்காலமாய் கல்லறுத்த பிழைப்பில்முடமாகிப்போன காலும்சவமாகிப்போன கண்ணுமாய்தலைமுறை தாண்டியும்தலையெழுத்து சிரிக்கும்குடிசையின் அக்னிமூலை உயிர்ப்புசூளையின் தனலோடும்வெறிக்கும் வெய்யிலோடும்ஊசலாடிக் கிடக்கும் சாமம் தாண்டியும்சாளரங்கட்டும் பச்சைக் கல்லோடுகூட்டிக் கழித்துப் பார்க்கும்கந்துவட்டிக் கணக்குபொறையோடும் டீயோடும்பசித்த […]

மூடிய கேள்விகள்?

மூடிய கேள்விகள்?

மூடிட்டுப் போ என்கிறார்கள்.. தீர்வு அறியாததற்கும் விடை தெரியாததற்கும் எப்போதும் பேசும் பேச்சு இது.. திறனாய்ந்த மருத்துவன் காயத்தை திறந்து பார்க்கிறான்.. நோய்மை புரியாத வைத்தியன் கடவுளுக்குத் தான் தெரியும் என்று மூடிட்டுப் போகிறான்.. இயங்காமல் இருப்பது நோய்மை.. மூடுண்ட தொழிற்கூடமே நோய்மைப்பட்ட நிறுவனமாகிறது.. திறக்காத வான்குடைதான் எமனேறும் வாகனமாகிறது.. இதழ்கள் மூடிய மலருக்குள் எப்போதும் வண்டின் குடைச்சல்.. மூடிக் கிடக்கும் வானம் அழுகிறது.. வெளிறி கிடக்கும் வானம்தான் விண்மீன்களால் ஜொலிக்கிறது.. பெருவெடிப்பே ஜீவனின் ஆதாரம்.. உறுதிறத்தலே […]