பொன்னியின் செல்வன் – 5

பொன்னியின் செல்வன் – 5

சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் நடந்த யுத்தத்தில் அவ்வப்போது சிங்கள மன்னர்கள் பாண்டியர்களுக்கு உதவி செய்வது வழக்கமாய் இருந்தது. பாண்டிய மன்னனான வீரபாண்டியனை ஆதித்த கரிகாலன் வென்றதைத் தொடர்ந்து, ஈழமன்னனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என சோழநாடு விரும்பியது. போர் புரிவதை விரும்பும் சோழத் தளபதிகள்,  மாவீரர்கள் அங்கு செல்வதற்குப் போட்டி போட்டனர். அப்பொழுது இளவலான அருள்மொழிவர்மன், தன்னை அனுப்பும்படி அனைவரிடமும் வலியுறுத்தினார். குந்தவை தேவிக்குத் தன் தம்பியாகிய அருள்மொழிவர்மன் மீது தனிப்பிரியம். அவரும் தமக்கை குந்தவை இட்ட கட்டளைகளை மீறியதே கிடையாது. தன் தம்பியை வீரனாகவே வரித்திருந்த குந்தவைக்கு ஈழம் செல்லத் தகுதியானவன் அருள்மொழிவர்மர்தான் என்று தோன்றியது. ஈழத்துக்கு வழியனுப்புகையில், தன் தோழியான வானதியை ஆரத்தி எடுக்கப் பணித்தபொழுது, வானதி தனக்கேற்பட்ட மனக்கிளர்ச்சியால் தட்டைத் தவறவிட்டு மயக்கமடைந்தாள். இளவரசரும் பதற, குந்தவை வானதியைத் தாங்கிப் பிடித்து உள்ளே அழைத்து சென்றார். இளவரசர் வந்து வானதியைசி சற்றே சமாதானப் படுத்திவிட்டு விடைபெற்றுச் சென்றார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் வானதிக்கு அடிக்கடி மயக்கம் வந்தது. குந்தவையும் அவளைக் கண்போலப் பார்த்துக் கொண்டிருந்தாள். இது, உடனிருந்த தோழிகளிடையே வானதியின் மேல் பொறாமையைச் வளரச் செய்தது. வானதியின் பயத்தைப் போக்க, தாங்கள் ஜோதிடர் வீட்டுக்குச் சென்று திரும்புவதற்குள் ஒரு பொம்மை முதலையைத் தயார் செய்து வைக்கச் சொல்லியிருந்தாள் குந்தவை. அவர்கள் இருவரும் திரும்பி வந்தபோது, அனைவரும் ‘முதலை முதலை’ எனக் கத்திக்கொண்டு பயந்தது போல நடித்தனர். வானதி பயப்படவில்லை. ஆனால், இந்த சத்தத்தைக் கேட்டு அந்தப் பக்கமாக வந்துகொண்டிருந்த வந்தியத்தேவன், பெண்களைக் காப்பாற்றுவதாக எண்ணி ஈட்டியால் முதலையைத் தாக்கினான். அதிலிருந்து பஞ்சும், வாழைநாரும் வெளிவந்தன. சுற்றியுள்ள பெண்களெல்லாம் சிரிக்க, வந்தியத்தேவன் குழம்ப, குந்தவை ஜோதிடர் வீட்டில் பதில் சொல்லாமல் வந்ததற்கும், இங்கு பொம்மை முதலையுடன் விளையாடிக் கொண்டிருந்ததையும் சொல்லி வருத்தம் தெரிவிக்க, வந்தியத்தேவன் அடைந்த ஏமாற்றத்தைச் சொல்லி மாளாது. இத்தனையும் பெண்களுக்கு நடுவில் நடக்கவும், அசூயை அடைந்த வந்தியத்தேவன் குதிரையை விரட்டிக்கொண்டு வேகமாகக் கிளம்பி விட்டான். அதைக் கண்டு குந்தவை வருந்தியதோடு, தோழிகளையும் கடிந்து கொண்டாள். குந்தவையைச் சந்தித்தபிறகு அங்கேயே நின்றுவிட்ட மனதைத் திருப்ப முடியாமல் வந்தியத்தேவன் அலைக்கழிந்தான். குந்தவையின் நினைவால் இயற்கை எழிலை ரசிக்க முடியாமல் புதுவித உணர்வில் தவித்துக்கொண்டே தஞ்சையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். திருவையாறு திரும்பும் வழியில் கடம்பூர் மாளிகையில் பார்த்திருந்த மூடுபல்லக்கு வருவதைக் கவனித்தவன், அதில் இருப்பவர் மதுராந்தகன் என்பதை எப்படியாவது அம்பலப்படுத்திவிட வேண்டும் என முடிவு செய்துகொண்டு பல்லக்கைத் தொடர்ந்தான். பழுவேட்டரையரும் அவரின் பரிவாரங்களும் உடன் வராததால் இன்னும் துணிவு பிறந்தது. பழுவூர் ஆட்கள் இவன் பின்தொடர்வதைக் கவனித்து விசாரிக்க முயல்கையில், வேண்டுமென்றே பல்லக்கை இடிப்பதுபோல் சென்று காப்பாற்ற வேண்டும் என பல்லக்கில் இருப்பவரிடம் முறையிட்டான். காவலர்கள் பிடிக்க வந்த நேரம் பல்லக்கின் மூடுதிரை விலகியபோது உள்ளே தெரிந்த உருவத்தைக் கண்டு அதிர்ந்தான். மதுராந்தகனை எதிர்பார்த்த வந்தியத் தேவனுக்கு அழகிய மோகினியைப் போன்ற பெண்ணைக் கண்டு பேரதிர்ச்சி. முதலில் பேச்சு வராமல் திகைத்தவன், அவள் நந்தினிதான் என்று யூகித்த கணத்தில், ஆழ்வார்க்கடியானின் பெயரை உபயோகித்து, தங்களிடம் பேச வேண்டும் என்றான். பழுவூர் இளைய ராணியான நந்தினி, ஒரு கணம் வியந்தவள் அரண்மனையில் வந்து சந்திக்குமாறு கூற, ‘காவலர்கள் விடமாட்டார்களே’ என வந்தியத்தேவன் நயந்தான். உடனே நந்தினி, ஒரு தந்த மோதிரத்தைக் கொடுத்து, பின் தொடர்ந்து வரவேண்டாம் என எச்சரித்துவிட்டே அந்தப் பல்லக்கை நகரச் சொன்னாள். வந்தியத்தேவன் அவள் அழகில் கிறுகிறுத்துப் போயிருந்தான். பழுவேட்டரையர் இவள் பேச்சைக் கேட்கிறார் என்பது உண்மையானால் அது தவறில்லை என்று நினைத்துக் கொண்டான். பல்லக்கு வெகுதூரம் சென்றபிறகே கிளம்பிய வந்தியத்தேவன், தஞ்சையை அடைந்தான். நகரத்தை ரசிக்க ஆவலிருந்தாலும் முதலில் வந்த வேலையைப் பார்க்க வேண்டும் என்ற கடமையினால், கோட்டை பிரதான வாயிலுக்குச் செல்ல, அங்கு யாரும் உள்ளே சொல்லாமல் ஒதுங்கி நின்றிருந்தனர். காவலர் கவனத்தைக் கவராது உள்ளே செல்வது கடினம் என்று உணர்ந்து கொண்டு, அருகிலிருந்த ஒரு இளம் வாலிபனிடம் பேச்சுக் கொடுத்து, வேளக்காரப் படை வெளியில் வருவதற்காகத்தான் அனைவரும் ஒதுங்கி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டான். வேளக்காரப் படை பெரும் ஆர்ப்பாட்டத்துடன் வெளிவந்தது. அவர்கள் வெளியில் வந்த பிறகு முக்கியஸ்தர்களைத் தவிர உள்ளே செல்ல யாருக்கும் அனுமதியில்லை என்று தெரிந்து கொண்டவன், இரவைக் கோட்டைக்கு வெளியே கழித்து விடலாம் என்று முடிவு செய்தான். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சிவபக்தன் போலத் தோற்றமளித்த வாலிபனிடம் பேச்சுக் கொடுத்ததில், அவன் தஞ்சைத் தளிக்குளத்தார் ஆலயத்தில் மலர் கைங்கரியம் செய்து வருபவன் எனத் தெரிந்தது. தங்க இடமிருக்குமா என்று கேட்க, சேந்தன் அமுதன் என்ற அந்த வாலிபன் அவன் வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமாறு கூறினான். அவனுடன் வீட்டுக்குச் சென்ற வந்தியத்தேவன் அவனுடைய தாயார் காது கேளாத, வாய்பேச முடியாத பெண்மணி என்று தெரிந்துகொண்டான். சேந்தன் அமுதனிடம் கோட்டையைப் பற்றிய விவரங்கள் கேட்டு அறிந்தான். கோட்டைக்குள்ளே சுந்தர சோழர், பழுவேட்டரையர்கள், முதன்மந்திரி அநிருத்தர், இளவரசர் மதுராந்தகர் அரண்மனைகளும் மற்றும் அதிகாரிகள் வசிப்பிடங்களும் துர்க்கைக் கோவிலும் கணிகையரும் இருப்பதாகக் கூறினான் சேந்தன் அமுதன். கோட்டைக் காவலர் சின்ன பழுவேட்டரையரின் மகளை மதுராந்தகர் மணந்திருப்பதாகவும் அதற்குப் பிறகு அவரின் குணம் சிறிது மாறிவிட்டதாகவும் கூறினான். வெகு சுவையான உணவை உண்ட வந்தியத்தேவன் அயர்ந்து உறங்கினான். இதற்கிடையில், வந்தியத்தேவன் கிளம்பிப்போன பிறகு திருமலையப்பன் என்னும் ஆழ்வார்க்கடியான், குதிரை வாங்கி வந்த பணியாளோடு பேச ஆரம்பித்தான். தன் பெயர் இடும்பன்காரி என்று அறிமுகப் படுத்திக்கொண்ட அந்தப் பணியாள் தன் கை விரல்களால் மீன் போன்ற முத்திரையைக் காட்ட, ஆழ்வார்க்கடியான் அதைப் புரிந்து கேள்வி கேட்டபோது ஒன்றுமில்லை என்று மறுத்துவிட்டான். ஆழ்வார்க்கடியானிடம் போக்குக் காட்டி அவன் விலகிச் சென்ற சமயத்தில் ஆழ்வார்க்கடியான் மரத்தின் மேல் ஏறிக்கொண்டு திரும்பவும் அவ்விடம் வந்த இடும்பன் காரியைக் கண்காணிக்க ஆரம்பித்தான். வெகுநேரம் கழிந்த பின்பு சோமன் சாம்பவன் என்னும் புதியவன் வந்து மீன் முத்திரையைக் காட்ட, இருவரும் கிளம்பித் திருபுறம்பியம் என்னும் பகைவனின் பள்ளிப்படைக்கு ரகசியமாகச் செல்லவேண்டுமெனப் பேசிக்கொண்டே கிளம்பினர். (பள்ளிப்படை என்பது பழந்தமிழகத்தில் போர்க்களத்தில் உயிர் துறந்த வீரர்களுக்கு எழுப்பப்படும் நடுகல்லும், தெய்வமும் இணைந்த கோயிலாகும்). பாண்டியருக்குப் பகை நிலையில் நின்று போரிட்ட பல்லவ மன்னனின் துணைவன் கங்க மன்னன் பிருதிவிபதி நினைவாக எழுப்பப்பட்ட திருபுறம்பியம் பள்ளிப்படைக்கு ஆழ்வார்க்கடியான் வந்து சேர்ந்து இருட்டும்வரை மறைந்து இருந்தான். பின் இருவர் இருவராக ஆறுபேர் வந்து கூடினர். பின்னர் சோமன் சாம்பவனும் இடும்பன்காரியும் வந்து இணைந்து கொண்டனர். ரவிதாஸன் என்பவன் இலங்கைக்கும் தொண்டை மண்டலத்துக்கும் இரு குழுவாகப் பிரிந்துச் சென்று பகைவர்களை ஒரே நேரத்தில் கொல்ல வேண்டுமென்றும், அதற்கான பொருளைச் சோழரின் கருவூலத்திலிருந்தே எடுத்து வந்ததாகக் கூறி பொன் நாணயங்களைக் காண்பித்தான். இடும்பன்காரி பணியாள் போல சம்புவரையர் மாளிகையில் நடித்து, முதல்நாள் நடந்த சம்பவங்களைத் தெரிந்து கொண்டதைக் கூறினான். ஆழ்வார்க்கடியான் மற்றும் வந்தியத்தேவனைப் பற்றிக் கூறியபோது ரவிதாஸன், ஆழ்வார்க்கடியான் செம்பியன் மாதேவியின் ஒற்றனாய் இருக்கலாம் எனக் கூறி அவனை எங்கு பார்த்தாலும் கொன்று விடுமாறு கூறினான். அப்போது ஆழ்வார்க்கடியான் இருந்த இடத்தில் சலசலப்புத் தோன்ற, நெருங்கி வந்தவர்கள் மீது வெளவாலை எறிந்துவிட்டு ஆழ்வார்க்கடியான் இருளில் மறைந்து தப்பினான். வந்தியத்தேவன் காலையில் புத்துணர்ச்சியுடன் நன்கு அலங்கரித்துக்கொண்டு, அரசரைத் தரிசிக்கக் கிளம்பினான். கோவிலுக்கு பூக்கூடையுடன் கிளம்பிய சேந்தன் அமுதனிடம் பேசிக்கொண்டே, குதிரையை அங்கேயே விட்டுவிட்டு கோட்டை வாசலுக்கு நடக்க ஆரம்பித்தனர். சேந்தன் அமுதனின் அன்னையின் தமக்கை இறந்து விட்டார் எனவும் தமையனார் ஒருவர் கோடியக்கரையில் குழகர் கோயிலில் கைங்கர்யம் செய்வதாகவும் கூறினான். சேந்தன் அமுதனின் மாமன் மகளான பூங்குழலி நன்கு பாடுவாளெனவும், அவள் பாடினால் சமுத்திரமும் காட்டு விலங்கும் கூட மெய்மறந்து போகுமெனவும் சிலாகித்தான். சேந்தன் அமுதனுக்கு பூங்குழலி மீது இருந்த ஆசையை உணர்ந்து கொண்ட வந்தியத்தேவன், “திருமணம் செய்து கொள்ளலாமே” என்று கிண்டல் செய்ய, சேந்தன் அமுதன் அதற்கு, பூங்குழலியின் சம்மதத்திற்குக் காத்திருப்பதாகக் கூறினான். பழுவேட்டரையரின் திருமணத்தைப் பற்றிப் பகடியாய் வந்தியத்தேவன் பேச, சேந்தன் அமுதன் அதைக் கண்டித்தான். கோட்டைக்குள் செல்லும்போது இத்தகைய பேச்சு ஆபத்தை விளைவிக்கும் என எச்சரித்தான். பழுவேட்டரையர்களை எக்காரணத்தைக் கொண்டும் பகைத்துக் கொள்ளக் கூடாது எனவும், அவர்கள்தான் இங்கு அதிகார மையம் என்பதையும் புரிய வைத்தான். பழையாறையிலிருந்த சுந்தர சோழரைக்கூட, வீரபாண்டியனின் மரணத்துக்குப் பிறகு பாண்டியர்களால் ஏதாவது ஆபத்து நேரலாம் என்பதால் தஞ்சையில் தங்கள் பாதுகாப்பில் பழுவேட்டரையர்கள் வைத்திருப்பதாகக் கூறினான். இரு கால்களும் உணர்ச்சியற்று இருப்பதால் சக்ரவர்த்தியான சுந்தரசோழர் எங்குமே செல்ல முடியாது என்றும் வருந்தினான். பழுவேட்டரையர்களின் அதிகாரத்தில் ஒட்டுமொத்த நாடும் இருப்பதால்தானே நாட்டுக்கு எதிரான சதியில் ஈடுபடுகிறார்கள் என உள்ளுக்குள் மருகிய வந்தியத்தேவன், சேந்தன் அமுதனிடம் விடைபெற்றுக் கொண்டு தன்னுடைய மனக்கோட்டைகளுடன் கோட்டை வாசலை நெருங்கினான். சவிதா

அடிக்கும்போதும் வராத அப்பா

அடிக்கும்போதும் வராத அப்பா

‘அப்பனை முழுங்கின சனியன்’ என்றுபாட்டி திட்டும்போதெல்லாம்என் தோழிகளின் அப்பாக்களைநினைவு கூர்வேன்அவ்வளவு உயரமாக இருக்கும் அப்பாவைநான் எப்படி விழுங்க முடியும் என்றுபுரியாமல் விழித்துவிட்டுபாட்டியிடம் கேட்டிருக்கிறேன்சிலசமயம் பாட்டி அடிப்பதுண்டுசிலசமயம் அலுப்பதுண்டுசிலசமயம் என்னை அடித்துவிட்டுஅவளும் அழுவாள்ஆனால் நான் எப்போதும்அப்பா என்றுதான் அழுதிருக்கிறேன்அப்பா என்று சொல்லி அழதே என்றுமேலும் அடித்திருக்கிறாள் பாட்டிஆனால் ஒருமுறைகூடஅப்பா வந்ததே இல்லை. பவித்ரா பாண்டியராஜூ

சாகாவரம் தேடு

சாகாவரம் தேடு

என் மனதுள் நுழையமுனைந்து முனைந்து என்னால்விரட்டப்படாமல்வாசலில் நிற்பவனே!! உனது அன்பின் ஆழம்மாவலி கங்கையின் நீளத்திலும்நீளமானதுஅறிவேன் நன்கு. என் விழிகளில் விழி நுழைத்துமுகம் புகழ்ந்துபருவத்தின் மீது புராணம் பாடிபாதச்சுவடுகளின் மீதுலவுகிறாய் என் செய்வேன்?உன் மீதுபரிதாபம் மட்டுமேபட முடிகிறது உலகம் நானென்கிறாய் – உலகவிந்தை நானென்கிறாய்கவிதைகளும் காட்சிகளும்அனைத்தின்பமும் நானென்கிறாய்எத்தனை பொய்!!! பகலின் இரவுகளில்நாடு கடத்தப்பட்டுகாடுகளின் சுதந்திரச் சிறைகளில்மனித இயந்திரங்களாய்இருநூறாண்டுகள் இருளுக்குள் உழலும் மக்கள்கூட்டத்திலிருந்துஎழுந்து வந்தவன் நீநினைவுகளை ஞாபகத்திற்கழை. எவனெவன் வாழ்வுக்கோ உதிரம் சிந்திஉழைத்து மரிக்கும்அறியாமைகளுக்குஉனை விட்டால் ஒளிப்பிழம்பு யார்? உலக விழிகளால்மறுதலிக்கப்பட்ட அந்த உலகம்உன்னிடம் எதையெதையோபார்த்திருக்கிறது!!! அதன்காய்ந்து வறண்டதொண்டைகளில்தாகம் ஏக்கம்பசி கனவு! விழிகளுக்கு மிக அருகாமையில்விழித்து நிற்கும்பொறுப்புகள் கடமைகள் துறந்துமேல் வர்க்க இளைஞனாய்வாலிபத்தைசல்லாபத்தி லிடுகிறாய். எத்தனைத் துயரேற்றாள்உன் தாய் உனை ஈன; உனை வளர்க்க??எத்தனை இடர் கடந்தார்உன் தந்தை நீ பள்ளி செல்ல??எத்தனை துன்பமுற்றமக்கள் கூட்டம் உன் மண்ணில்?? விருப்பமில்லா விடுமுறையில் உன்ஏழையூர் விரைகையில்அம் மலையக மனிதரின் விழிகளில்இல்லாமையும் இயலாமையும்இணைத்திசைக்கும்துயர கீதங்களைக்கேட்டிருக்கிறாயா? ஒழுகும் கூரைகளின் கீழ்உறக்கங்களை வழியவிட்டஇரவுகளின் அழுகையொலிகள்எட்டியிருக்கறதா உன் செவிகளுக்கு? பசுமை அடர்ந்த உயர்ந்த மண்ணில்தாழ்வுடைய வறண்டவாழ்வின் சுமைகளைத்தராசிலிட்டிருக்கிறாயா? இனத்தால் பொருளால்சாதியால் நிறத்தால்விலக்கப்பட்டவர்களுக்குவிடுதலைக்காய் முழங்கப்போகும்குரல் யாருடையது?? பரம்பரையைப் பரிசளித்து வளர்த்தமண்ணை மூழ்கடிக்கும்அதிகாரங்களுக்கெதிராய்நிமிர்வது யார்??விடைகாணா வினாக்கள்ஆயிரமிருக்க நீயோ…..வலிமையை இளமையைஎன் நடைபாதையெங்கும்பூக்கள் விரிக்கச் சிந்திக் கொண்டிருக்கிறாய் இளமையின் சுகிப்பைவியர்வையூரியகருப்பு மண்தந்த எழுத்துக்களால்அலங்காரப்படுத்துகிறாய். எப்போது அவர்களின்அழுகை தடுக்கும்ஆயுதம் செய்ய உன் அறிவைக்கருவாக்கப் போகிறாய்??? இங்கு உன்னையும் என்னையும்இணைத்த இப்பெரும்பல்கலைகழக மெனும்அறிவாலயம்மனிதர்களுக்கான மனிதர்களைஉரு செய்யவே உழைக்கிறது. இங்கு மனிதனாவது சாதரணம்!மனிதர்களுக்கான மனிதராவதேசாகாவரம். நீசாகாவரம் பெறுஅப்போதுஉன் காதல்மறுபரிசீலனைக்குட்படலாம்!! ஏனெனில்நான் நம் மண்ணையும் மக்களையுமேசிந்தித்துக் கொண்டிருக்கிறேன் எஸ்தர், மலையகம், இலங்கை

பொன்னியின் செல்வன் – 4

பொன்னியின் செல்வன் – 4

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் என நினைத்திருப்போம். ஆனால் சில சம்பவங்கள் நம் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றிருக்கும். வந்தியத்தேவனுக்கு அந்த இரவு அப்படித்தான் அமைந்திருந்தது. முக்கியத்துவம் வாய்ந்த அனைவரும் ஒரு இடத்தில் ஒன்று கூடியிருந்ததும், உற்ற நண்பனான கந்தமாறன் தன்னிடம்கூட ஏதும் கூறாமல் தன்னைத் தனியே படுக்க வைத்துவிட்டு வந்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதும், தன்னைப் பற்றி எச்சரிக்கையாகப் பேசியதும் வந்தியத்தேவனை அங்கு நடப்பவற்றை உற்றுக் கவனிக்கத் தூண்டின. பழுவேட்டரையர், சாம்ராஜ்யத்தின் அரசுரிமையைப் பற்றிப் பேச ஆரம்பித்திருந்தார். ஏற்கனவே இளவரசராக இருப்பவர் சுந்தரசோழரின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனபோதும், பழுவேட்டரையர் தன்னுடன் குழுமியிருந்தவர்களிடம் அரசைக் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆதித்த கரிகாலன் காஞ்சியில் பொன்மாளிகை கட்டிவைத்துக் கொண்டு அதற்கு சுந்தரசோழரையும் தாயையும் அழைத்துக் கொண்டிருப்பது யாருக்கும் உவப்பில்லை எனக் கூறினார். மேலும் ஈழத்துக்குப் போர் புரியச் சென்றிருக்கும் அருள்மொழிவர்மன், படையெடுத்துச் சென்ற இடத்திலேயே உணவுக்கு ஏற்பாடு செய்யாமல் தஞ்சையிலிருந்து அனுப்பச் சொல்வது சரியில்லை என்றும், அவ்வாறு அவர் கட்டாயப்படுத்தப் படுவதால், நிதி நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பிலுள்ள அவரும் அவருடைய தம்பியான சின்ன பழுவேட்டரையரும் அதிகமான வரிகளை விதிப்பதற்குண்டான அவசியம் நேர்வதாகச் சொல்லிக் குறைப்பட்டார். இதற்கெல்லாம் மேல் சுந்தரசோழரின் உடல்நலம் கெட்டுக் கொண்டிருப்பதையும், அடுத்த வாரிசு யாரென முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் அரசு நலனில் அக்கறையுள்ள நமக்கு உண்டென்றும் அவர் சொல்லும்போது கூட்டத்தில் உள்ள அனைவரும் அதிர்ந்தனர். ஏற்கனவே வாரிசாய் உள்ள ஆதித்த கரிகாலனைப் பற்றிக் கேட்க, அவர் முந்தைய நாட்களில் நடந்த பட்டத்திற்குண்டான உரிமைகளைப் பற்றி விரிவாக கூறினார். ஆதித்த கரிகாலனை விட சுந்தரசோழரின் பெரியதகப்பனான கண்டராதித்தர் – செம்பியன் மாதேவி தம்பதியருக்குப் பிறந்த மதுராந்தகனுக்கே அதிக உரிமை உண்டென அவர் அழுத்தந்திருத்தமாகச் சொன்னபோது, யாராலும் மறுத்துப் பேச முடியாத நிலை ஏற்பட்டது. சுந்தர சோழர் இதைப்பற்றி எதையும் பேசத் தெம்பிலாது அவர் மகள் குந்தவை தேவியினால்தான் எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி அதிருப்தியாகத் தெரிவித்தபொழுது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு, பழுவேட்டரையரை நோக்கி ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. பழுவேட்டரையர் அங்கு கொண்டு வந்து வைத்திருந்த மூடுபல்லக்கைப் பற்றியும், குந்தவை தேவியைப் பழி கூறும் பழுவேட்டரையர், தான் புதிதாக மணந்துகொண்ட மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பதும், இவ்வளவு முக்கியமான கூட்டத்தின்போதுகூட அவரை உடன் கூட்டி வந்திருப்பதையும் சுட்டிக் காட்டினர். பழுவேட்டரையர் சினம் காட்டாமல், முதலில் ராஜாங்க விஷயங்கள் முடிவானதும் அதைப்பற்றிப் பதில் கூறுவதாகக் கையமர்த்தினார். பிறகு மதுராந்தகன் முடிசூடுவதைப் பற்றியான பேச்சுகள் எழுந்தன. அதற்கு ஆதரவு தருபவர்கள் யார் யாரெனத் தெரிந்துகொள்ளப் பழுவேட்டரையர் முயன்றார். அப்போது சம்புவரையர் ஒரு சந்தேகத்தை முன் வைத்தார். மதுராந்தகனை செம்பியன் மாதேவி ஒரு சிவக்கொழுந்தாகவே சிறுவயது முதல் வளர்த்து வருகிறார். ராஜ்ய விவகாரங்களில் தலையிடாமல சிவ காரியங்களில் மட்டுமே நாட்டம் செலுத்துபவராகவே மதுராந்தகனை அனைவரும் இவ்வளவு நாள் பார்த்து வருகிறார்கள். இப்பொழுது வாரிசுப் போட்டிக்கு முதலில் செம்பியன் மாதேவி சம்மதிப்பாரா? மற்றும் மதுராந்தகனின் விருப்பம் என்னவென்று தெரியாமல் நாம் கூடி முடிவெடுத்துவிட்டு, பின்னர் அரசரிடம் அவப்பெயர் வாங்கிவிடக்கூடாதே என்றெல்லாம் தன் அச்சத்தைத் தெரிவித்தார். அப்பொழுது பழுவேட்டரையர், யாரும் அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும், அதற்குரிய ஆதாரத்தைக் காண்பிப்பதாகவும் கூறி “மதுராந்தகரே! வெளியில் வாருங்கள்” என்று கூற, பல்லக்கைவிட்டு வெளியே வந்து அனைவரையும் வணங்கிய மதுராந்தகனைப் பார்த்து அனைவரும் திகைத்தனர். பின்னர் மதுராந்தகனை வாழ்த்தினர். இவற்றை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனும் அதிர்ந்து, ‘இதற்காகத்தான் ஆழ்வார்க்கடியான் ஒற்றறிய வந்தானா?’ என்று நினைத்தபடி ஆழ்வார்க்கடியான் இருந்த இடத்தைப் பார்க்க, அங்கு யாருமில்லை. இதற்குமேல் இங்கு நின்று கவனித்துப் பார்க்க ஏதுமில்லை என்று தெரிந்து கொண்டவன் அவனுடைய இடத்தில் போய்ப் படுத்து உறங்க முயற்சித்தான். ஒரு பெரும் அரசியல் சுழலில் தான் சிக்கிக்கொண்டதாய் உளைந்தவனால் அவ்வளவு சீக்கிரம் உறங்க முடியவில்லை. காலையில் கந்தமாறன் வந்து எழுப்பிய பிறகே வந்தியத்தேவனால் எழ முடிந்தது. எழுந்ததும், முதல்நாள் நடைபெற்ற சம்பவங்களை நினைத்துக் கொண்டவன் உடனே அங்கிருந்து கிளம்புவதாகக் கூறினான். கந்தமாறன் முதலில் வருந்தினாலும், பெரிதாக எதுவும் சொல்லவில்லை. கொள்ளிடக்கரை வரையிலும் அவனை வழியனுப்ப கூடவே வந்தான். வந்தியத்தேவன், கந்தமாறன் முன்பே அவன் தங்கை மணிமேகலையைப் பற்றிக் கூறியதை நினைவுபடுத்தி, அவளைச் சரியாகப் பார்க்கமுடியவில்லை என வருந்தினான். கந்தமாறன் தர்மசங்கடத்துடன், அவன் தங்கை மணிமேகலையை வந்தியத்தேவனுடன் முன்னம் இணைத்துப் பேசியதை மன்னித்துவிடுமாறு வேண்ட, வந்தியத்தேவன் தன்னைப் போன்ற ஓர் ஏழை இதை எதிர்பார்த்திருக்க வேண்டியதுதான் எனக் கூறினான். கந்தமாறன் எந்த உண்மையையும் அவனிடம் சொல்ல முடியாததற்கு வருந்தினான். அதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன், அவனை சமாதானப்படுத்தி விடைபெற்றான். அவன் குதிரையை ஒரு பணியாள் கொண்டுபோக, இன்னொரு குதிரையை அக்கரையில் வாங்கிக் கொடுக்க இன்னொரு பணியாள் உடன் வர, வந்தியத்தேவன் படகில் ஏறியபோது, இன்னொருவரும் அவசரமாக வந்து ஏறினார். அது ஆழ்வார்க்கடியான். படகில் ஒரு வீர சைவரும் இருக்க, வழக்கம்போல இருவரும் சண்டை போட்டுக்கொண்டே அக்கரையில் இறங்கினர். வந்தியத்தேவனுக்குக் குதிரை வாங்கிக்கொண்டு வருவதற்காக வந்த பணியாள் கிளம்பிவிட, ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் ஒருவரையொருவர் நேற்று நடந்த விஷயங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ள முயன்றார்கள். இருவருமே ஒருவரை ஒருவர் ஒற்றறிய முயன்றதால், அவர்கள் இருவரால் எதையும் அறிந்து கொள்ள முடியாமல் ஏமாற்றமே மிஞ்சியது. மூடுபல்லக்கில் வந்த பழுவேட்டரையரின் ராணியிடம் கடிதம் கொடுக்கச் சொன்ன ஆழ்வார்க்கடியானுடைய செயல் தவறானது என்று வந்தியத்தேவன் சொல்ல, அவன் மறுத்தான். ‘மதுரைக்குப் பக்கத்தில் என்னுடைய பெற்றோர் எடுத்து வளர்த்த குழந்தைதான் நந்தினி. ஆண்டாளைப் போன்று பக்தியில் சீலமாய்த் திகழ்ந்தவள். வடநாட்டுக்கு நான் யாத்திரை சென்றிருந்தபொழுது, சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் போர் நடைபெற்றது. அப்பொழுது தப்பித்து ஓடிவந்த அடைக்கலம் புகுந்த வீரபாண்டியனின் மரணத் தறுவாயில் நந்தினி உதவி செய்தபொழுது, படைவீரர்கள் உட்புகுந்து அவனைக் கொன்றுவிட்டார்கள். பழுவேட்டரையர் அவளைப் பிடித்து வந்து கட்டாயமாக மணம் புரிந்திருக்கிறார். அதற்குப் பிறகு நான் அவளைச் சந்திக்க முடியவில்லை. அவளைத் தனியே சந்தித்துப் பேசவும், அவள் விரும்பினால் விடுதலை செய்து போகவும் முயன்று கொண்டிருக்கிறேன்’ என ஆழ்வார்க்கடியான் முடித்தான். இதைக் கேட்டவுடனே வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானைப் பற்றிய தன் தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டான். எனினும், பல்லக்கிலிருந்தது மதுராந்தகன்தான் என்பதைச் சொல்லவில்லை. ஆனாலும் விளையாட்டுப் போல, ‘சுந்தரசோழருக்கு அடுத்து யார் பட்டத்துக்கு வருவார்?’ என்ற கேள்வியைக் கேட்டு ஆழம் பார்த்தான். ஆனால் ஆழ்வார்க்கடியான் அசராமல், இதெல்லாம் குடந்தை ஜோதிடர்தான் சொல்வார் எனக் கூறி, ஜோசியரின் பெருமைகளையும் கூறினார். குதிரை வந்தவுடன் வந்தியத்தேவன் ஜோசியர் இல்லத்துக்குச் சென்று ஆருடம் பார்த்துவிட்டே தன் பயணத்தைத் தொடர்வது என்று முடிவு செய்துவிட்டே கிளம்பினான். அதே சமயத்தில் அரிசிலாற்றின் கரையில் ஒரு படகு சில பெண்களைச் சுமந்துகொண்டு வந்தது. படகில் இருந்து இரு முக்கியப் பெண்மணிகள் இறங்கினர். கொடும்பாளூர் இளவரசி வானதியும், சோழவம்சக் குலக்கொடி குந்தவை தேவியும் படகிலிருந்து இறங்கினர். குடந்தையில் தங்களுக்கு முக்கியமான வேலை இருப்பதாகக் கூறி வானதியை மட்டும் அழைத்துக் கொண்டு குந்தவை கரையில் காத்துக் கொண்டிருந்த ரதத்தில் கிளம்பினாள். எங்கு செல்கிறோம் என்று கேட்ட வானதியிடம், குடந்தை ஜோதிடரின் வீட்டுக்குச் செல்லப் போவதாகக் குந்தவை கூறினாள். ரதத்தை ஒதுக்கி நிறுத்தச் சொல்லி சாரதிக்கு ஆணையிட்ட இளவரசியையும் வானதியையும் ஜோசியர் வரவேற்று அமர வைத்தார். வானதி சிறிது காலமாக அடிக்கடி மயக்கமடைவதையும், உற்சாகமற்று இருப்பதையும் பற்றித் தெரிந்துகொள்ள வந்திருப்பதாகக் குந்தவை கூறினாள். அக்காலத்தின் பழக்கமாக உயர்குடும்பங்களைச் சேர்ந்த ஜாதகங்களை ஜோசியர்கள் வைத்திருப்பது போன்று வானதியின் ஜாதகத்தையும் வைத்திருந்த குடந்தை ஜோதிடர், ஜாதகத்தை எடுத்துப் பார்த்து, நம்ப முடியாது திகைத்துப்போனார். குந்தவை என்னவென்று வினவ, ஜோதிடர் வானதியின் ஜாதகம் கொண்டிருந்த சிறப்புகளைப் பற்றிக் கூறலானார். வானதியை மணக்கப் போகிறவன் கடல் கடந்து போயிருக்கிறான். அவன் போர்களில் வென்று அரசனாக முடிசூடுவான். இந்தப் பெண்ணின் காலில் இருக்கும் தாமரையினால், பின்னால் ஒரு காலத்தில் பெரும் பட்டமகிஷிகள் கூட இவர் பாதம் பணியக் காத்திருப்பார்கள். இவரின் வயிற்றில் ஆலிலை ரேகை கொண்டுள்ளதால் இவருக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்குத் தடங்கல் என்பதே கிடையாது. உலகை வெற்றி கொள்வான்’ என்று கூறிக் கொண்டிருந்தபோதே வானதி மயங்கி வீழ்ந்தாள். அவளின் மயக்கத்தைத் தெளிவித்தவாறே வானில் இருக்கும் வால்நட்சத்திரத்தைப் பற்றிய தன் சந்தேகத்தைக் குந்தவை கேட்டாள். ஆனால், ஜோசியர் அதற்கு சரியான மறுமொழி அளிக்காமல் மழுப்பி விட்டார். விழித்த வானதிக்கும் குந்தவைக்கும் அம்மன் பிரசாதத்தை அளித்த ஜோசியரிடம் வானதி, குந்தவை தேவிக்கு அமையப்போகும் கணவரைப் பற்றிக் கேட்டாள். ‘எங்கிருக்கிறார்? எப்படி வருவார்?’ என்று வானதி கேட்டபோது, ஜோசியர் சொல்வதற்கு முன் குறும்பாக, குதிரையில் ஏறி வருவார், அசகாய சூரர் என்றெல்லாம் குந்தவை பதில் அளித்துக் கொண்டிருக்க, நிஜமாகவே குதிரை வரும் சத்தம் கேட்டது. வாசலில் குழப்பமான ஒலிகள் கேட்டன. கதவைத் திறந்து கொண்டு வந்தியத்தேவன் உள் நுழைந்தான். குந்தவையின் கண்களும் வந்தியத்தேவனின் கண்களும் சந்தித்துக் கொண்டன. குந்தவையை ஏறிட்ட வந்தியத்தேவன், உடனே சமாளித்துக்கொண்டு சீடனை கடிந்தபடி வெளியே சென்றுவிட்டான். குந்தவையும் வானதியும் விடைபெற்று வெளியில் வந்தபொழுது மன்னிப்பும் கேட்டான். அவர்களின் ரதம் கிளம்பிய பிறகு ஜோதிடரிடம் அவர்கள் யாரெனத் தெரிந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. வந்தியத்தேவனின் ஜாதகத்தை வைத்திருந்த ஜோதிடர், அவனுக்குக் கடற்பயணம் வாய்க்குமெனினும், உயர்ந்த பதவிகள் அவனைத் தேடிவருமெனவும் ஆருடம் கூறினார். ஆழ்வார்க்கடியானைப் பற்றிக் குறிப்பிட்டபொழுது, அந்த அடையாளத்தில் திருமலையப்பனை மட்டுமே தெரியும் எனக் கூறினார். பொற்கழஞ்சுகளைச் சன்மானம் அளித்த பிறகு வந்தியத்தேவன் வழியெங்கும் இயற்கை எழிலை ரசித்தபடி தன் பிரயாணத்தைத் தொடங்கினான். தொடரும். சவிதா  

தேநீர் அழைப்பு

தேநீர் அழைப்பு

ஒரு தேநீரை எப்படிக் குடிப்பது?தேநீருக்குள்ளிருந்து மேலெழும் ஆவியைசில நிமிடங்களாவது பார்க்க வேண்டும் ;என்னுடன் பேசும்உன் விரகங்களுக்குஇதே வண்ணம்இதே சூடுதான் ; தேநீருக்குள் பிஸ்கட்டைநனைக்கும் போதுநிகழ்காலத்தின் பெருவெளியில்நம்மை ஒப்படைத்திருக்க வேண்டும்‌.அது நண்பனின் மனைவியைபொது இடத்தில் அணைப்பது மாதிரிசடாரென்று விலகி விட வேண்டும் ; என் ஆசைகளின் நிறம்உன் கன்னத்திற்குசிவப்பாய் கடத்தப்பட்டிருப்பதைப் போலதேநீரின் சூடு கோப்பைக்கு வந்திருக்கும்;கோபத்தில் திரும்பியிருக்கும்முகத்தை மெல்லத் திருப்புவதைப் போலஅந்தக் கோப்பையைக்கையாள வேண்டும்; எடுத்த உடனே குடித்துவிடக் கூடாது.முத்தமிடுவதற்கு முன்முகத்தை உற்றுப் பார்ப்பதைப் போல்நீ மொத்த உலகத்தையும்பார்த்தாக வேண்டும்;நாசியில் ஏறிய தேநீரின் நறுமணத்தைமல்லிகையின் நெடியெனஉயிருக்குள் பத்திரப்படுத்த வேண்டும்; முதல் மிடறைக் குடித்த உடனேபாராட்டி விடக் கூடாது.அதுமுதல் முத்தம் முடிந்த உடனேபேசுவதற்கு நிகரானது ; கோப்பையைஅவ்வப்போது கீழே வைக்க வேண்டும்.‘போடா ‘என்றுதள்ளி விட்டபடியேசாய்வதைப் போல்கீழே வைத்திருக்கும் போதும்விரல்கள் கோப்பையில்இருக்க வேண்டும்; யாருடனாவது பேசிக் கொண்டேதேநீர் பருகும் போதுஉன்னை ஒரு கையால் அணைத்தபடியேஅலுவலக வேலைகளைகணிணியில் பார்ப்பதைநினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்; தேநீர்ச் சூடு ஆறுவதற்குள்குடித்து முடித்திருக்க வேண்டும்;தேநீரைச் சுவைப்பதுஓட்டப்பந்தயமோகலவியோஅல்ல.இரண்டுக்கும் இடைப்பட்டஆழமான முத்தம் ; கோப்பை கையிலிருக்கும் போதுதட்டு காலியாகத்தான்இருக்கும்.உன்னை மடியில் போட்டிருக்கும் போதுஅநாதையாய்ச் சிணுங்கும்தொலைபேசி அழைப்புகளைப் போலஅதைக் கண்டு கொள்ளக் கூடாது; எப்போதும் ,கொஞ்சம் தேநீர்கோப்பையில்மீந்திருக்க வேண்டும்.ஒரு தேநீரின் கடைசி மிடறுஇன்னொரு தேநீரின்முதல் மிடறுதான்என்பதை உணர்ந்தாக வேண்டும்‌ ; ஓர் ஆழமான கலவிக்குப் பிறகுதலைகோதி விடுவதைப் போலதேநீர் பருகி முடித்த பிறகும்சில நொடிகள்கோப்பையைக்கையில் வைத்திருக்க வேண்டும்; நீ நினைப்பது சரிதான்.யாரையும்விளையாட்டாகவோஒப்புக்காகவோகடமைக்காகவோபழக்க தோஷத்திலோதேநீர் பருக அழைத்து விடக்கூடாது.ஒரு தேநீர் அழைப்புதேநீரோடு முடிந்து விடுவதில்லை… மானசீகன்

வாசிப்பைத் திசை திருப்பிய வண்ணதாசன்

வாசிப்பைத் திசை திருப்பிய வண்ணதாசன்

வண்ணதாசன் பிறந்தநாள் சிறப்புப் பதிவு 1982ல் நான் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது எங்கள் அக்கிரஹாரத்தினர் அனைவரும் மெஜுரா காலேஜ் அல்லது அமெரிக்கன் காலேஜில்தான் சேருவார்கள். அவை இரண்டும் தன்னாட்சிக் கல்லூரிகள், அதிலும் மெஜுரா காலேஜில் டபிள் மேஜர், கெமிஸ்ட்ரி பேராசிரியர்களாக நண்பன் விஸ்வநாத்தின் மாமா நடராஜன், மற்றொரு நண்பர்களான கோபால் – வாசு என்ற இரட்டையர்களின் மாமா மீனாட்சிசுந்தரம் ஆகியோர் இருந்தது போன்ற காரணங்களால் நான் பிடிவாதமாக தியாகராஜர் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தேன். எங்கள் தெருவினரில் 99 சதவிகிதத்தினர் தெப்பக்குளம் பக்கம் போனதேயில்லை. நான்தான் முதல் ஆள். நான் சேர்ந்ததால் கண்ணனும் அங்குதான் சேர்ந்தான் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அவனும் சேர்ந்தான். கூடவே மேலே சொன்ன கோபால் – வாசு இரட்டையர்களும். படிப்பு ஒரு பக்கம், வாசிப்பு ஒரு பக்கம் என்று ஓடிக் கொண்டிருந்தது. மாதநாவல் ஒன்றில் பாலகுமாரனின் ஏதோ ஒரு நதி, சுப்ரமண்ய ராஜுவின் எங்கோ ஒரு இரவில் இரண்டையும் சேர்த்துப் போட்டுக் கலக்கினார்கள். இந்துமதி ஆசிரியராக இருந்த பிரியம்வதா காமிக்ஸில் சுஜாதாவின் நைலான் கயிறு வந்தது. ராணிமுத்துவில் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்க்கும் சிறுவர்களை வைத்து சுஜாதா எழுதிய அன்று உன் அருகில் வந்தது. மகரயாழ் மங்கை, ஆலவாயழகன், திருச்சிற்றம்பலம் என்று வரிசையாக ஜெகச்சிற்பியனின் சரித்திர நாவல்களாக அவரது ஒரு ரசிகரிடமிருந்து ஓசி கிடைக்கும். வேறொரு புறம் அலைஓசை, பார்த்திபன் கனவு என்று ஓசி கிடைக்கும். புஷ்பா தங்கதுரை, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் பற்றி சொல்லவே வேண்டாம். எங்கும் கிடைக்கும். இன்ஸ்பெக்டர் சிங், ஏதோ ஷெர்லாக் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு துப்பறிவார். இப்படியாகக் காலம் போய்க் கொண்டிருந்தது. கண்ணனின் அத்தை வீடு அப்போது கிருஷ்ணாராயர் தெப்பக்குளம் அனுமார் கோவிலுக்கு எதிரில் இருந்தது. அனுமார் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த பெட்டிக் கடையில் மாத நாவல்கள் வாங்கிக் கொண்டு அப்படியே கண்ணனின் அத்தை வீட்டிற்கும் போய் வருவோம். அந்தப் பெட்டிக்கடையில் கல்பனா இதழில் சுஜாதாவின் மண்மகனை வாங்கி கடை வாசலிலேயே நின்று படித்தது நேற்று நடந்தது போல் இருக்கிறது. கண்ணனின் அத்தை பையன் ஐஓபியில் வேலை பார்த்தார். அவருக்கு 3 – 4 வயதில் ஒரு பெண்குழந்தை. அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். இந்த முறை ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசை. வியாழக்கிழமை தோறும் மாலையில் பூஜை செய்து பாயசம் நைவேத்யம் செய்து அதை பையன்களுக்குத் தந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று யாரோ அந்த மன்னிக்கு பரிகாரம் சொல்ல, அவர் வாராவாரம் பூஜை செய்ய ஆரம்பித்தார். பாயசம் சாப்பிட நான், கண்ணன், ரவி, பாலன், கோபால், வாசு எல்லோரும் போவோம். கடைசியில் இரண்டாவதும் பெண் குழந்தைதான் பிறந்தது வேறு விஷயம் ! ஆனால், அவர்கள் வீட்டில்தான் எனக்கும், கண்ணனுக்கும் வாசிப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் ஒரு அறிமுகம் கிடைத்தது. நாங்கள் பூஜை முடியும் சமயத்திற்குப் போவோம். பத்து நிமிடங்கள் காத்திருப்பதாகவே பெரும்பாலும் அமையும். அந்த வீடு ஒரு வக்கீலுக்குச் சொந்தமானது. டிவிஎஸ் கோவாப்பரேட்டிவ் ஸ்டோர்ஸ்க்கு அடுத்த வீடு. முன் போர்ஷனில் வக்கீல் வீடு. பின் போர்ஷன்களில் கண்ணன் அத்தையும், மற்றொரு குடும்பமும் குடியிருந்தார்கள். பூஜை நேரத்தில் வக்கீல் மாமியும், மற்றொரு குடும்பத்தின் மாமியும் வருவார்கள். அப்போது நாங்கள் கல்லூரிக்கு வந்து விட்டதால் இயல்பாகவே எதிர்பாலினரை கவனிக்கும் குறுகுறுப்பு வந்துவிட்டது. கண்ணன், கோபால், வாசு ஆகியோர் மனைமாட்சியிலிருந்து நேரே எழுந்து வந்தவள் போல் இருந்தாள் என்பாரே சுஜாதா, அது மாதிரி மனைமாட்சி லுக்கில் யாரேனும் இருந்தால் உருகிவிடுவார்கள். நான், ரவி, பாலன் மூவரும் ஜெயமாலினி மாதிரி இருப்பவர்களைத் தான் பார்ப்போம். வக்கீல் மாமி நடிகை சுமித்ரா ஜாடை. மற்றொரு மாமி சி.ஐ.டி.சகுந்தலா ஜாடை. சகுந்தலா மாமியின் கை உருண்டு திரண்டு பயில்வான் மாதிரி இருக்கும். மாமி குட்டைக் கை ரவிக்கை போட்டு கையின் திண்மையை இன்னும் சற்று enchance செய்வாள். சி.ஐ.டி. சகுந்தலா மாமி அவ்வப்போது என்னிடம் “நீங்க தெலுங்காளா? மராட்டிலதானே ராவ்னு வெப்பா ! கூடப் பிறந்தவா எத்தன பேர்“? என்பது மாதிரி சி.ஐ.டி கேள்விகள் கேட்பாள். நானும் மாமி,மாமி என்று ஓவராக பாசம் பொங்க, குஷியாக பதில் சொல்வேன். சுமித்ரா ஜாடை மாமியை நான் கண்டு கொண்டதே இல்லை. நீங்கள் எதிர்பார்த்தபடியே சி.ஐ.டி.சகுந்தலா மக்கு. வக்கீல் வீட்டு சுமித்ரா மாமி அறிவாளி. அதிலும், அந்த மாமி வண்ணதாசன் படிப்பவராக இருந்தார். ஒரு சுபயோக, சுபதினத்தில் கண்ணனுக்கு வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள் புத்தகத்தைத் தந்தாள். அதற்கு முன்பே அன்னம் நவ கவிதை வரிசையின் புலரி மூலமாக கல்யாண்ஜியாக அவரை எங்களுக்குத் தெரிந்தாலும், அவரது சிறுகதைகளைப் படித்ததில்லை. உண்மையிலேயே எங்கள் வாசிப்பைப் புரட்டிப் போட்ட எழுத்து அது. அந்த தனுமையை வாழ்க்கையில் மறக்க முடியுமா? தனலட்சுமியையும், ஞானப்பனையும். டெய்சி வாத்திச்சியையும், சைக்கிளில் வரும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணையும் கண் முன்னே நிறுத்தின எழுத்து. அவர்கள் எல்லோருமே நிஜம். அது வண்ணதாசனின் கல்லூரி நாட்களின் கதை என்பதை பின்னர் தெரிந்துகொண்டேன். ஞானப்பன் அவரது அறை நண்பராம். இந்த நல் உணவை தந்த நம் இறைவனைப் பாடுவோம் என்ற பாட்டும் நிஜம். நிஜம் தவிர வேறில்லை என்று சொல்லியிருந்தார் வண்ணதாசன். கண்ணனும், நானும் வண்ணதாசனைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தோம். எத்தனை கதைகள்… எல்லாமே மனதுக்கு மிக நெருக்கமாக, என் கதையாக, அல்லது எனக்கு மிகவும் நன்றாகத் தெரிந்தவர் ஒருவரின் கதையாக … இதை எழுதும் போதே சில பழைய பாடல்கள் கதை ஞாபகத்திற்கு வருகிறது… அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் வேண்டுமா? அன்பே வா…. அழைக்கின்ற தெந்தன் மூச்சே…, தென்றலே நீ செல்வாய் எங்கும் நில்லாமல் செல்வாய்…. என்று இலங்கை வானொலியை நினைவூட்டும் அற்புதமான கதை… அதிலும், நீ வரவில்லையெனில் ஆதரவேது… என்ற பாடல்… கண்டசாலா மாதிரி பாடும் சத்யம்… கடைசியில் கதையின் முடிவில் வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே…. இந்தப் பாடல்களில் எதை நினைத்தாலும், அல்லது கேட்டாலும், அந்தக் கதையும், வண்ணதாசனும் தானே நினைவிற்கு வருகிறார்கள் ! தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்களில் வரும், “எங்க அம்மையில்ல”. படிக்கும் போது அப்படிச் சிலிர்த்திருக்கிறேன். பின்னாளில் பலரும் மோகமுள்ளின் ”இதுக்குத்தானா பாபு?” என்ற வரியை சிலாகிக்கும் போதெல்லாம், என் மனம் டெய்சி வாத்திச்சியின், “தனலட்சுமி தான் வேணுமாக்கும்?” என்ற கேள்வியை நினைத்துக் கொள்ளும். கடைசி வரியில் ஒரு அழுத்தம் என்ற ஒரு அம்சத்தின் மீது எனக்கு ஒரு தனி காதல் வரக் காரணமாக இருந்தது வண்ணதாசனின் பல கதைகளின் கடைசி வரிகள்தான்.. தேர் நிலையத்துக்குள் இருந்து கோமுவை அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது…என்றொரு கடைசி வரி. போலாமா என்று என்னிடம் கேட்டாலும், போய்க்கொண்டே இருப்பவள் என்று அவளைப் பற்றித் தோன்றியது… என்றொரு கடைசி வரி.. வீட்டுக்கு ஒரு நாள் வாயேன் ராஜீ என்றேன். வருகிறேன் என்று கூடச் சொல்லவில்லை. என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதில் சந்தோஷம், என்று சொன்னாள். அது இவ்வளவு பெரிய விஷயமாகி விட்டிருக்கிறது அவளுக்கு ! என்றொரு கடைசி வரி.. ஈஸ்வரி ஓடையில் நின்றுகொண்டிருந்தாள், என்றொரு கடைசி வரி. எதை எழுத வேண்டும் என்கிறது போல, எதை எழுதக் கூடாது என்கிறதும் எனக்குத் தெரியாதா சின்னம்மா? எனக்கும் கொஞ்சம் புரிந்து எழுதுகிற வயதாகிவிட்டதில்லையா இப்போது? என்றொரு கடைசி வரி. இவை கடைசி வரிகளல்ல உண்மையில் வேறொரு கதையின் ஆரம்ப வரிகள் என்பதைப் புரிந்து படிக்கும் வயது எனக்கு வந்தபோது, நான் நல்ல வாசகனானேன்! [எனது ‘வாசிப்பு அறிந்ததும், அடைந்ததும் தொகுப்பிலிருந்து’] என் அன்பிற்குரிய வண்ணதாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும் வணக்கமும். முகப்பு ஓவியம்: கனலி கட்டுரை: ச. சுப்பாராவ், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்

கரைசேராப் படகுகள் – 12

கரைசேராப் படகுகள் – 12

கோபாலண்ணன் கொடுத்த பேப்பரில் இருந்த பேரும் மகான் சொன்ன பேரும் ஒன்றாக இருந்தது. சுப்புடு ஐயர் ‘சுவாதி’ங்கற பெயரை எழுதிக் கொடுத்திருந்தார். அதைப் பார்த்ததும் செந்தாமரை கலங்கினார். ‘மகான் சொன்னது போல எனக்கு ஏதாவது கஷ்டம் வருமோ?’ன்னு மனசு கலங்கினார். செந்தாமரை முகம் மாறி, வெளிறிப்போய் நிற்பதைப் பார்த்ததும், “வில்லிபுத்தூர் ராசகோபுரமும்  கரிகாலனும் தோத்துதான் போவாங்க என் ராசா கம்பீரமா நீ நின்னா.. ஏன் ராசா கலங்கி நிக்கற?”ன்னு கேட்ட பட்டம்மாவுக்கு, “ஒன்னுமில்ல ஆத்தா, மயிலம் மலை கணக்கா கல்லாட்டம்தான் இருக்கேன்.. நீ சோலிய பாரு ஆத்தா” என்று பட்டம்மாவை விரட்டி விட்டார் செந்தாமரை. “விடுப்பா செந்தாமரை.. ஒன்னும் நடந்திடாது. ஐயனாரப்பன் துணையிருக்கான்; போப்பா, போய் விசேசத்த பாரு. நான் போய் பொழுது சாயறச்சே வர்றேன்”னு சொல்லிட்டு கோபாலண்ணன் கிளம்பினார். டவுன்ல வாங்கிவந்த காப்பை யாருக்கும் தெரியாமல் பொஞ்சாதிகிட்டேயும் ஆத்தாகிட்டேயும் காட்டினார் செந்தாமரை. அந்தக் காப்பைப் பாத்ததும், “காணாதத கண்டாளாம் கண்டாங்கி கட்டனவ; போகும்போது போச்சாம் பவுசத்துப் போய்”ன்னு புலம்ப ஆரம்பிச்சா பட்டம்மா. “மாமா.. என்ன விலையிருக்கும்?”னு கேட்ட மரகதத்திற்கு, “பவுனு 50 ரூவா.. இந்தக் காப்பு அரைப் பவுனுக்குக்கூட. 30 ரூவா” என்று விளக்கமாகச் சொன்னார் செந்தாமரை. “காசு உன் சம்பந்தி குடுத்தாளா? அவதான் “எள்ளப் பிச்சு எழுவது பேருக்குப் பங்கு வைக்கறவளாச்சே”ன்னு சந்தேகமாகக் கேட்டார் பட்டம்மா. “ஆமாம் அத்தே, எனக்கு்ம் புலப்படல. இந்த மனுசன் சூது பேசறாரோன்னு தோனுது”ன்னு மாமியாளுக்கு ஒத்து ஊதினாள் மரகதம். “வேப்பமரத்துப் பேயும் ஆலமரத்துப் பிசாசும் ஆம்படையனை அடிக்க ஒன்னா சேந்துச்சாங்கற கதையா, ரெண்டு பேரும் ஒன்னா சேந்துட்டீங்களா? நான் விளங்கனா மாதிரிதான்”னு சொல்லிவிட்டு, பால் கறக்கப் பால் லோட்டாவை எடுத்துக் கொண்டு கிளம்பினார் செந்தாமரை. “வீட்டுக்கு மக்க, மனுசா எல்லாம் வருவாக. பொழுதோட மாட்ட ஓட்டியான்னு மாரியான்ட காலைலேயே சொன்னேன். மாடு வந்துதான்னு தெரியல” என்று புலம்பிக்கொண்டே கொட்டகைப் பக்கம் வந்தார் செந்தாமரை. “புனிதா இருக்கற அறையில மூனு பொட்டப் புள்ளையும் ஒன்னுக்கு மண்ணா உக்காந்து அரட்டை அடிக்கறாளுங்க. ஒன்னா வளந்ததனாலதான் பாசம் விட்டுப் போவல”ன்னு மரகதம் மனசுல நினைச்சுகிட்டாள். “மரகதத்தோட கூட பொறந்த கொடிங்க ரெண்டு பேரு இருக்காங்க. எங்க, அறுப்பை வச்சிகிட்டு ஊர் ஊரா  சொல்ல முடியல. அதான் பொண்ணு குடுத்த சம்பந்தியோட நிறுத்தியாச்சு”ன்னு மரகதம் வந்தவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தாள். திடீரென மேகங்களெல்லாம் தரையிறங்கி வந்திடுச்சி. இந்திரன் குதிரையாட்டம் நாலு காலு பாய்ச்சல காளையும் கன்னும் வீட்டுக்கு ஓடியாற, பெரும் புழுதி மூட்டம் கிளம்பியது. அந்த மண்வாசம், ஆயிரம் ரோசா தோட்டம் இருந்தாலும் இந்த வாசத்துக்கு ஈடாகாது. அக்கம் பக்கத்து மக்களெல்லாம் சீவிமுடித்து சிங்காரித்து ஒவ்வொருத்தரா சேர ஆரம்பித்துவிட்டார்கள். பக்கத்து வீட்டு வள்ளியும் எதிர்த்த வீட்டு சக்குபாயும் சமையல்கட்டுக்குக் கூடமாட ஒத்தாசைக்கு வந்தார்கள். அந்த நேரம் பாத்து வாசல்ல  “கடகட..கட”ன்னு அவுத்திமேட்டு மல உருண்டு வர்ற சத்தம் வாசலில். புனிதா மாமியார் வூட்டு சனங்க வந்தார்கள். “பட்டாட்டம் பொட்டி வண்டி, கட..கட.. கட்ட வண்டியோட சம்பந்தம் பேசியிருக்கே.. எங்க அடுக்கும் இந்த நியாயம்?”னு புலம்பினா பட்டம்மா. “த.. ஆத்தா புலம்பாம இரு, அவுங்க காதுல விழப்போவுது”ன்னு  அதட்டினார் செந்தாமரை. வந்தவர்களை வாங்கன்னு கூப்பிட்டு, காபி தண்ணி கொடுத்தாள் மரகதம். ஏழாம் காப்பு செய்றதுக்கு, கூடத்தைச் சுத்தம் பண்ணி, கூடத்துக்கு நடுவுல பச்சரிசி மாவுல கோலம் போட்டா. சுத்தி பட்டை பட்டையா கோடு போட்ட ஜமுக்காளம் போட்டு வந்தவர்களை உட்கார  வைத்தார்கள். அதற்குள் குப்புசாமி ரெட்டி, கண்ணு உடையாரு, கோவாலு நாய்க்கரு, பண்டாரம் எல்லாரும் வந்துட்டாங்க. வந்த ஆம்பளங்க ஒரு பக்கமாகவும் பொம்பளங்க ஒரு பக்கமாகவும் அடைஞ்சி உட்காந்தார்கள். மரகதம் மாமியாகாரி முகத்தைப் பார்த்தாள். “எலி மூஞ்சி என்ன வளையில தூக்கி வச்சிருக்கு?”ன்னு யோசிச்சவ, அவங்கள கேட்காம செய்யறம்னு கோபம் போலன்னு புரிஞ்சிகிட்டு, “அத்தை, அப்பறம் என்ன செய்யணும்னு சொல்லுங்க”ன்னு கேட்டாள். “என்னவோ சொன்ன கதையில, எலி ரவுக்க கேட்குதாம் சபையிலங்கற மாதிரி எங்கிட்ட எதுக்குடி கேட்கற? இவ்வளவு நேரம் நீதானே செய்த?”ன்னு வெடுக்குனு பேசினா மாமியார். “தெரியலன்னுதானே கேட்கறாங்க.. சொன்னா, சிலுக்கு சீமைக்குப் போய்டுமா?’ன்னு பதில் பாட்டு பாடிகிட்டே, அங்க ஒரு மணைப் பலகை போட்டு, அதும் மேல வெள்ளை வேட்டியைப் போட்டாள் மரகதம். மணைக்கு எதிரில் செங்கல்லு வச்சு அதுமேல சாணியில மூனு பிள்ளையார் பிடிச்சு வச்சு, அதுமேல அருகம்புல்ல வைடி”ன்னு மாமியாகாரி அதிகாரம் பண்ணினார்கள். பட்டம்மா சொன்னா மாதிரியே எல்லாம் பண்ணி, தோட்டத்துல இருந்து அடுக்குமல்லியைப் பறிச்சு அதை சரமா கட்டி, பிள்ளையாருக்கும் விளக்குக்கும் போட்டாள் மரகதம். ஒரு குட்டி மண் பல்லாவுல விளக்கெண்ணெயும், மூலிகைத் தழையும், வேப்பங்குச்சி, கருடக்கிழங்கு, இதெல்லாம் போட்டு கரியாக்கிய மையை வைத்தாள். இந்த மையை வச்சா பால் மணத்துக்கு காத்து கருப்பு அண்டாது. ஒரு பித்தள தட்டுல பால்மணி, கருப்பு மணி, வெள்ளருக்கம் வேரில் திரிச்ச அண்ணாக்கயிறு, அதே வேருல திரிச்ச காப்பு இதெல்லாம் வைத்திருந்தாள் மரகதம். குத்துவிளக்கும் காமாட்சி அம்மன் விளக்கும் ஏற்றி வைத்து, புனிதாவையும் குழந்தையையும் சீவி சிங்காரிச்சு அழைச்சிட்டு வந்து மணையில உக்கார வச்சாங்க. கற்பூரம் ஏற்றி பூசை பண்ணினாள் மரகதம். புனிதா மாமியாரைக் கூப்பிட்டு  வெள்ளெருக்கங் காப்பு போடச் சொன்னாங்க. தட்டில் இருந்தது எல்லாவற்றையும் குழந்தைக்குப் போட்டார்கள். செந்தாமரையின் மூத்த மகள்கள், குழந்தை கையில் ஆளுக்குப் பத்து ரூபாய் கொடுத்தார்கள். “குழந்தைக்குப் பவுன்ல காப்பு போடலையா?”ன்னு கூட்டத்துல யாரோ கேட்டார்கள். உடனே செந்தாமரை ஓடிப்போய் பவுனு காப்பை எடுத்து வந்து புனிதா மாமனாரிடம் தந்தார். அவரும் குழந்தைக்குப் போட்டுவிட்டார். “குழந்தைக்கு என்னப்பா பேரு?”ன்னு குப்பு ரெட்டி கேட்க, “சுவாதி”ன்னு செந்தாமரை சொன்னாரு. “என்னது… என் பேத்திக்கு நீங்க பேரு வைக்கறதா…?”ன்னு புனிதாவின் மாமனார் கத்தினார். தொடரும். சாம்பவி சங்கர்  

பொன்னியின் செல்வன் – 3

பொன்னியின் செல்வன் – 3

வந்தியத்தேவனும் கந்தமாறனும் வெளியே வந்த பிறகு, உள்ளிருந்து கந்தமாறனின் அன்னை அவனை மட்டும் அழைக்க, பின்னால் கேலிச் சிரிப்புகளுடன் கூடிய ஒலிகள் கேட்டன. தன்னைத்தான் கிண்டல் செய்வதாக எண்ணிக்கொண்ட வந்தியத்தேவன் அலைக்கழிந்தான். கந்தமாறன் வந்து அரண்மனையைச் சுற்றிக் காட்டியபோதும், மனம் அதில் லயிக்காமல், ‘தன்னைப் பற்றிப் பேசி அனைவரும் சிரித்தனரா?’ என சந்தேகமாய்க் கேட்டான்.  மறுத்த கந்தமாறன், ‘பழுவேட்டரையரைப் பற்றி’ என விரிவாகச் சொல்லத் தொடங்கினான். வந்தியத்தேவனும் கந்தமாறனும் வெளியே வந்த பிறகு, உள்ளிருந்து கந்தமாறனின் அன்னை அவனை மட்டும் அழைக்க, பின்னால் கேலிச் சிரிப்புகளுடன் கூடிய ஒலிகள் கேட்டன. தன்னைத்தான் கிண்டல் செய்வதாக எண்ணிக்கொண்ட வந்தியத்தேவன் அலைக்கழிந்தான். கந்தமாறன் வந்து அரண்மனையைச் சுற்றிக் காட்டியபோதும், மனம் அதில் லயிக்காமல், ‘தன்னைப் பற்றிப் பேசி அனைவரும் சிரித்தனரா?’ என சந்தேகமாய்க் கேட்டான்.  மறுத்த கந்தமாறன், ‘பழுவேட்டரையரைப் பற்றி’ என விரிவாகச் சொல்லத் தொடங்கினான். பழுவேட்டரையர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மர்மமான பெண்ணை மணந்து கொண்டதாகவும், எங்கு போனாலும் அவளை மூடு பல்லக்கில் வைத்துத் தன்னுடனேயே அழைத்துச் செல்வதாகவும் கூறினான். மேலும், அந்தப் பெண்ணை அந்தப்புரத்துக்குக்கூட அனுப்பாமல், தன்னுடனேயே தங்க வைத்திருப்பதையும், அதை ஒரு தாதிப்பெண் பார்த்துவிட்டு வந்து விவரித்ததை அன்னையும் மற்ற பெண்களும் சொல்லிச் சிரித்ததாகக் கூறினான். இந்த முதிய வயதில் இப்படி அவர் நடந்துகொள்வதே அனைவரின் சிரிப்புக்கும் காரணம் என விளக்க, வந்தியத்தேவன் மறுத்தான். ‘அது மட்டுமல்ல; அந்தப் பெண் அழகாக இருப்பதற்காகவும் உன் வீட்டுப் பெண்கள் சிரித்திருக்கலாம்’ என்றதும், ‘நீ எப்போது பார்த்தாய்?’ எனக் கேட்டான் கந்தமாறன். வரும் வழியில் பார்த்ததையும் இப்போதுதான் அது யாரெனத் தெரிந்து கொண்டதாகவும் வந்தியத்தேவன் கூறியபோது வாத்தியங்களின் முழக்கம் கேட்டது. அது குரவைக் கூத்துக்கான ஆரம்ப முழக்கம் எனக் கந்தமாறன் கூறியதும், ஆழ்வார்க்கடியான் நம்பி அதைக் குறிப்பிட்டது நினைவுக்கு வந்து, தனக்கும் அதைப் பார்க்க ஆவல் என வந்தியத்தேவன் சொல்ல, இருவரும் அங்கு சென்றனர். முற்றத்தில் மேடை அமைக்கப்பட்டு, மயில், அன்னம், கோழி போன்ற சித்திரங்களை வரைந்திருந்தனர். அகில் புகை, மலர் மணம், தீபங்களின் ஒளி எல்லாம் வந்தியத்தேவனின் மனதை மயக்கின. அந்தச் செந்நிறம் ஒருவிதமான உணர்வை எழுப்பியது. முக்கிய விருந்தாளிகள் வந்து அமர்ந்ததும் குரவைக் கூத்து ஆடும் பெண்கள் ஒன்பது பேர் மலர்மாலையுடன் பிணைத்துக் கொண்டு முருகன் பற்றிய பாடல்களைப் பாடிக்கொண்டே ஆடினார்கள். பின் வேலாட்டம் தொடங்கியது. தேவராளன், தேவராட்டி என ஆண், பெண் இருவரும் வந்து சிவப்பு வண்ண ஆடைகளையும் மலர்களையும் அணிந்து ஆடியது அச்சத்தை ஊட்டியது. பின் தேவராளன் வெறியாட்டம் ஆட, அனைவரும் சந்நதம் வந்துவிட்டதாகப் பதைத்தனர். மழை பொழியுமா, நாடு செழிக்குமா, என்றெல்லாம் ஒவ்வொருவராகக் கேட்க, தேவராளன் ஆடிக்கொண்டே, மன்னர் குலத்து, ஆயிரங்கால அரசர் குலத்து ரத்தம் வேண்டும், பலி வேண்டும்; கொடுப்பீர்களா? என உக்கிரமாகக்  கேட்டான். மேடைக்கு முன்னால் வீற்றிருந்த பழுவேட்டரையர், மழவரையர், சம்புவரையர் எல்லாரும் திகைத்தபடி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பூசாரியை நிறுத்தச் சொல்ல, தேவராளன் மயங்கி வீழ்ந்தான். சபை மெளனமாகக் கலைய, நரிகள் ஊளையிடும் சப்தம் கேட்டது. வந்தியத்தேவன் அந்தத் திசையில் திரும்பிப் பார்த்தான். மதில் சுவற்றின் மேல் ஆழ்வார்க்கடியானின் தலை மட்டும் வெட்டி வைத்திருந்ததைப் போலத் தெரிந்தது. அதிர்ந்துபோன வந்தியத்தேவன் மறுபடியும் பார்க்க, அங்கு எதுவுமே இல்லை. அவன் உள்ளம் எதையோ நினைத்துக் கலங்கிற்று. அதற்குப் பின் பிரம்மாண்டமான விருந்து தொடங்கியது, கந்தமாறன் அங்கு வந்திருந்த அனைவரையும் யார் யாரென எடுத்துக் கூறிக்கொண்டிருந்தான். அங்கு வந்திருந்த பெரியமனிதர்கள் அனைவரும் சாதாரணமானவர்கள் அல்லர். அனைவரும் குறுநில மன்னர்கள்; அல்லது தன் வீரத்தினால் குறுநில மன்னர்களுக்கு இணையான பட்டத்தைப் பெற்றிருந்தவர்கள். அதாவது இன்றைய அமைச்சர்கள், அதிகாரிகள், பெருங்குழும முதலாளிகள் போன்றவர்கள். கந்தமாறன் சொல்லச் சொல்ல, ‘இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அனைவரும் எதற்காக இங்கு இணைந்து வந்திருக்கிறார்கள்?’ என்ற சந்தேகம் வந்தியத்தேவனுக்குள் வளரலாயிற்று. விருந்து முடிந்து, அரண்மனையின் மேல் மாடத்தின் ஒரு மூலையில் அவனுக்கென ஒதுக்கப்பட்ட திறந்த மண்டபத்தில் கந்தமாறன் விட்டுச் சென்ற பிறகும் கூட, அந்த சந்தேகம் மறையாதிருந்தது. களைப்பினால் கண்ணயர்ந்த பின்னும் ஆழ்மனநிலையில் அந்த சந்தேகம் வலுத்தபடியே இருந்ததால், கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டுப் பாதியிலேயே விழித்துக் கொண்டான். கனவில் வெட்டுப்பட்ட ஆழ்வார்க்கடியான் தலையைக் கண்டிருந்த வந்தியத்தேவன், திடுக்கிட்டு விழித்தபோதும் அதையே பார்த்து வெருண்டான். ஆனால், இந்த முறை தலை மறையவில்லை. கடைசியில் உற்றுப் பார்த்தபொழுது, ஆழ்வார்க்கடியான் மாளிகையின் சுற்று மதிலுக்குப் பின்னாலிருந்து தலையை மட்டும் எட்டி உள்ளே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று துலங்கியது. ஏதோ ஓர் ஆபத்து என உள்மனம் சொல்ல, உடல் பதறி வாளுடன் அவனை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். ஆழ்வார்க்கடியான் தலை தெரிந்த இடத்திற்கும் இவன் படுத்திருந்த இடத்திற்கும் உண்டான தொலைவைக் கவனமாகக் கடந்தபோது பேச்சுக்குரல் கேட்கவே, வந்தியத்தேவன் குனிந்து பார்த்தான். கீழே குறுகலான முற்றத்தில் விருந்தில் பார்த்த அனைத்து முக்கியமானவர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த நள்ளிரவில் பேசிக் கொள்வதானால் ஏதோ ஒரு முக்கிய விஷயமாக இருக்க வேண்டும் என ஊகித்த வந்தியத்தேவன், அதைப் பார்க்கத்தான் ஆழ்வார்க்கடியான் மதிலில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொண்டான். இப்போது ஆழ்வார்க்கடியானைக் கையும் களவுமாகப் பிடிப்பதானாலும் கீழே அமர்ந்திருப்பவர்களுக்குத் தெரியாமல் முடியாது. அப்போதும் அவன் தப்பிவிட்டான் என்றால், தன்னை சந்தேகப்பட வாய்ப்பு இருக்கிறது. கந்தமாறனும் அந்தக் கூட்டத்தில் இருப்பதைக் கண்டவுடன் காலையில் அவனிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான். பக்கத்தில் இருந்த மூடு பல்லக்கைப் பார்த்ததும் ஆழ்வார்க்கடியான் அந்தப் பல்லக்கில் இருந்தவளைப் பார்க்கத்தான் வந்திருப்பான் எனப் புரிந்து கொண்டான். திரும்பி விடலாம் என யத்தனித்தபோது, தன் பெயர் அடிபடுவதைக் கண்டு உற்றுக் கேட்க ஆரம்பித்தான். ‘உங்கள் மகனின் நண்பன் என ஒருவன் வந்துள்ளானே.. அவன் ஆதித்த கரிகாலனின் கீழ் பணிபுரியும் ஆள். நாம் பேசும் விஷயம் எதுவும் அவனுக்குத் தெரிந்துவிடக் கூடாது. தெரிந்தால் இந்தக் கோட்டையை விட்டு அவன் உயிருடன் போகக் கூடாது’ என்று சொல்லக் கேட்டதும் வந்தியத்தேவனுக்குப் பொறி கலங்கியது. ஆனால், கந்தமாறன் தன் நண்பனுக்குப் பரிந்து பேசினான். அவன் நம்பிக்கைக்குரியவன் என்று கூறியதை ஏற்றுக்கொண்ட பழுவேட்டரையர், “இப்போது நாம் பேசப்போவது பெரிய சாம்ராஜ்யத்தைப் பற்றிய மிக முக்கியமான விஷயம். இது மட்டும் வெளியில் தெரிந்தால், பயங்கரமான பின்விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டும்” என எச்சரித்துவிட்டு, மேலும் அதிர்ச்சி தரும் விஷயங்களைப் பேசத் தொடங்கினார். வந்தியத்தேவன் முதலில் பயந்தாலும், அவர்கள் பேசும் விஷயங்களை மறைந்திருந்து கேட்கலானான். அதைத் தொடர்ந்து நடக்கப்போகும் பல முக்கியமான திருப்பங்களுக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில், அடுத்தடுத்து நடந்த விஷயங்கள் வந்தியத்தேவனை அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொண்டே சென்றன. தொடரும். சவிதா

காற்றுடன் கலந்த கம்பீரக் குரல்

காற்றுடன் கலந்த கம்பீரக் குரல்

‘ஆகாஷ்வாணி, செய்திகள் வாசிப்பது..’ என்று கணீரென்ற உச்சரிப்பில் கம்பீரமான குரலுடன் ஆரம்பித்தது எனில், வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சட்டென்று ரேடியோவை நோக்கித் திரும்புவார்கள். செய்திகளைச் செவிமடுப்போர் எண்ணிக்கை அதிகமாகும். காலை 7.15 மணி என்று தெரிந்து, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயாராவார்கள். செய்தி முடிந்தவுடன் ரயிலுக்குச் செல்பவர்கள், பஸ் பிடிப்பவர்கள் வீட்டை விட்டுக் கிளம்புவார்கள். எவ்வளவு நேரம் ஆனாலும் இடையினில் செல்ல மனம் இடம் தராது. அப்படிப்பட்ட கம்பீர குரலுக்குச் சொந்தக்காரர் சரோஜ் நாராயண் சுவாமி, சென்னையில் தன் 87 வது வயதில் தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்டார்.  சரோஜா என்று இயற்பெயர் கொண்ட சரோஜ் நாராயண் சுவாமி, மும்பையில் பிறந்தவர். தாய்த் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். தாயின் காவிரித் தண்ணீரும், தான் பார்த்த தமிழ் சினிமாக்களும், படித்துப் படித்து மகிழ்ந்த பாரதியார் பாடல்களும்தான் தன் தமிழ் உச்சரிப்பிற்குக் காரணம் என்பார். கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்தபின், டெல்லியில் யூகோ வங்கியில் பணியில் இணைந்தார். அருகிலேயே டெல்லி அகில இந்திய வானொலி நிலையம். தமிழார்வம் காரணமாக அங்கே பணி கிடைத்தது. தமிழ் செய்தி வாசிப்பின் பொற்காலம் அங்கிருந்து தொடங்கியது. சரோஜ்தான் இந்தியாவில் தமிழில் செய்தி வாசித்த முதல் செய்தி வாசிப்பாளர்.  வானொலியில் 35 ஆண்டுகள் பணி புரிந்த பின்னர் செய்தி ஒளிபரப்புத் துறையில் சில காலம் பணி புரிந்தார். செய்தி ஆவணங்களுக்கு (news reels) குரல் கொடுத்தல், சினிமாக்களுக்கு சப் டைட்டில்கள் எழுதுதல் என்று பலவகையான பணிகளில் ஈடுபட்டார்.  தன் வானொலி அனுபவங்களைப் பல நேர்காணல்களில் வெளிப்படுத்தி உள்ளார்.  அவரது செய்தி வாசிப்புக்கால அனுபவங்களில் முக்கியமானவை அவரது பேட்டிகளில் இருந்தே நமக்குக் கிடைக்கின்றன. 31.10.1984 இந்திய வரலாற்றில் முக்கியமான நாள். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ஒரிஸா பயணங்களைப் பற்றிக் காலைச் செய்திகளில் சொன்னவர், ‘இந்திராவின் ஒவ்வொரு துளி இரத்தமும் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக’ என்று பேசியதைக் குறிப்பிட்டுச் சொல்லும் போது, அன்று மாலையே இந்திரா சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியைச் சொல்ல நேரும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று வருந்திக் குறிப்பித்துள்ளார். செய்தி வாசிப்பாளர்கள் தங்கள் சுகம், துக்கம் போன்றவற்றைச் செய்தி வாசிப்பில் காண்பித்துவிடக் கூடாது என்பது எழுதப்படாத சட்டம் என்றாலும், அன்று சற்று நெகிழ்ந்து போய் இருந்ததாகவும், அவர் மரணத்தை அறிவிக்கும்போது, ‘அன்னை இந்திரா காந்தி’ என்று செய்தியில் எழுதப்படாத ‘அன்னை’ என்ற வார்த்தையைச் சேர்த்து தான் சொன்னதையும், அதற்காக அவர் மிகவும் பாராட்டப்பட்டார் என்பதையும் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார். பின்னர் வந்த காலங்களில் பஞ்சாபிலிருந்து செய்தி வாசிப்பாளர்கள் வரமுடியாமல் போக, அவர்களின் பணிச் சுமையும் இவருக்குச் சேர்ந்தது.  காலை 5.30 மணி செய்திக்கு, 3 மணிக்கே தயாராக ஆரம்பித்து விடவேண்டும். ஆங்கில, இந்தி செய்திகளை வைத்துக்கொண்டு, மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்வது அந்தந்த மாநில மொழிச் செய்தி வாசிப்பவரின் பொறுப்பு என்பதால் வேலைப்பளு அதிகம். சில சமயங்களில் ஒரு சில வார்த்தைகளுக்காக, தூதரகங்களைத் தொலைபேசியில் அழைத்து உதவிகள் வாங்கியதையும் அவர் பேட்டிகளில் குறிப்பித்துள்ளார்.  தன்னால் மறக்க முடியாத காலம் பங்களாதேஷ் போர் நடந்த காலம் என்று கூறியுள்ள சரோஜ், அப்போது செய்திகளைக் கேட்ட நேயர்கள், ஏதோ தானே இந்திய வெற்றிக்குக் காரணம் என்பது போல மகிழ்ந்து தனக்குப் பாராட்டு மடல்கள் எழுதியதை சந்தோஷமாகக் குறிப்பிட்டுள்ளார்.  “பலர் என்னிடம், ‘உங்கள் குரல் மேல் (male) வாய்ஸ் போல இருக்கிறதே’ என்பார்கள். ‘ஆம், என் குரல் மேலான குரல்தான்’ என்பேன்” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.   மும்பையில் பிறந்து, டெல்லியில் பணிபுரிந்து, கிழக்கு வங்காளத்தின்  விடுதலைச் செய்திகள் சொல்லி, பஞ்சாபியில் கலக்கிய கணீர்க் குரல் சென்னையில் தன் சிந்தனையை நிறுத்திக் கொண்டதன் மூலம், தான் இந்திய தேசத்திற்கே சொந்தமானவர் என்று நிரூபித்திருக்கிறார்.  2009 ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது. கம்பீரக் குரலின் தமிழ் என்றும் நம் நினைவில் தங்கும்.  கோவை பிரசன்னா

ஈசனின் நிர்வாணம்

ஈசனின் நிர்வாணம்

ஏதோவொரு தெருக்கூத்து நாடகத்தை போலஇந்த சூரியப்பகலில் நடந்துக் கொண்டிருக்கிறேன் ஈசனின் நிர்வாணத்தை மறைக்கும்சாம்பலின் நிறத்தில்எங்கோ எரியும் காட்டுத்தீயின் புகையைமேகமாக்கி என்னிடம் இழுத்து வருகிறாய் சலங்கை கட்டி ஆடும் கிளைகளும்தூரத்து மண் வாசமும்கொல்லையில் ஓயாது கத்தும் கன்றும்ரசனையற்றவளின் கண்களில் காட்சிகளாய் விரிக்கிறாய் பிணத்திற்கு முன்னால் ஓங்கி ஓங்கிஒப்பாரி வைக்கும்ரேடியோ பெட்டியைப்போலகேட்பாரற்று ஓரமாய் கிடக்கிறேன் அனுமானங்களை என்னுள் நிரப்பிவெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு வியர்வையை துளிர்க்க விடுகிறாய் முதிர்கன்னியின் மரணத்திற்குவயிற்றுவலிப் புனைக்கதைக் கேட்கும்பிணத்தைப் போலநடுவீதியில் படுத்துறங்கும் என்னுள்ளே வீசுகிறதுமரணத்திற்கான சிறு ஓலம். பவித்ரா பாண்டியராஜு

டாஸ்மாக்கில் விற்பது பஞ்சாமிர்தமா?

டாஸ்மாக்கில் விற்பது பஞ்சாமிர்தமா?

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை மாணவர்கள் எடுக்க வேண்டுமென்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்துகிறது. எல்லாம் சரி, தமிழக அரசின் பார்வையில் போதைப்பொருள் என்பது குட்கா, கஞ்சா, ஹெராயின், அபின் போன்றவையாகத்தான் இருக்கிறது. அரசால் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள், போதைப்பொருட்களின் கணக்கில் வராதது, வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.  மதுபானங்கள்தான் தற்போது மிக மிக எளிதாகக் கிடைக்கக்கூடியதாக, அரசின் அனுமதியுடன் வாங்கிப் பயன்படுத்தக்கூடிய போதைப்பொருட்களாக இருக்கின்றன. அதேபோல, தினசரிச் செய்தித்தாள்களைத் திறந்து, கொலை, கொள்ளை, வன்புணர்வு, தற்கொலை எனப் பத்து செய்திகளை வாசித்தோமானால், அவற்றில் ஏழெட்டு சம்பவங்களுக்கு அடிப்படையாகவோ, பின்புலமாகவோ மதுப்பழக்கம் இருக்கும். மது போதையில் வன்புணர்வு, மதுப் பழக்கத்தால் கணவன் மனைவி இடையே தகராறு, மதுப் பழக்கத்தால் கடனாளியாகித் தற்கொலை, மதுபானம் வாங்கப் பணம் தராததால் மனைவி அடித்துக் கொலை, இப்படியான செய்திகள் மிகச் சாதாரணமாகிவிட்டன. இவையொன்றும் அரசின் பார்வைக்குப் போகாத ரகசியச் செய்திகள் அல்ல. ஆனால், இவற்றையெல்லாம் இத்தனைக் காலமாக அரசாங்கங்கள் கண்டுங்காணாமல்தான் கடந்து வருகின்றன. மதுபான விற்பனையாலும், மதுப் பழக்கத்துக்குப் பலர் அடிமையாவதாலும் அரசுக்கும் அரசியலுக்கும் கிடைக்கும் பல்வேறு நன்மைகளே அதற்குக் காரணம். குடி நோயால் மரணித்தவர்களின் எண்ணிக்கை, குடிநோயால் கணவன் உயிரிழந்ததால் இளம் விதவையான பெண்களின் எண்ணிக்கை, மது போதையால் நடக்கும் கொலை, கொள்ளை, வன்புணர்வு, விவாகரத்துகள் என அனைத்துப் புள்ளி விவரங்களையும் சேகரித்தால், தீவிர மதுப்பழக்கத்தால் ஏற்பட்டுள்ள சமூகத்தீமையின் வீரியம் பளிச்சென அனைவருக்கும் புரியும். அவ்வளவு ஏன், ஒவ்வொருவரும் அவரவர் குடும்பம், உறவினர்கள் மட்டத்தில் தீவிர மதுப்பழக்கத்தில் சிக்கியவர்கள் குறித்துக் கணக்கெடுத்தாலே இதன் தீவிரத்தன்மை புரியும். இவற்றைத் தடுத்து நிறுத்த அரசு என்ன செய்ய வேண்டும்? முதலில், குடிப்பழக்கம் ஒரு சமூகக்கேடு என்பதை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். குடி குடியைக் கெடுக்கும் என்று சும்மாக்காச்சி போர்டில் எழுதிவைப்பதல்ல இது. தீவிர மதுப்பழக்கத்தால் ஏற்பட்டுள்ள சமூகக்கேடுகள் குறித்த புள்ளி விவரங்களைச் சேகரிக்க வேண்டும். குடிப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மிகத் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்க வேண்டும். குடிப்பழக்கத்தால் ஒருவர் மீதான மரியாதை எந்த அளவுக்கு இழிவு நிலைக்குச் செல்கிறது, குடிப்பழக்கத்தால் ஒரு குடும்பம் எப்படிச் சீரழிகிறது என்பது குறித்த பிரச்சாரங்கள் திண்ணைப் பிரச்சாரம் போல முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சாரங்கள், நேரடியாக மக்கள் மத்தியிலும், அனைத்து ஊடகங்களின் வழியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், சமூக அக்கறையுடனும் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதால் விளையும் தீமைகள் குறித்து ஒவ்வொரு வீட்டிலும் பேசப்படும். தீவிர மதுப்பழக்கம் தவறென்ற சிந்தனை பரவத் தொடங்கும். இதுதான் மதுப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சரியான முன்னெடுப்பாக இருக்கும். பொதுவாக, மதுபானக்கடைகளை ஒழித்துவிட்டால், மதுப்பழக்கத்தை ஒழித்துவிடலாம் என்ற சிந்தனை பலருக்கும் உண்டு. ஆனால், அது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதற்குப் பல்லாண்டுகளாக மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்தில் தொடரும் கள்ளச்சாராயச் சாவுகளும், அங்கே விற்பனையாகும் போலி மது பானங்களும், சாராயம் குறித்த புள்ளிவிவரங்களுமே சாட்சி. அதேவேளை, மதுபானக்கடைகளை முற்றாக மூடுவதற்குப் பதிலாக, எண்ணிக்கையை இஷ்டத்துக்கு அதிகரிப்பதை நிறுத்த வேண்டும். இப்போது, சிறு கிராமத்திலும்கூட இரண்டு மூன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தனியார் மதுபானக்கடைகளும் ரெக்கரியேஷன் கிளப் என்ற பெயரில் நடக்கின்றன. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, மதுபானக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, ஊருக்கு வெளியே மதுபானக் கடைகளைக் கொண்டுசெல்ல வேண்டும். அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்கும், குடியிருப்புகளுக்கும் அருகிலுள்ள மதுபானக் கடைகளை ஒழிக்க வேண்டும். நம்மூரில் ஒரு விசித்திரம் என்னவென்றால், குடியிருப்புகளுக்கு அருகிலிருக்க வேண்டிய கல்விக்கூடங்கள், ஊருக்கு ஒதுக்குப்புறமாகத் தொலைவில் இருக்கின்றன. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்க வேண்டிய மதுபானக்கடைகள் குடியிருப்புப்பகுதியில் இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும். இறுதியாக, மது பானங்கள், போதைப்பொருட்கள் பயன்பாடென்பது, தமிழ்நாடு என்றில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சவாலான பிரச்சனையாக தற்போது உள்ளது. குஜராத்திலுள்ள அதானி துறைமுகத்தில் கடந்த ஆண்டில், இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பிடிபட்டது. அடுத்தடுத்து, அதே துறைமுகத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பிலும், 350 கோடி ரூபாய் மதிப்பிலுமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதேபோல், குஜராத்திலுள்ள மற்ற துறைமுகங்களிலும் போதைப் பொருட்கள் பிடிபட்டன. அதாவது, மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத் மாநிலம்தான், போதைப்பொருட்களின் சர்வதேசச் சந்தையாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது, போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையும் அங்குதான் அதிக அளவில் நடக்கிறது. குஜராத் மட்டுமல்லாது, இந்தியா முழுக்கவே போதைப்பொருட்கள் சப்ளை அதிதீவிரமாக நடக்கிறது. பெருமுதலாளிகளின் உலகமாக மாறிவரும் இன்றைய சூழலில், போதைப்பொருட்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதோடு, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வைத் தீவிரமாக முன்னெடுப்பதும்தான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கக்கூடும். அந்த விழிப்புணர்வு வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். நம் எதிர்காலம் நம் கைகளில். வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

கரைசேராப் படகுகள் – 11

கரைசேராப் படகுகள் – 11

களத்து மேட்டுக் காவலுக்குக் கிளம்பிய செந்தாமரை, “மரகதம், நாளைக்கு அரைவிடுதி வேலைதான் ஆளுங்களுக்கு சொல்லிவிட்டிருக்கு; நீ காலைல கஞ்சியும் சேர்த்து எடுத்துட்டு வந்துடு. ஆளுங்க கோழிகூவயிலேயே வந்துருவாங்க” என்றார்.    “அய்யோ நாளைக்கும் கஞ்சி காய்ச்சணுமா? வீட்ல சொல்லிவிட்டவங்க எல்லாம் வந்துடுவாங்களே.. வேலை மெனக்கெடுமே” என்று புலம்பினாள் மரகதம். “விளைஞ்ச வெள்ளாமை வீடு வர வேணாமா? மேலு அலுப்ப பார்த்தா முடியுமா?” “நான் கஞ்சி காய்ச்சிடறேன் மாமோய்.. சத்த அந்தக் கஞ்சி அண்டாவ, மாரிய விட்டு தூக்கிப் போயிடேன்..” என்று கொஞ்சும் குரலில் சொன்னாள் மரகதம். “சிறுமலை சுத்தற சின்னக்காளுக்கு மணவறை சுத்தனா மயக்கமா?” என்று நீட்டி முழக்கினார் பட்டம்மா. “யாரும் இங்க பவுசா உட்காந்து திங்கல. ‘இடிஇடின்னு இடியாப்பம் பிழிஞ்சு, காப்பித் தண்ணி கொடுத்து கப்பலேத்தி விட்டாங்க’ன்னு சொல்றா மாதிரி உழைச்சிகிட்டுதான் இருக்கோம்” என்று பதிலுக்குப் பொரிந்தாள் மரகதம். “டேய் சுள்ளான்… இங்க நின்னு பஞ்சாயத்து பார்த்தோம்னா பஞ்சா பறந்துடுவோம். களத்துமேட்டுக்குப் போலாம் வா” என்று நாயையும் அழைத்துக்கொண்டு செந்தாமரை கிளம்பினார். கோழி கூவறதுக்கு முன்னாடியே எழுந்து, வாசல் தெளித்து, செம்மண்ணில் ஓரங்கட்டி, வாசல் அடைத்து பச்சரிசி மாவில் கோலம் போட்டு, வாசலில் தொங்கிய வேப்பிலையெல்லாம் எடுத்து வீசினாள் மரகதம். அடுப்பை மெழுகிக் கோலம் போட்டு, கஞ்சி காய்ச்சினாள். குளித்து   முடித்து சிவப்பு நிறத்தில் சின்ன சின்னதாக மஞ்சள் பூப்போட்ட புடவையைச் சுற்றிக்கொண்டு விளக்கு தட்டு விளக்கி, சாமி மேடையைச் சுத்தம் செய்தாள். முருகர் படத்தைத் துடைக்கப் போனவள், படத்துக்குப் பின்னாடி இருந்த கடிதத்தைப் பாரத்தாள். “கூறுகெட்ட மனுசன், கடுதாசி படிச்சா தூக்கிப் போடவேண்டியது தானே..” என்று தூக்கிப் போடப் போனவள், ‘பிரிக்காமலேயே இருக்கே..’ என்று அங்கேயே வைத்துவிட்டு, அடுப்படி வேலைக்கு வந்துவிட்டாள். எட்டு மணி சங்கு கூவும்போது, இருளாயி வந்து சேந்தாள். முந்தானையில்  பறிச்சு வச்சிருந்த குப்பைமேனி, தூதுவளை, கற்பூரவல்லி, முடக்கத்தான், முசுமுசுக்கை, முருங்கை, துளசி, சீந்தல், அருகம்புல், வேப்பிலை, மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், பெருங்காயம் எல்லாவற்றையும் அம்மியில் வைத்து ஒட்ட ஒட்ட அரைத்து எடுத்தாள். அண்டா நிறைய சுடுதண்ணி விளாவி வைத்து, புனிதாவைப் புழக்கடைப் பக்கம் அழைத்து வந்து உட்காரவைத்து, தலையில் பொட்டு எண்ணெய்  வைத்து அரப்புப் பொடி போட்டு நல்லா தலை முடியைக் கசக்கி எடுத்தாள்.  அடி வயிற்றில் நல்லா தண்ணியை அடித்து ஊற்றினாள். வேகவேகமாகப் புனிதாவுக்குத் துணியைச் சுற்றி, அரைத்து வைத்த மருந்துருண்டையில் மூனு உருண்டை கொடுத்து, சுடு தண்ணி கொடுத்தாள். அதற்குள் மரகதம் கரி நெருப்புல சாம்பிராணி போட்டாள். அதை இருளாயி பக்குவமா புனிதா முடியில காட்டி, தலையில பல்லாங்குழி காய ஆறவிட்டாள். நல்லா நுரை பொங்க காபி தண்ணி கொடுத்தாள். ஆறவைத்து ஒரு சொம்பு நிறைய குடித்தாள் புனிதா. பட்டம்மா பாட்டி புனிதாவைப் பார்த்து, “அரிசி, பருப்பு, புளியில் கை வச்சிட்டு கூடத்துல வந்து உட்காருடி; தல ஆறாம படுக்கக்கூடாது” என்று சத்தம் போட்டாள் இருளாயி, குழந்தைக்குத் தலைக்கு ஊற்றி, நன்றாகத் துவட்டி சாம்பிராணி போட்டு, உச்சந்தலையில் விபூதி வைத்து, புனிதா பக்கத்தில் துணியைப் போட்டுக் கிடத்தினாள். ஒரு வாரம் கழிச்சு இப்பதான் வெளியில் வருகிறாள் புனிதா. பட்டம்மா ஒரு கொத்து வேப்பிலையை எடுத்து வந்து அவ தலையில சொருகினாள். அதற்குள் பட்டம்மா பாட்டியின் பட்டாளமெல்லாம் ஒன்றாக  சேர்ந்துகிட்டு, “இதைப் பண்ணியா, அதைப் பண்ணியா” என்று மரகதத்தை அதிகாரம் பண்ணிகிட்டு இருந்தாங்க. கடுப்பானாள் மரகதம். “கூடவந்த பெருச்சாளி கூடைய தூக்கிட்டு ஆடுச்சாம்; பாக்க வந்த பெருச்சாளி செருப்ப தூக்கிட்டு ஆடுச்சாம்”ன்னு பாடிகிட்டே எல்லாருக்கும் காபி தண்ணி கொடுத்தாள். எல்லா கிழவிகளும் காபிய குடிச்சிட்டு கிளம்பிடுச்சிங்க. அருக்காணி வாய்க்கால் தண்ணியில் இருந்து, குட்டி குட்டிக் கெண்டை மீனைப் பிடித்துவந்து, காரம் கம்மியா போட்டு, மிளகுத்தூள் போட்டு நல்லெண்ணெய் நிறைய விட்டு, மணக்க மணக்க வச்ச மீன் குழம்ப வயிறுமுட்டச் சாப்பிட்டு, தூங்க ஆரம்பிச்சிட்டா புனிதா. மதியம் வர்ற சொந்தபந்தத்துக்கு நாட்டுக்கோழிக் குழம்போடு இருளாண்டிகிட்ட ஆட்டுக்கறிக்குச் சொல்லி விட்டிருந்தாள். ஆட்டுக் காலு சூப்பும் ஆட்டுக்கறித் தொக்கும் நெய்யை ஊத்தி ருசியா பண்ணி வைத்திருந்தாள் மரகதம். அரைவிடுதி வேலையை முடித்து வந்த செந்தாமரை, சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டு, டவுனுக்குப் போய் வெற்றிலை பாக்கு வாங்கிகிட்டு  காப்பு எடுத்துட்டு வரலாம் என்று கிளம்பினார். மரகதத்தின் பெரிய மவளும் ஆத்தா, அப்பன், தம்பியும் வண்டி கட்டிகிட்டு வந்தாங்க. அம்மாவைப் பார்த்ததும் வாயெல்லாம் பல்லாக, “வாங்க வாங்க” என்று அழைத்தபடி வாசலுக்கு ஓடினாள் மரகதம். பெரிய பேத்தியை பார்த்ததும்  பட்டம்மா கிட்டே கூப்பிட்டு கட்டிப்பிடித்துக் கன்னத்தில் முத்தா வைத்துக் கொஞ்சினாள். சம்பந்திய ‘வாங்க’ன்னு கூப்பிட்டு, “ஏய்.. மரகதம் எல்லாருக்கும் சாப்பாடு போடு”ன்னு அதிகாரம் பண்ணினார் பட்டம்மாள். மரகதத்தின் அம்மா மரகதத்திடம் வந்து “என்னடி, புனிதாவுக்கு தலைக்கு ஊத்தியாச்சா? மருந்து அரைச்சுக் குடுத்தியா?”ன்னு விசாரணை பண்ணாங்க. இதே கேள்வியை பட்டம்மா கூட்டாளிங்க கேட்கும்போது மரகதம் பழிச்சு பாட்டு பாடினா இல்ல.. அதனால் இப்ப பட்டம்மா, “அதியசயமான ஊர்ல புள்ள பொறந்துச்சாம்; தொப்புள் கொடி அறுக்க கப்பல் ஏறுச்சாம்”ன்னு ராகம் இழுத்தா. கொஞ்ச நேரத்தில் நடு மகளும் அவள் மாமியாரும் மட்டும் வந்தாங்க. கோதையையும் கட்டிப் பிடித்துக் கொஞ்சிய பட்டம்மாவுக்கு சந்தோஷத்துல தலகால் புரியல. புழக்கடைப் பக்கம் வந்த கோதைகிட்ட “எப்படியவ இருக்க?” என்றாள் மரகதம். “எள்ளுக்குச் சேலை இருபத்திரண்டு முழமாம்; சுத்து எட்டலைன்னு சுண்டறா கண்ணீர’ன்னு எம் மாமியாகாரிக்கு எவ்வளவு செஞ்சாலும் பத்தாதுமா”ன்னு குறைபட்டாள் கோதை. வந்த உறவுகளெல்லாம் நன்றாகச் சாப்பிட்டு, உண்ட களைப்பு தீர ஓய்வெடுத்தார்கள். டவுனுக்குப் போன செந்தாமரை, சாமானெல்லாம் மூட்டைகட்டிகிட்டு வந்தார். உறவுகளை ‘வாங்க’ன்னு சொல்லிட்டு, மரகதத்தைத் தேடி வந்தார். அங்கே மரகதம் லாந்தர் விளக்கு, பெரிய விளக்கு, சிம்னி விளக்குன்னு    ஏழெட்டு விளக்கை அரிசி மாவு போட்டு கரிபடிஞ்ச சிம்னி எல்லாத்தையும் துடைத்துக் கொண்டு இருந்தாள். “பூவுள்ள மங்கையாம் பொன்கொடியாம்; போன இடமெல்லாம் செருப்படியாம்”ங்கற கதையாட்டம் உனக்கு வேல ஒழிய மாட்டேங்குது. பாவம் புள்ள நீ” என்று பொஞ்சாதிகிட்ட செந்தாமரை உருகறது கடவுளுக்கே பொறுக்கவில்லை போல. “தம்பி.. செந்தாமரை”ன்னு குரல் கொடுத்தார் கோபாலண்ணா. “இதோ, வாரேன்”னு சொல்லிட்டே திண்ணைக்கு வந்த செந்தாமரையிடம், சுப்புடு ஐயர் பேர் எழுதிக் கொடுத்த பேப்பரை நீட்டினார். பேப்பரைக் கையில் வாங்கிப் பார்த்ததும் அதிர்ந்தார் செந்தாமரை. தொடரும். சாம்பவி சங்கர் ஓவியம்: வெண்ணிலா

பொன்னியின் செல்வன் – 2

பொன்னியின் செல்வன் – 2

புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1 – முந்தைய பகுதியைத் தவறவிட்டவர்கள் இந்த இணைப்பில் வாசித்துவிட்டுத் தொடரலாம். பொன்னியின் செல்வன் – 2 பழுவேட்டரையரின் பரிவாரங்கள் ராஜபோகமாக ஆர்ப்பாட்டத்துடன் செல்வதை வந்தியத்தேவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, அதிகார ஆக்கிரமிப்பில் பழுவேட்டரையரின் காவலாளிகள், தள்ளி நிறுத்தப்பட்டிருந்த அவன் குதிரையுடன் வம்புக்குச் சென்றார்கள். அவர்களால் சீண்டப்பட்ட குதிரை கூட்டத்தில் குழப்பம் விளைவித்தபடியே தப்பித்து ஓடியது. அதனைத் தடுக்க முடியாமல் வாடி நின்ற வந்தியத்தேவனைக் கண்ட ஆழ்வார்க்கடியான் அவனிடம், ‘என்னிடம் காட்டிய வீரத்தை அவர்களிடம் காட்டக்கூடாதா?’ என்று வேறு  குத்திக் காட்டினான். உள்ளூரக் கோபத்திலிருந்த வந்தியத்தேவன், பழுவேட்டரையருடைய வீரர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சண்டைக்குப் போகாமல், தள்ளிப் போய் பாவமாக நின்று கொண்டிருந்த குதிரையைத் தட்டிக் கொடுத்துக் கூட்டி வந்தான். ‘இந்த வீரர்களுக்கு என்றேனும் நல்ல பாடம் புகட்ட வேண்டும்’ என்றும் எண்ணிக் கொண்டான். ஆழ்வார்க்கடியான் காத்திருந்ததைக் கண்டபோது இன்னும் எரிச்சலாயிருந்தது. போதாதற்கு  ஆழ்வார்க்கடியானும் நோட்டம் பார்ப்பது போல், ‘எங்கு தங்குகிறாய்?’ எனக் கேட்டதும் இடக்காகப் பதில் சொன்னான். ஆழ்வார்க்கடியான் விடாமல், ‘நீ கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்குவதாயிருந்தால் எனக்கு உன்னிடம் ஒரு உதவி தேவைப்படுகிறது’ எனக் கூறினான். தான் செல்லப் போகுமிடம் அவனுக்குத் தெரிந்திருந்தது வந்தியத்தேவனுக்குத் திகைப்பாக இருந்தது. அதைக் குறித்து அவன் எப்படி எனக் கேட்க,  ‘பழுவேட்டரையரின் பரிவாரங்கள் சம்புவரையரின் மரியாதை வழங்கப்பட்டு  அங்குதான் செல்கின்றன;  மேலும், நாடெங்கிலும் இருந்து விருந்தாளிகள் இன்று இங்கு வரப்போகிறார்கள்’ என்று ஆழ்வார்க்கடியான் கூறவும், பழுவேட்டரையர் போன்ற மாவீரரை இன்று அந்த மாளிகையில்  சந்தித்துப் பழக வேண்டும் என்ற ஆவல் வந்தியத்தேவனுக்கு ஏற்பட்டாலும், அவருடைய படைவீரர்களின் அதிகார அலட்சியம் அவனுக்குக் கசந்தது. ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம், அன்றிரவு சம்புவரையர் மாளிகையில் நடக்கும் குரவைக்கூத்து, களியாட்டம் போன்றவற்றைப் பார்க்க வேண்டுமென்றும், தன்னை ஒரு பணியாள் போலப் பொய் சொல்லி அவனுடன் அங்கு அழைத்துச் செல்ல முடியுமா என்றும் கேட்டான். வந்தியத்தேவன் அவ்வாறெல்லாம் மோசடிக் காரியத்துக்கு உடன்பட மறுத்து, தான் தன்னுடன் படித்த சம்புவரையர் மகனான கந்தமாறவேளின் நண்பன் என்ற உரிமையில் போவதாகக் கூறினான். அப்படியென்றால் அவனுக்கே இன்றைக்கு அங்கு தங்குவது சிரமம்தான் எனக் கூறினான், ஆழ்வார்க்கடியான். பேசிக்கொண்டே தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஆழ்வார்க்கடியான், வீர நாராயண ஏரியை ஒட்டியிருந்த வீர நாராயணப் பெருமாள் கோயிலுக்கு வந்தியத்தேவனை அழைக்க, அவனும் உடன் சென்றான். வீர நாராயணர் கோவிலைப் பற்றிய ஒரு அறிமுகம்: முதலாம் பராந்தகச் சோழன் தன்னுடைய ஆட்சிக் காலத்தில், இராஷ்டிரகூட மன்னர்கள் படையெடுத்து வருவார்கள் என எதிர்பார்த்து, பாதுகாப்புக்காகத் தன் மகன் இராஜாதித்தன் தலைமையில் ஒரு பெரிய சைன்யத்தைத் திருமுனைப்பாடி நாட்டில் இருக்கச் செய்தான். படைவீரர்கள் வேலையின்றி இருப்பதைக் கண்ட இராஜாதித்தன், குடிமக்களுக்கு உதவும் வகையில் கொள்ளிடத்திலிருந்து வீணாகும் வெள்ள நீரின் ஒரு பகுதியைச் சேமிக்க ஒரு ஏரியை உருவாக்கி, அதற்கு தன் தந்தையின் இன்னொரு விருதுப் பெயரான வீர நாராயணன் ஏரி எனப் பெயரிட்டான். ஏரிக் கரைகளைக் காக்க அந்நாளில் பெருமாளுக்குக் கோயில் கட்டுவது வழக்கம். அந்தக் கோவிலுக்குத்தான் இப்பொழுது வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் வந்திருக்கிறார்கள். ஆழ்வார்க்கடியான் பக்திப் பரவசத்தில் கண்ணீர் வழிய உருகி, பாசுரங்களைப் பாடுவதைக் கண்ட வந்தியத்தேவனுக்கு ஆழ்வார்க்கடியான் மீது மதிப்பு உண்டாகியது.  அர்ச்சகர் ஈசுவர பட்டரிடம் தீர்த்தம் பெற்றுக்கொண்டு வெளியில் வந்தவுடன் வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானிடம் தன்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டான். பதிலுக்கு ஆழ்வார்க்கடியான் கேட்ட உதவி வந்தியத்தேவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பழுவேட்டரையருடன் மூடுபல்லக்கில் சென்ற பெண்ணுக்கு ஒரு சீட்டு தருவதாகவும், அதை சம்புவரையர் மாளிகையில் தங்க நேர்ந்தால் அந்தப் பெண்ணிடம் சேர்த்து விடுமாறும் ஆழ்வார்க்கடியான் கூறியதைக் கேட்ட வந்தியத்தேவன், படபடப்படைந்து கோபப்பட்டான். ஆழ்வார்க்கடியான் அதைப் பொருட்படுத்தாமல், ‘முடியாது என்றால் பரவாயில்லை; நீ இந்த உதவியை எனக்குச் செய்திருந்தால், பின்னால் நானும் உனக்கு உதவ வசதியாய் இருக்கும்’ எனக் கூற, வந்தியத்தேவன் எரிச்சலில் உடனே அங்கிருந்து குதிரையிலேறிக் கிளம்பி விட்டான். சம்புவரையரின் மாளிகையை வேகமாய் நெருங்கியவன், பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கவனித்தான். தயங்கி நின்றால் விசாரிப்பார்கள் என்று எண்ணி, குதிரையைத் திறந்திருந்த பெரிய கோட்டையின்  வாசலுக்குள்  வேகமாக இட்டுச் சென்றான். ஆனால் படைவீரர்கள் அவனைத் தடுத்து நிறுத்தி அவன் துடுக்குத்தனத்தை விசாரிக்க ஆரம்பித்தனர். அவன் யார் என விசாரித்ததற்கு, ‘என் பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன்; என் நாடு திருவல்லம்; என் குலத்து முன்னோர்களின் பெயர்களை உங்கள் நாட்டு வீரர்கள் தங்கள் மார்பில் எழுதிக் கொண்டு பெருமையடைந்தார்கள், தெரிந்ததா?’ என வீரமாகக் கூறினான். அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் ஏற்கனவே சீண்டிய குதிரையையும் அவர்கள் ஏளனமாய்ப் பேசுவதைக் கண்ட வந்தியத்தேவன் சட்டென ஒரு யுக்தியைச் செயல்படுத்தினான்.   குதிரையை விட்டால் திரும்பிப் போவதாக அமைதியாக வந்தியத்தேவன் கூறினான். கயிற்றை வீரர்கள் விட்டவுடன், உடைவாளை உருவிக் கொண்டு பெரும் வேகத்துடன் கோட்டைக்குள்ளே சென்றான். தடுத்த வேல்கள் விழுந்தன. சுற்றியும் வந்த வீரர்கள் சிதறினர். கோட்டைக்கதவு சாத்தப்பட்டது. வீரர்கள் ‘பிடி.. பிடி..’ என சுற்றி வளைத்தனர். எல்லோரும் சுற்றி வளைத்ததும், வந்தியத்தேவன் குதிரையிலிருந்து தாவிக் குதித்தான். ‘கந்தமாறா.. கந்தமாறா.. என்னைக் கொல்கிறார்கள்’ என சத்தம் போட, நெருங்கி வந்த வீரர்கள் அவன் தங்கள் எஜமானனின் மகன் பெயரைக் கூறவும் தயங்கி நின்றனர். மேல் மாடத்திலிருந்து செங்கண்ணன் சம்புவரையர், தன் மகன் கந்தமாறனை அழைத்து ‘என்ன கலகம்?’ என்று பார்த்து வரச் சொன்னார். கந்தமாறன் வரும்வரை அனைவரும் அப்படியே நின்றிருந்தனர். பிடித்த கத்தியுடன் தனியொரு வீரனாக நின்றிருந்த வந்தியத்தேவனைப் பார்த்ததும், “வல்லவா.. நண்பா.. நீதானா?” என வியந்து கட்டிக் கொண்டான் கந்தமாறன். “இதுதான் நீ எனக்களித்த வரவேற்பா?’ என வந்தியத்தேவன் கூறவும், சுற்றி இருந்த வீரர்களைக் கடிந்துகொண்டு, வந்தியத்தேவனை அணைத்தபடி வெகு உற்சாகமாக உள்ளே கூட்டிச் சென்றான் கந்தமாறன். (கல்கியின் வார்த்தைகளில்: இளம்பிராயத்தில் நட்பும் காதலும்தான் பரவசப் படுத்தக் கூடியவை. காதலுக்காவது சில துன்பங்கள் உண்டு; நட்புக்கு அதுவும் கிடையாது) கந்தமாறன் வந்தியத்தேவனை, தன் தந்தை சம்புவரையரிடம், உற்சாகமும் பெருமையுமாகத் ‘தன் நண்பன்’ என அறிமுகப்படுத்த, அவர் அத்தனை மகிழ்ச்சியாகப் பேசவில்லை. ‘கலவரத்திற்கு காரணம் இவன்தானா?’ என்றும், இருட்டியதற்குப் பிறகு இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் வந்ததையும் அவர் குறை கூறியது கந்தமாறனுக்கு வருத்தமாய் இருந்தது. அடுத்து வந்தியத்தேவனைப் பழுவேட்டரையரிடம் கூட்டிச் சென்றான். பழுவேட்டரையரின்பால் வந்தியத்தேவன் கொண்டிருந்த ஈடுபாட்டைச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வத்தினால் உந்தப்பட்டு, ‘மாமா. இவன் என் நெருங்கிய நண்பன். வாணர் குலத்தவன். நாங்கள் எல்லைக்காவல் புரிந்தபோது உங்களைப் பார்க்க வேண்டும் என கூறிக்கொண்டே இருப்பான். தங்கள் உடம்பில் போரினால் ஏற்பட்ட அறுபத்து நான்கு காயங்கள் இருப்பது உண்மைதானா என எண்ணிப் பார்க்க வேண்டுமென்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பான்’ எனப் பெருமையாகக் கூறினான். பழுவேட்டரையர் குதர்க்கமாக, ‘எண்ணிப் பார்க்கவில்லையென்றால் நம்ப மாட்டாயா? வாணர் குலத்துக்கு மட்டும்தான் வீரம் சொந்தமா?’ என்று கேட்கவும், இருவரும் எரிச்சலும் வருத்தமும் அடைந்தார்கள். வந்தியத்தேவன் சுதாரித்தபடி, ‘ஐயா, பழுவேட்டரையரின் புகழ் குமரி முதல் இமயம் வரை பரவியிருக்கிறது. சந்தேகிப்பதற்கு நான் யார்?’ எனப் பொறுமையாகக் கூறவும், ‘நல்ல மறுமொழி’ என பழுவேட்டரையர் அமைதியாகி விட்டார். சம்புவரையர் வந்தியத்தேவனுக்கு உணவளித்துவிட்டு சீக்கிரம் படுக்க வைத்துவிட்டுத் திரும்புமாறு கந்தமாறனுக்குக் கட்டளையிட்டார். அந்தப்புரத்துக்கு வந்தியத்தேவனைக் கூட்டிச் சென்ற கந்தமாறன், தன் அன்னையை அவனுக்கு அறிமுகப் படுத்தினான். அன்னையை வணங்கிய வந்தியத்தேவன் அவருக்குப் பின்னால் ஒளிந்ததுதான் கந்தமாறன் முன்பு தன்னிடம் சொல்லியிருந்த அவனது தங்கை மணிமேகலையாக இருக்கும் என நினைத்துக் கொண்டான். பின், அங்கிருந்த பெண்களின் கூட்டத்தில், ‘பல்லக்கில் வந்த பெண் இருக்கிறாளா?’ என்று கண்களால் தேடினான். தொடரும். சவிதா

புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1

புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1

சோழர் பரம்பரை – ஒரு எளிய அறிமுகம் பொன்னியின் செல்வன் கதைக்குள் நுழையும் முன்பு கதை நிகழும் காலத்தோடு பயணம் செல்ல இந்த பரம்பரை வரலாறு உதவியாக இருக்கும்.விஜயாலய சோழன், ஆதித்ய சோழன் என சிற்றரசாக இருந்த சோழர்கள் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் தங்கள் எல்லையை விரிவடையச் செய்து பேரரசாக உருவெடுத்தனர். பராந்தக சோழனின் மூத்த மகனான இராஜாதித்ய சோழன் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார். எனவே இரண்டாவது மகனாகிய கண்டராதித்ய சோழன் அரசராகப் பதவி ஏற்றார். அவர் ஒரு சிவபக்தர். வெகுகாலம் திருமணத்தை வெறுத்த அவர், தன்னைப் போலவே சிவபக்தியில் தேர்ந்த செம்பியன் மாதேவி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வெகுகாலம் குழந்தைப் பேறு இல்லாததால், இளையவரான அரிஞ்சய சோழருக்கு பட்டத்து இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது. பின்னர், கண்டராதித்ய சோழனுக்கும் செம்பியன் மாதேவிக்கும் குழந்தை பிறந்த சிறிது காலத்திலேயே கண்டராதித்ய சோழன் காலமானார். எனவே, அரிஞ்சய சோழர் அரசராக முடிசூடினார். அவரும் குறைந்த காலத்திலேயே இறந்துவிட, அவரின் மகனான சுந்தர சோழன் பதவி ஏற்றார். அவருடைய காலத்தில் நடைபெற்ற கதையைத்தான் நாம் பார்க்க இருக்கிறோம். சுந்தர சோழனின் முதல் மகனான ஆதித்த கரிகாலனுக்கு மதுரையை ஆண்ட வீரபாண்டியனை வென்றதால் இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது. இதற்கிடையில் கண்டராதித்தனின் மகன் மதுராந்தகனும் வயதை அடைந்து வாரிசாக இருக்கிறார். இந்த வாரிசுரிமை, அரசியல் களத்திலும் சோழமன்னர் குடும்பத்திலும் எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதுதான் இக்கதையின் சாரம். இனி.. புதுவெள்ளம்சற்றேறக்குறைய சுமார் 1070 ஆண்டுகளுக்கு முன், இதே ஆடி பதினெட்டாம் நாளன்று கதை தொடங்குகிறது. இப்பொழுது வீராணம் ஏரி என்று அழைக்கப்படும் வீர நாராயண ஏரிக்கு அன்றுதான் வந்தியத்தேவன் வந்திருக்கிறான். இந்த ஏரி எழுபத்து நான்கு கணவாய்களை உடையது. அது உண்மைதானா என்று எண்ணிப் பார்த்துக் கொண்டே வந்தியத்தேவன் தன் குதிரையுடன் வந்தடைந்த நாளில், பதினெட்டாம் பெருக்குக்காக ஏரிக்கரை களைக்கட்டியிருந்தது. இரு கரைகளும் பொங்கிப் பாய்ந்த அந்த வெள்ளத்தில் மக்களின் வெள்ளமும் சேர்ந்துகொள்ள, வந்தியத்தேவனுக்கு உற்சாகம் பொங்கியது. கண்ணுக்கினிய பெண்கள் கூட்டம் பாடிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தது. சில உபசரிப்புகளையும் அவன் ஏற்றுக் கொண்டான். சோழர்கள் உண்டாக்கி வைத்திருந்த நீர் மேலாண்மையையும் மக்கள் கூட்டம் அவர்களைப் போற்றிப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்ததையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தபோது சலசலப்பும் பரபரப்பும் உற்சாகமும் பதட்டமும் நிறைந்த கூச்சல்கள் எழத் தொடங்கின. எல்லோரும் பார்த்த திசையைப் பார்த்தபோது, ஏழெட்டு பெரிய ஓடங்கள் வெள்ளைப் பாய்கள் விரிக்கப்பட்டு ஏரிக்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. முதலில் வந்த படகில் வீரர்கள் ஆயுதங்களுடன் இறங்கி கூட்டத்தை ஆயுத பலத்துடனும் உரத்த குரல்களுடனும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட இன்றையக் காலகட்டத்தில் பிரதமர் வருகையின்போது நடக்கக்கூடிய கெடுபிடிகள் போன்று அது இருந்தது. வருபவர் யாரென விசாரித்தபோது பனைமரக் கொடியைச் சுட்டிக் காட்டினர். வந்தியத்தேவன் புரியாமல் பார்க்க, அது பழுவேட்டரையருடையது என்று அவனுக்கு ஒருவர் புரிய வைத்தார். அவர் வருவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்த பொழுது அவரின் அரசியல் பலம் புரிந்தது. வந்தியத்தேவனால் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. பழுவேட்டரையர் சிறந்த வீரர். சோழப் பேரரசின் நிதி அமைச்சரான அவர், நிர்வாகத்திலும் மிகுந்த செல்வாக்கு கொண்டிருந்தார். கருவூலம், நிதி மேலாண்மை, கூல விநியோகம் போன்ற முக்கியப் பொறுப்புகள் அவர் வசமும் தலைநகர் தஞ்சாவூர் கோட்டைக் காவல் அவரின் தம்பியான சின்னப் பழுவேட்டரையரின் வசமும் இருந்தன. சுற்றியிருக்கும் அரசுகளுக்கு வரி, தண்டம் விதிக்கக்கூடிய அளவுக்கு உரிமை கொண்டவர் என்றெல்லாம் ஏற்கனவே அவரைப்பற்றி வந்தியத்தேவனுக்குத் தெரிந்திருந்தது. ஒரு வீர இளைஞனான அவனுக்கு, அந்த மாபெரும் வீரரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது உவகையாக இருந்தது. ஆனால் அவன் வந்த வேலையை நினைத்துக் கொண்டான். காஞ்சி நகரில் சோழ அரசின் பட்டத்து இளவரசரும், தன்னுடைய தலைவனுமான ஆதித்த கரிகாலன் எச்சரித்திருந்ததையும் நினைவில் கொண்டு வந்தான். ஆதித்த கரிகாலன் இரு ஓலைகளை, தன் தந்தையான சுந்தர சோழரிடமும், தமக்கையான குந்தவை தேவியிடமும் ரகசியமாக ஒப்படைக்க வேண்டுமெனக் கட்டளையிட்டிருந்தார். முக்கியமாக, பழுவேட்டரையர்களுக்குத் தெரியவே கூடாது என்றும் சொல்லியிருந்தார். வந்தியத்தேவன் குறும்பான வாலிபன் என்பதால், அடக்கமாக, யாருக்கும் தெரியாமல், எந்த வம்புச் சண்டையிலும் நுழையாமல், பத்திரமாகச் செல்லுமாறு கண்டித்திருந்தார். (ஆனால், அவன் அப்படி இருந்திருந்தால் இந்தக் கதை உருவாகியே இருந்திருக்காது) அதை நினைத்துக்கொண்ட வந்தியத்தேவன் பழுவேட்டரையரைப் பார்க்கும் ஆவலை அடக்கிக் கொண்டு, கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் இரவு தங்கும் நோக்கத்துடன் குதிரையைச் செலுத்திக்கொண்டு கிளம்பி விட்டான். இயல்பிலேயே துடிப்பான வந்தியத்தேவனுக்கு, தன் வால்தனங்களை அடக்கிக்கொண்டு பயணம் செய்யக் கடினமாக இருந்தது. ஆனாலும், பழையாறை போன்ற முக்கியமான நகரங்களைப் பார்ப்பது குறித்தும், குந்தைவை தேவியைச் சந்திக்கப்போகும் பெருமையை நினைத்தும், தன் ஆவலை அடக்கிக் கொண்டான். வீரநாராயண விண்ணகரக் கோவிலுக்குச் செல்லும் வழியில், கடைத்தெரு கோலாகலமாய் நிறைந்திருந்தது. அதை ரசித்துக் கொண்டே சென்றவனை அங்கு நடந்துகொண்டிருந்த சைவ வைணவச் சண்டை ஈர்த்தது. ஒரு சைவர், ஒரு வைணவர் மற்றும் ஒரு அத்வைதி ஆகியோர் தங்கள் கொள்கையே சிறந்தது என வாதிட்டுக் கொண்டிருந்தனர். இருபக்கமும் மனிதர்கள் நின்றுகொண்டு தத்தம் கொள்கைகளுக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்தனர். சண்டையிட்டுக் கொண்டிருப்பவர்களில் வைணவத்துக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்தவர்தான் ஆழ்வார்க்கடியான் நம்பி. அவர் ஆவேசமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார். சைவ- வைணவச் சண்டைகள் அப்பொழுது வெகு பிரசித்தம். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத வந்தியத்தேவன் நடுவில் புகுந்து, சண்டை போடுவதை நிறுத்துமாறும், அப்படிப் போட வேண்டிய அவசியம் இருந்தால், போருக்குச் செல்லும்படியும் கூறினான். மக்களில் சிலருக்கு அவன் சொன்னது பிடித்திருந்தது. ஆழ்வார்க்கடியானின் மொத்த ஆவேசமும் இவன் பக்கம் திரும்பிவிட்டது. விளையாட்டாய் சண்டையை நிறுத்த வந்தியத்தேவன் முயல, கூட்டமும் அதில் சேர்ந்து கொண்டது. அப்போது மறுபடியும் சலசலப்பு ஏற்பட்டது. பழுவேட்டரையர் யானையின் மீது அமர்ந்து, தன் கூட்டங்களுடன் அதிகாரம் பொருந்திய மிளிர்வுடன் வந்து கொண்டிருந்தார். பின்னால் ஒரு பல்லக்கு வந்தது. பல்லக்கின் உள்ளே யார் இருப்பாரோ என்ற எதிர்பார்ப்புடன், வந்தியத்தேவன் பல்லக்கை நோக்கினான். பல்லக்கு வந்தியத்தேவனைக் கடக்கும் போது திரை விலகியது. அழகு பொங்கும் சுந்தர முகம் தோன்றியது. ஆனாலும் மனத்தில் காரணம் தெரியாத ரசிப்பின்மை தோன்றியது. இவனைப் பார்த்தவுடன் சட்டெனத் திரை மூடிக் கொண்டது. யாரைப் பார்த்து பயந்து திரை மூடிக் கொண்டது என்று வந்தியத்தேவன் தேடும்போது, ஆழ்வார்க்கடியான் விசித்திரமான முகபாவத்துடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தான். அவனுக்கு அது மர்மமாகத் தோன்றியது. அந்தக் கணத்தில் அவனுக்கு ஆழ்வார்க்கடியான் மீது ஒரு வித வெறுப்பும் அருவருப்பும் தோன்றியது. தொடரும் சவிதா