சாபத்தில் பிறந்தவர்கள்

சாபத்தில் பிறந்தவர்கள்

கவிதை: செ. புனித ஜோதி நாங்கள்நதியின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் எங்களோடுஓடிக்கொண்டிருக்கிறதுகண்ணீர் நாங்கள்மண்ணின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் குண்டு வெடிப்பில்ஈந்து கொண்டிருக்கிறோம்உடலை நாங்கள்கடலின் சாபத்தில் பிறந்தவர்கள்உண்பதற்கும் உடுப்பதற்கும்உறங்குவதற்கும் இடமின்றிபரந்த தேசத்தில் தினம் தினம்அலைக்கழிக்கப்படுகின்றோம்அலைகளாய் நாங்கள்காற்றின் சாபத்தில் பிறந்தவர்கள்மூச்சுவிடக்கூடஉரிமையற்று இருக்கின்றோம் அத்தனையும்மனிதமற்ற மனங்களின்வன்மத்தில் விளைந்தவிளைச்சல்கள் அவர்களின் ரொட்டித் துண்டுகளில்பழக்கூழ் போலத் தடவித்தடவிஉண்டு மகிழ்கின்றனர்எங்கள் குருதியை காட்டாற்று வெள்ளமாய்ப் பெருகியோடும்அரசியல் ஆதிக்கத்தில்திசைக்கொன்றாய்த் திரிகின்றோம்செத்த பிணமாய் ஏனெனில் நாங்கள்திரிசங்கு நேரத்தில் பிறந்தஅகதிகள்

தூரத்தில் இல்லை

தூரத்தில் இல்லை

கவிதை நீ மனிதன்நீதான் இவ்வுலகம்நீதான் அனைத்தும் செய்தாய் நீதான் வெற்று நிலத்தினைப் பசுமை செய்தாய்நீதான் இரும்பை உருக்கி ஆயுதம் செய்தாய்நீதான் அவர்களுக்குக் கொடுவாள் கொடுத்தாய்நீதான் எல்லாமுமாக நின்றாய் ஆனால்நீதான் அடிமைப்பட்டாய் உறுதியான மனத்தை எங்கோ தொலைத்துநீதான் இங்கு கீழானவன் ஆனாய் அதனால்தான் அவர்கள் உன் நிர்வாணம் பார்க்கின்றனர் அது அவர்களது புத்திஅவர்களின் கடவுள்களும் அப்படித்தான் அதனால்தான் உன்னுள் அவர்கள் அதனைத் தேடுகிறார்கள் நீ மறந்துவிட்டாய் நீதான் அவர்களுக்குபுதிய புதிய செருப்புகள் செய்து கொடுத்தாய்அதனையும் அவர்கள் தேய்த்துதூரம் வீசியிருப்பார்கள்  எப்போது நீ அவர்கள் தூக்கி வீசிய செருப்புகளை எடுத்துஅவர்களின் தலைமேல் சாமரம் வீசப்போகிறாய்?  சல்லடை சல்லடையாகச்  சந்து வைத்து உன்னை அவர்கள் பிரித்து வைத்துள்ளதை எப்போது நீ அறிந்துகொள்ளப் போகிறாய் ?  உன்னிடம் உறுதியான கைகள் இருக்கின்றனஆனால்உறுதி குலைந்த உன் மனத்தைஎப்போது திடம் செய்யப் போகிறாய்?  அவர்கள் கொஞ்சம்நீதான் அதிகம்ஏன் அடிமைப்பட்டிருக்கிறாய்?  எழுந்து நில்அப்போது பார்அவர்களின் சாம்ராஜ்யம் சுக்கு நூறாகச் சிதறிப் போகும் ஆமாம்அந்த நாள்தூரத்தில் இல்லை

ம(க்கா)தக் குப்பை

ம(க்கா)தக் குப்பை

கவிதை கடற்கரை எங்கும்கடவுள் கிடக்கிறார் மடங்கிய கையுடன்மல்லாந்து கிடக்கிறார் உடைந்த கால்கள்ஒதுங்கிக் கிடக்கின்றன கடலும் இரங்கிக்கண்ணீர் வடித்ததுதடவித் தடவித்தானும் ஓய்ந்தது சங்கச் செல்வர்கள்சரித்துப் போட்டபின்தங்க நேரமின்றிசரக்கடிக்கப் போய்விட்டார் துங்கக் கரிமுகத்தோன்சுருண்டு கிடக்கஅங்கவன் கண்கள்ஆகாயம் பார்த்தன மக்காத குப்பைதான்மதவெறி என்பதால்தக்க வைக்காமல்சமுத்திரம் தள்ளியதோ!

சொல்லணு குண்டுகள்

சொல்லணு குண்டுகள்

கவிதை எங்கள் கவிதை வரிகளேஎங்கள் வெடிகுண்டுத் தொழிற்சாலையிலிருந்துவெளி வருகின்ற அணுகுண்டுக் காவியங்களே நாங்கள் உங்களை வெளியே வீசும்போதுஅன்று யூரோசீமாவில் வீசப்பட்டஐன்ஸ்டீன் உருவாக்கியஅணுகுண்டுகளைப் போல் அழிவுகள்உருவாகப்போவதில்லை அந்த அணுகுண்டுசுரண்டுவோன் சுரண்டப்படுவோன் என்றுஎவரையும் மிச்சம் வைக்காமல்தன் தீ வாயினுள் வைத்துப்பொசுக்கி உண்டு ஜீரணித்துவிட்டது ஆனால், இன்று நீங்களோஏழைகளைச் சுரண்டியதால் தங்கள் வாழ்க்கையைசொர்க்கமாக மாற்றிக்கொண்டிருக்கும்சூழ்ச்சிக்காரர்களின் உல்லாச உப்பரிகைகளைவேரோடு தரைமட்டமாக்கிஇந்நாள் வரையில் சுரண்டப்பட்டுஏழ்மைக் குவியல்களில் வாழ்கின்றமுதுகுத் தண்டுகளுக்குப் புதிய பாதைசமைக்கப் போகின்றீர்கள் இந்த சமுதாய ஜீவநதியைத்தனது நச்சுக் கருத்துக்களால்சாக்கடை நீராக்கி, சகதிக் குளமாக்கிஓட முடியாமல் தேங்கும்தடைகளைக் களைவதற்குஎங்கள் உடலிலிருந்து ஒவ்வொரு செல்லையும்அழித்து உருவாக்கும் எங்கள்அருமைக் கவிதைகளே நீங்கள் வெளியே பாய்ந்து வருவதுஅந்தச் சாக்கடையில் சங்கமாவதற்கு அல்லஉங்களுள் இருக்கின்ற சொல்லணுக்களால்அதிலே இருக்கின்ற கிருமிகளையும்கிளர்ச்சி செய்து போரிட்டு அழித்து ஒழித்துவிட்டுபுதிய ரத்த ஓட்டத்தை உருவாக்கவேநீங்கள் புறப்பட்டுச் செல்கின்றீர்கள் நீங்கள்வரிசை வரிசையாய்ஏட்டில் வந்து படியும்போதெல்லாம்எங்களது கண்களில்தொழிலாளி வர்க்கம்வரிசை வரிசையாக வந்துஓரணியில் திரண்டு கூக்குரல் இடுகின்றகாட்சிகள்தான் தென்படுகின்றன தான் உண்ட உணவை ஜீரணிக்கதன்னைச் சுற்றிக் கூடு கட்டிக்கொண்டிருக்கும்கூட்டுப் புழுக்கள் அல்ல நீங்கள்இந்தச் சமுதாயத்திலுள்ள கொடுங்கோலர்களைக்கொட்டுவதற்காகப் பறந்து செல்லும்குளவிப் பூச்சிகள் இந்தச் சமுதாயத்தில் நீச்சலடிக்க முடியாமல்தத்தளிக்கும் ஏழை மக்களுக்கு நீங்கள்கட்டுமரங்களாகவும் கலங்கரை விளக்கமாகவும்விளங்க வேண்டுமென்றேஎங்கள் சிந்தனைத் தேரோட்டத்திலிருந்துசெதுக்கப்பட்டுப் புறப்படுகின்றீர்கள் எங்கள் சோதனைக் குழாயிலிருந்துவெளி வருகின்ற நீங்கள் குழந்தைகள் அல்லதிராவக ஆவிகள் உங்களை உருவாக்கும் பிரம்மாபின்புறம் கையை வைத்துஉங்கள் தலையெழுத்தை எழுதவில்லைமுன்னே வைத்துதீர்க்க தரிசனப் பார்வையோடுஇரும்புச் சூட்டு எழுத்துக்களால் எழுதுகிறான் உங்களது கதிரொளியால் இங்கு உருவாகப்போவதுபச்சை நிற வயல் வெளிகளல்லசெஞ்சாத்து நிறத்தின் செங்குருதிஆற்றில் மிதக்கக் போகும்துப்பாக்கிக் கட்டைகள் நீங்கள் மேடை ஏறியதும்உங்களுக்கு சூட்டப்படப் போவதுமலர் மாலைகள் அல்லஇரும்புச் சங்கிலிகளும்தூக்கு மரச் சுறுக்கு முடிச்சுமே ஆகும் உங்களை யாரும் தூக்கி வைத்துகுழந்தைப் பாட்டு பாடப்போவதில்லைஉங்களைத் தூக்கி தூக்கி வீசப் போகிறார்கள்ஏனென்றால் நீங்கள்அனைத்தும் வெடிகுண்டுகள் நீங்கள் ஆடப் போவதுஊர்வசியின் மோகன அடிகளல்லதொழிலாளி வர்க்கத்தின் ருத்ர தாண்டவம் உங்களிடமிருந்து பனி உருகுவதால் நீங்கள்வால் நட்சத்திரமாய்த் தெரியப் போவதில்லைஅப்போது உருகப்போவதுதனியுடைமைவாதிகளின் ரத்தக் கொழுப்புகள் உங்கள் அடிகளின் கீழே நசுங்கப்போகும் மாட மாளிகைகள்சுரண்டியதால் உருவான குடிசைகளைவிண் முட்டும் கோபுரங்களாகக் காட்டப்போகின்றன நீங்கள் சுவற்றில் எழுதப்படுகின்றதேர்தல் கோஷங்கள் அல்லஇதயத்தில் கீறப்படுகின்ற வறுமை கீதங்கள் நீங்கள் சிவப்பு விளக்கு போட்டுக்கொண்டுவெளியே வந்தாலும்அங்கே நடக்கப்போவதுபாலியல் வன்கொடுமைகள் அல்லஅங்கே போடப்போவதுபொதுவுடமைப் பூ மஞ்சமும்அறிவுடைய அன்பு வாழ்வுமே ஆகும் நீங்கள் வெளியே வரும்போதுகோழி இறகால் உங்களை நாங்கள்அடைகாக்கப் போவதில்லைசெங்கற்சூலை போட்டுசுட்டு எடுத்து அடுக்குகிறோம் உங்களைக் கொண்டு கட்டப் போகும் மாளிகைக்குகுருதி நீர்தான் தெளிக்கப்பட்டாலும்அதன் நிறம் இறுதியில்வெண்மையாகவே மாறப்போகிறது நீங்கள்நான்கு சுவர் அறையிலேபாப் மியூசிக்கோடு கத்தப் போகும்காட்டுக் கூச்சல் அல்லதெருவின் முனையில்பசியின் கண்களோடும் கிழிந்த உடைகளோடும்ஆவலோடு எதிர்பார்க்கும்ஏழைகளின் காதுகளில் விழப் போகும்பூபாள எழுச்சி ராகங்கள் நீங்கள்இந்தத் தனியுடமைக் கடலைத் தாண்டும்போதுஎதிர்ப்படுகின்ற முதலாளித்துவ அரக்கிகளின்வாயிலே புகுந்து காதிலே வரக்கூடாதுஉன் அகன்ற தீ வாயிலேஅவர்களை விழுங்கிவிட்டுபொதுவுடைமை பூமியிலே காலூன்ற வேண்டும் செல்லுங்கள்திசை மாறிச் சென்று சோம்பிக் கிடக்காதீர்கள்உங்களுக்குநாங்கள் ‘போ போ’ என்று கட்டளை இடவில்லைஉங்கள் காதுகளிலே ‘போர் போர்’ என்றதாரக மந்திரத்தை உச்சரித்து அனுப்புகிறோம் உங்களுக்காகஏழை மக்கள் கோடி கோடியாகக்காத்துக் கிடக்கின்றனர்அவர்களின் கைகளிலேயேஉறுதி மிகுந்த அன்புப் பிணைப்பினை ஏற்படுத்துங்கள்முதலாளித்துவத்தின் தலையிலேசதிராட்டம் போடுங்கள்

ஞானக்கிழவன்

ஞானக்கிழவன்

கவிதை அக்கினிக் குழம்புகள் அள்ளி எடுத்துப்பக்குவ லேகியம் படைத்த கிழவனே புழுத்துக் கிடந்த புழுக்களுக் குள்ளேபுலியின் ரத்தம் புகுத்திய தலைவனே விழித்தால் மரணம் விளையுமென் றஞ்சித்தூங்கிக் கிடந்த வேங்கையை எழுப்பிநகங்களை நீதான் ஞாபகப் படுத்தினாய்முகங்களில் மீசை முளைப்பதைச் சொன்னாய் தள்ளாடும் வயதிலும் சருகான தில்லைநீஓலையாய்த் தானே உபயோக மானாய் இத்தனை சாதனை வித்தைகள் புரியஎத்தனை பரம்பரை இருந்தது உனக்கு? இரணிய மின்னல் எழுந்ததே அதுவும்சித்தரின் நெருப்புச் சித்தாந்தங்களும்மட்டுமா உன்னை மாற்றின? இல்லையே வால்டேர் செய்த வார்த்தைப் புரட்சிகள்டார்வின் வீசிய தத்துவ வெடிகள்காரல் மார்க்சின் கனத்த கருத்துகள்ரஸ்ஸல் புரிந்த ரசவா தங்கள்விஞ்ஞானிகளின் மெய்ஞ்ஞா னங்கள்இத்தனை உரங்கள் இட்டத னால்உன்மூளையில் மூலிகை முளைத்தது தந்தையே சூரிய மருந்து பட்டதும் வானில்உடுக்கள் என்னும் வடுக்கள் மறையும் உன்கரம் பட்டதும் எம்முடல் தன்னில்காயம் மறைந்தொரு மாயம் நிகழ்ந்தது கி.மு. கி.பி. பழைய கணக்குபெ.மு. பெ.பி. புதிய கணக்கு ஒரு நூற்றாண்டைக் கூட்டிக் கழித்தால்உன்றன் அறிவே மிஞ்சும் எமக்கு நின் அடையாளம் தாடியும் தடியும்நீதான் எங்கள் அடியும் முடியும் (சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள திராவிடச் சுவடுகள் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை)

காஞ்சியில் உதித்த கதிரொளி

காஞ்சியில் உதித்த கதிரொளி

காஞ்சியில் விடிந்த காலைப்பொழுதேபெரியார் கைபிடித்த கதிரொளியேசாதியக் கைமுறித்த தமிழ்வேலேதமிழ்க்கொடி யேற்றிய அறிஞனே நாவிரித்தால் தமிழும் ஆங்கிலமும்காவிரியாய்க் கரைபுரளும் நானிலமேபாவிரித்துப் பரணிபாடும் நின்புகழ்நீவிரித்த விரல்வழி தேடியோடும் ஒன்றேகுலம் ஒன்றேதேவன் – உன்வாக்குநன்றேகுலம் நன்மைசெயல் – உன்வாழ்வுகுன்றேயுயர் குணமேகொளல் -உன்வாய்மைநன்றேதமிழ் கொண்டதேவன் – நீயேஅண்ணா இறைவன் எங்குமில்லை என்றாய்இருப்பினுமவன் ஏழை சிரிப்பிலென்றாய்சாதிசமயம் மூடங்க ளென்றாய்சாதிப்போம் வாவாதம்பி யென்றாய் நீதிதேவனையே நீயாரென்று கேட்டாய்நாடாளுமன்ற நர்த்தனம் புரிந்தாய்முதலமைச்சாய் ஆளவும் செய்தாய்முடியாச்சோகம் ஆழ்த்தியே சென்றாய் நீயிருந்த காலம் பரிதியும் சிரித்ததுநீயில்லாக் காலம் புழுதியாகிப் போனதுநீயிருந்த காலம் பசியும் பறந்ததுநின்நாமம் அன்றோ நெஞ்சில் நிலைத்தது வாழிய வாழிய நின்புகழ் வாழியவேவாழிய வாழிய நின்கொள்கை வாழியவேவாழிய வாழிய எம்வழிகாட்டி வாழியவேவாழிய வாழிய அண்ணா வாழியவே!

தாயே தாதியோ? இதுவே நீதியோ?

தாயே தாதியோ? இதுவே நீதியோ?

கவிதை பெண்ணாய்ப் பிறத்தலே பெருமைமண்ணில் உரைப்பார் உண்மைஉண்மை நிலையோ காண்கில்உதிரம் உறையும் நெஞ்சில் பிறந்த போதினில் கள்ளிப்பால்அருந்தத் தருவார் அன்னையரேபருவம் மலரும் பாவையரைப்பருந்தாய் கொத்தியே சிதைப்பார் விரும்பா உறவாய் விளைந்திடும்கருவையும் சுமப்பார் கனிவுடனேவிதைத்தே எங்கோஓடி மறைந்தான்விதையேற்றே விரும்பி வளர்த்தாள் அப்பனில்லாப் பிள்ளை அழாதவாறேகையுழைத்துக் கனிந்து வளர்த்தாள்தன்மடி மெத்தையாக்கித் தாலாட்டியேதானுறங்காது கனவுகள் வளர்த்தாள் கல்வியில் சிறக்கக் கட்டெறும்பானாள்வாழ்வில் உயர்த்தத் தேய்பிறையானாள்தாயவள் தேய சேயவன் சிறந்தான்சீர்மிகு பட்டம் சிறந்திட உயர்ந்தான் தெய்வம் தானென்றறியாத் தாயவள்தெய்வம் தொழுதே நன்றி உரைத்தாள்முடிந்தது துயரென்று முகமலர்ந்தாள்சிறந்தது வாழ்வென அகமகிழ்ந்தாள் விதியவள் வாழ்வில் வேறு விளைத்ததுமகனவன் மனத்தில் சேறு விளைந்ததுமணந்தான் மாளிகை வாசம் வந்ததுகுணந்தான் கெட்டிட நாசம் புகுந்தது உச்சிமுகர்ந்து அள்ளி அணைத்த தாய்எட்டி உதைக்கத் துள்ளி விழுந்தனளேநான்பெத்த ராசா – ஈனமாய்க் குரலில்துடித்தாள் உதிரம் உதிர்த்தாள் மனத்தில் இதுதான் நான்பெத்த ராசாவா? ஊறியபாலெல்லாம் உதவாது போனதுவோமனத்தில் எண்ணங்கள் பலவிதமாயினும்நான்பெத்த ராசா நல்லா வாழட்டும் தாயுள்ளம் வாழ்த்தியது வலிகளில்இருக்கஇடம் தேடியது வீதிகளில்கையுழைத்துக் கஞ்சிவார்த்த கட்டுடல்நைந்ததுணியாகித் தள்ளாடும் ஊசலானது நொந்துடல் வெம்பி மனமதில் குறுகிதள்ளாடி வந்தாள் தன்மகன் வாசல்அழுகின்ற குழந்தைக்குத் தாதி தேவைஅணுகுங்கள் உள்ளே சம்பளம் ஆயிரம் கண்டாள் ஓர் அறிவிப்பு அட்டைதனைகுமுறினாள் காலத்தின் கோலத்தால்அழுகை மீறிட அடிமனத்தில் ஆயிரம்நினைவுகள் தாலாட்டத் தாதியோ நான்பெத்த ராசா நீயழப் பார்த்ததிலைபேரன் அழநான் பார்த்திருப்பேனோகையிலெடுத்து வளர்த்த மகன்முன்னேகையெடுத்து வணங்கித் தொழுதனளே எதற்காக மீண்டுவந்தாய் என்முன்னேதந்தையோ தாயோ எனக்கிலை போதாரையாய் வழிந்திடும் விழிகளில்தாயவள் இழைத்தாள் கெஞ்சலை நிந்தாய் இறந்தனள் நீ உதைத்தபோதேநின்முன் நிற்பவள் நின்சேய் தாதியேஅனுபவம் நிறைய உண்டு பிள்ளை வளர்ப்பினில்ஆசையாய் நான் வளர்த்த ராசா உலகிலுண்டு தாலாட்டுப் பாடிடுவேன் தளிர்ப்பிஞ்சைத் தாங்கிடுவேன்நீராட்டித் துடைத்திடுவேன் நெஞ்சினில் தாங்கிடுவேன்உறங்கிடக் கதை சொல்வேன் உறங்காது பார்த்திருப்பேன்நிலவினை நான்காட்டி நிலாச்சோறு ஊட்டிடுவேன் மார்பினில் உதைத்தாலும் மகிழ்வோடு ஏற்றிடுவேன்நான்பெத்த ராசாவாய்ப் பிள்ளைமுகம் பார்த்திருப்பேன்பாசத்திற்கு விலையில்லை பணம்காசு வேண்டாமய்யாதாயவள் இறந்துவிட்டாள் தாதியிவள் மண்டியிட்டாள்!

தமிழைத் தோளேந்திக் காத்த எழிற் சுப்பிரமணிய பாரதியார்

தமிழைத் தோளேந்திக் காத்த எழிற் சுப்பிரமணிய பாரதியார்

பாரதியார் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை சீவலப்பேரியில் நன்கு அறிமுகமான, செல்வாக்கு மிக்கவரான, சத்திரம் சுப்பையர் என்ற கடுவாய்ச் சுப்பையர் – பாகீரதி அம்மையார் ஆகியோரின் மகன் சின்னச்சாமியின் (சுந்தரராஜன் என்ற செல்லப் பெயரும் உண்டு) மகன் சுப்பிரமணியன் என்ற பாரதி, கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியவர். 39 ஆண்டுகளே வாழ்ந்த பாரதி எழுதிக் குவித்திருப்பவை ஏராளம். ஒரு கவிஞனாக, பத்திரிகை ஆசிரியராக, கார்ட்டூனிஸ்ட்டாக, சிறுகதை எழுத்தாளராக, கட்டுரை ஆசிரியராக அவரது பரிமாணங்கள் கணக்கிலடங்கா. வீர சுதந்திரம் வேண்டி நின்ற போராளி; பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்த சீர்திருத்தவாதி; சாதிப் பிரிவுகளையும் தீண்டாமையையும் எதிர்த்துப் போரிட்ட புரட்சியாளர்; சர்வதேசக் கண்ணோட்டத்துடன் சமகால அரசியலை விமர்சித்தவர். பாரதியின் கவிதைகள் போலப் போற்றத்தக்க வகையில் கட்டுரைகளும் கதைகளும் அமைந்துள்ள பான்மையை ஒரு சிலரே அறிவர். கவிதா மண்டலத்தின் ஏகச் சக்கரவர்த்தியாக விளங்குவது போலவே, உரைநடைக்கும் அவரே வழிவகுத்துள்ளார் என்பதைத் தமிழகம் இன்னும் உணராதது விந்தையே! கவிதைகளில் சுருக்கமாகக் கூறப்பட்ட பல செய்திகளை, கட்டுரைகளிலும் கதைகளிலும் விரிவாக விளக்கியுள்ளார். இவரது சிறுகதைகள் ஒழுக்க மேம்பாட்டிற்காக, கலாச்சார மேம்பாட்டிற்காக, தேசபக்தியை உருவாக்குவதற்காக எழுதப்பட்டன. நிலப் பிரபுத்துவச் சமூகத்தில் நிலவிய சாதி அமைப்பு, மூட நம்பிக்கை, பெண் அடிமைத்தனம், போலி வாழ்க்கை ஆகியவற்றை அவரது சிறுகதைகள் அம்பலப்படுத்துகின்றன. இவர் ஒரு முற்போக்கான புரட்சிகரப் புனைவியல்வாதியாவார். கலை இலக்கியத்தில் நிலப்பிரபுத்துவத் தன்மை நிலவிவந்த காலத்தில், கலை இலக்கியக் கோட்பாட்டை ஜனநாயகத் தன்மை உள்ளதாக மாற்றுவதற்குப் பாடுபட்டவர். பாரதியின் காலகட்டம் சமூக அடிப்படையில் தேசியப் பூஷ்ர்வாக்களின் தோற்றக் காலமாக இருந்தது. வெள்ளையரின் வருகைக்குப் பின்பு நிலப்பிரபுத்துவத்துடன் இந்தியவகை முதலாளித்துவம் வளரத் தொடங்கியதன் காரணமாக, தேசிய முதலாளிகள் பாரம்பரியக் கருத்துக்களைச் சுவீகரித்துக்கொண்டதுடன் புதுமையையும் வரவேற்கும் போக்குக் கொண்டவர்களாகவே இருந்தனர். அதனால், வெள்ளையர்களை எதிர்த்தார்கள். அதே நேரத்தில், பாட்டாளி வர்க்கத்தினருடன் முரண்பாடு கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்களிடம் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு இருந்தபோதிலும் தங்களது வர்க்க நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு, தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டும் போக்கும் இவர்களிடம் இருந்தது. இத்தகைய காலகட்டத்தில்தான் இலக்கியம் படைத்தார் பாரதி. புதர் மண்டிக் கிடந்த தமிழ் இலக்கியத்தைச் சுத்தம் செய்யும் முதல் பணியாக அவரது பணி அமைந்துவிட்டது. அப்படிச் சுத்தம் செய்யும்பொழுது அவர் முற்போக்கானவற்றைத் தன் வசப்படுத்திக்கொள்கிறார். அவற்றைக் காலத்தின் தேவை கருதிப் புதிய இலக்கியமாகப் படைத்துத் தந்தார். அந்தப் புதிய இலக்கிய வகைதான் அவரது சிறுகதைகள். ஆறில் ஒரு பங்கு என்ற கதைக்கு பாரதி இவ்வாறாக முகவுரை தருகிறார்: ஒரு சாதி ஓர் உயிர். பாரத நாட்டில் உள்ள 30 கோடி ஜனங்களும் ஒரு சாதி. வகுப்புகள் இருக்கலாம்; பிரிவுகள் இருக்கலாகாது; வெவ்வேறு தொழில் புரியலாம்; பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது; மத பேதங்கள் இருக்கலாம்; மத விரோதங்கள் இருக்கலாகாது; இந்த உணர்வே நமக்கு சுதந்திரமும் அமரத் தன்மையும் கொடுக்கும். இந்நூலை பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து இரட்சிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத்தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன். பள்ளர், பறையர் என்ற பஞ்சமர் சாதியைச் சார்ந்தவர்களுக்கு வைசியர் என்ற புதிய அந்தஸ்தைக் கொடுத்து நிலப்பிரபுத்துவ எதிர்ப்பைக் காட்டுகிறார். அவர் காலத்தில் அவர் கண்ட சமூக அமைப்பிலிருந்து மீறிய சிந்தனை உலகப் படிமம்தான் இந்தக் கதையின் மூலப் பொருளாக அமைந்துள்ளது. மதங்கள் காதலுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதை ஸ்வர்ணகுமாரி என்ற கதையின் மூலமாகக் கூறுகிறார். சாதியக் கட்டுகள் தகர்த்தெறியப்பட வேண்டும் என்ற பாரதியின் கனவு நிலையை பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகளைக் கதையின் பாத்திரங்களுடன் இணைத்துப் பிரதிபலித்து காட்டுகிறார். வேதம், மகாபாரதம், பைபிள், குர்ஆன் ஆகியவை கூறுபவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற, அறிவு வளர்ச்சிக்கு – விஞ்ஞான வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்தவற்றை, குதிரைக்கொம்பு என்ற கதையின் மூலம் கேலி செய்கிறார். ‘அஞ்சியஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே’ என்று இந்நாட்டு மக்களின் அச்சத்தை இடித்துரைக்கும் வகையில் ஆனைக்கால் உதை என்ற நகைச்சுவைக் கதை மூலம் கேலி செய்கிறார். இதுபோன்ற கதைகள்மூலம், தான் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூகச் சூழலைக் கவனித்து இலக்கியம் படைத்தார். மகாகவியின் புதிய ஆத்திசூடி ஒரு தனி இலக்கியம் என்றே கூறலாம். இந்தப் புதிய ஆத்திசூடிக்குக் காப்புப் பாடலாக எழுதியதில், பரம்பொருள் வாழ்த்தாக சர்வ மதச் சமரசமாக அனைத்துச் சமயங்களின் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார். ஆத்திசூடி இளம்பிறை யணிந்துமோனத்திருக்கு வெண் மேனியான்கருநிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன்மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர்உருவகத்தாலே உணர்ந்து உணராதுபலவகையாகப் பரவிடும் பரம்பொருள்ஒன்றே! அதனியல் ஒளியுறுமறிவோம்அதன் நிலை கண்டார் அல்லலை அகற்றினார்அதனருள் வாழ்த்தி அமர வாழ்வெய்துவோம் என்று தொடங்கும் பாடலில் சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்தவம் ஆகிய சமயங்களைக் குறிப்பிட்டு, ‘அனைத்து மதங்களிலும் கூறப்படுவது ஒரே பரம்பொருளைப் பற்றித்தான். இந்தப் பரம்பொருளில் ஒளியுறுவது . அவ்வறிவு நிலை கண்டார்க்கு அல்லல் இல்லை. எனவே அத்தகைய பரம்பொருளின் அருளை வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம்’ என்று காப்புப் பாடலில் பாடுகிறார். பாரதியின் புதிய ஆத்திசூடி நல்ல அறிவுரைகளும் ஆணைகளும் நிரம்பிய நல்லதோர் இலக்கியமாகும். நாட்டிற்குத் தேவையானவற்றைக் கூறும் இந்த ஆத்திசூடி நாட்டு மக்களிடம் பரவ வேண்டும். பாரதி திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் விருப்பமின்றியே ஆங்கில மொழியைக் கற்றார். காசியில் சமஸ்கிருதமும் ஹிந்தி மொழியும் பயின்றார். காசியில் இருந்த சமயத்தில் உருது மொழியையும் கற்றார். புதுச்சேரியில் இருக்கும்போது பிரஞ்சு, வங்காளம் ஆகிய மொழிகளைக் கற்றார். பின்னர் ஜெர்மன் மொழியையும் அறிந்தார். சென்னை வாசத்தின்போது தெலுங்கு மொழியைப் படித்தார். பின்னர் அரபு மொழியையும் மலையாள மொழியையும் கற்றார். கோத்த பொய் வேதங்களை எல்லாம் சாடி, மடத்தன முதலையின் வயிற்றைக் கிழித்தவன் பாரதி. கற்றறிந்த பண்டிதர்கள் மட்டுமே பொருள் அறிந்துகொள்ளக்கூடிய காவியங்கள், நூல்கள் கொண்டிருந்த தமிழுக்கு புதிய ஒளி கொண்டுவந்தவர் பாரதி. எளிய நடையில் பாமரருக்கும் பொருள் விளங்குமாறு கவிதைகளை இயற்றியவர் பாரதி. அவர் காலத்துச் சூழ்நிலையில் மக்களின் துயரம், வறுமை, அடிமைத்தனம், மடமை பற்றிக் கனலும் கவர்ச்சியும் கலந்த நடையிலே பாடல்களை எழுதினார். வெயில் பயிர்களுக்கு உயிர் கொடுப்பதைப்போல, தமிழர்களின் உள்ளத்தை மலர்ந்து விரியச் செய்த மகாகவி பாரதி 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செப்டம்பர் 12ஆம் தேதி அதிகாலை 1:30 மணிக்கு இயற்கை எய்தினார். பாரதியின் இறுதிச்சடங்கில் பாரதியின் தூரத்து உறவினரான ஹரிஹர சர்மா கொள்ளி வைத்தார். இறுதிச் சடங்கிற்கான செலவுகளை வக்கீல் துரைசாமி ஐயர் செய்தார். ஒண்டிக் குடித்தனச் சூழல், பிராமண சமூக வழக்கம், இன்று இருப்பதைப் போன்று பாதுகாத்து வைக்கக்கூடிய வசதியின்மை ஆகியவற்றால் பாரதியின் உடல் எரியூட்டப்பட்டது. சிலமணி நேரங்களில் தகவல் சொல்வதற்கோ மற்றவர்கள் வந்து பங்கேற்பதற்கோ வசதி இல்லாத அந்தக் காலத்தில், வெறும் 14 பேருடன் மட்டுமே பாரதியின் இறுதிச்சடங்குகள் நடந்தன. இருப்பினும் அவரது உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் பாரதி கலந்தே நிற்கின்றார்.

சந்திராயன் பயணத்தில்

சந்திராயன் பயணத்தில்

கவிதை கடக்கும் தொலைவுநீண்டதாக இருந்தாலும்சுங்கச் சாவடியில்லாததுதமது பயணத்தில்சுகமாக இருந்ததாய்சந்திராயன் சொன்னான் பள்ளம் மேடானசாலைகள்கூடநிலாவை அடையும் வரைஎங்கும் பார்க்கவில்லையெனஅவன் சொன்னதுஅதிசயமாய் இருந்தது சிறுநீர் கழிக்கஐந்து ரூபாய் வசூலிக்கும்சாலையோர உணவகங்கள்ஒன்றுகூடக் காணவில்லை எனசந்திராயன் சொன்னதுசரித்திர முக்கியத்துவமானது வழியில் காசு வாங்கஒரு கடவுள் கூடஉண்டியல் வைத்திருக்கவில்லைஎனச் சொன்னதுநம்ப முடியாத ஆச்சரியம் அனைத்து ஆவணங்களும்சரியாக இருந்தும்போக்குவரத்து விதி மீறலெனப்போலீஸ் பிடிக்காததைசந்திராயன் சொல்லிச்சிரித்தான் செல்கிற வழிகளில்விண்வெளி இடங்களைவீட்டு மனைகளாக்கிவிலை பேசி விற்கரியல் எஸ்டேட்நிறுவனங்களின்அறிவிப்புப் பலகையைப்பார்க்காததுசந்திராயனுக்கு ஷாக் உற்சாக பானம்அருந்திவிட்டுஉருண்டு புரண்டு கிடக்கும்எந்தப் பரமாத்மாக்களையும்தான் செல்லும் வழியில்பார்க்காதது சந்திராயனுக்கு சற்றுசௌகரியக் குறைவுதான் நிலவின்தென்துருவத்தில் இறங்கிவெகு நேரமாயிற்றுஇன்னும் கூடபாட்டி வந்தபாடில்லைபேரப் பிள்ளைக்குஆரத்தி எடுக்கஎன வருத்தம் வேறுஅவனுக்கு ஆங்காங்கேஇரைந்து கிடக்கின்றனஅவளது கன்னக்குழியில்கால் வைத்தசந்திராயன் எடுத்தபுகைப்படத்தில்அவர் சுட்ட வடைகள்

கடிதங்களுக்கு உயிர் இருந்தது

கடிதங்களுக்கு உயிர் இருந்தது

கவிதை கையால் எழுதப்பட்டகடிதங்கள்காலமாற்றத்தில் கரைந்துவிட்டகாவியங்கள் சகல விஷயங்களும்அஞ்சல் அட்டையிலேயேஎழுதப்பட்டனசங்கேதக் குறியீடுகள்தேவைப்படவில்லை மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்தேகடிதங்கள் எழுதப்பட்டனஒவ்வொருவருக்கும் தனித்தனியாய்உள்பெட்டியில்சொல்ல வேண்டியிருக்கவில்லை மாடு கன்று போட்டது முதல்மாடி வீடு விற்கிற வரைமனம் திறந்துபரிமாறிக்கொள்ளப்பட்டதுதனிப்பட்ட விவகாரம் என்றுஎதுவும் இருக்கவில்லை ஒருவர் சத்தம் போட்டு வாசிக்கஊரே கூடிக் கேட்டதுகடவுச்சொல் போட்டும்கூடஅடுத்தவரிடம் கொடுக்கத் தயங்கும்அலைபேசி அப்போதுஅறிமுகம் ஆகியிருக்கவில்லை மைதாப் பசை ஒட்டியஇன்லாண்ட் கவருக்குள்ஒளித்து வைக்கப்பட்டிருந்தது காதல் வருடக் கணக்கில்கூடகடிதத்துக்காக மட்டுமல்லகாதலுக்காகவும் காத்திருந்தனர்பிக் அப்பும் பிரேக் அப்பும்அறிமுகமாகியிருக்கவில்லை நாய்க்குட்டி முதல்கோழிக்குஞ்சு வரைக்கும்குசலம் விசாரிக்கும்நேசம் இருந்ததுகுடும்பத்தினரிடம் பேசக்கூடஅப்பாயிண்ட்மெண்ட்கேட்கவேண்டியிருக்கவில்லை தொலைவில் இருந்தாலும்தொலைந்து போகாத இதயங்கள்இணைந்தே இருந்தனதொடர்பு எல்லைக்கு அப்பால்சென்றுவிடவில்லை உடலின் தேவைகளை விடவும்மனத்தின் தேவைகள்முக்கியமாய் இருந்தனஇணையவழி இணை தேடல்இல்லவே இல்லை கோபங்களைக் கொட்டித் தீர்த்திட்டபோதும்மன்னிப்புக் கடிதங்கள் எழுதமனம் இருந்ததுஎந்தக் கடிதமுமேபிளாக் செய்யப்படவில்லை அன்பும் அக்கறையும்குழைத்து எழுதிஉணர்வைச் சுமந்து வந்தகடிதங்களுக்குஉயிர் இருந்தது AI தொழில்நுட்பத்தில்தேவையான கடிதத்தைஆர்டர் செய்துபெற்றுக்கொள்ளலாமாம்உணர்வற்றவார்த்தை ஜாலங்களே போதுமோ5G யுக மனிதர்களுக்கு? கடிதம் எழுதும்பழக்கம் மட்டுமல்லகடிதங்களுமேவழக்கொழிந்துபோய்விட்டனகூகுளிட்டுப் பார்த்தாலும்அடுத்த தலைமுறைக்குக் காண்பிக்கஅகப்படவில்லை எதுவும் என்றேனும் ஒரு நாள்கண்ணில் படலாம்யாரும் அறியாமல்யாரேனும் ஒருவர் பத்திரப்படுத்தியகடிதங்களில் ஒன்றேனும்

கதை பேசும் ஓவியம்

கதை பேசும் ஓவியம்

கவிதை வரைபடம் ஒன்றைக் கரம் புகுத்திபடிக்கச் சொல்கிறான்என் அப்புக்குட்டி ஏழுமலை தாண்டிஇரண்டு மலைகளுக்கிடையேஎப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கின்றனவெண்நிலவும் சிவப்புச் சூரியனும் ஓடி வருகிறதுமலையடிவாரம் கடந்தநதியொன்று சலசலப்புடன் பாடும் பறவை இரண்டைத்தாங்கியே நிற்கிறதுஅசை ஒலியெழுப்பியாய்படபடத்த இலை மரப்பச்சை நதி மணலில் கால்த் தடம் பதித்துஅருகில் குடில் சென்றுதிண்ணையில் குரைக்கின்றநாயின் சிறு பாதம் சுற்றுகிறது பின், வானம் பார்த்துஊர்க்குருவிகள்எங்கே போகின்றன கூட்டமாய்?எனக் கேட்டவாறுநண்பருடன் மிகை நயம் பேசும்போதே பெயரற்றுத் தொடரும் என்றேவரைந்துவிடுகிறான் அடிக்குறிப்பை அப்படியென்றால் பேசியதெல்லாம்கோடுகளும் நிறங்களும்கடந்து வந்த எண்ணமும்கற்பனையின் கதைகளுமா? பேசும் படம்அடுத்து வண்ணமேற்றிக்கொண்டிருக்கிறதுஓவியத்தின் கதைக்காக

அங்கேயே..

அங்கேயே..

கவிதை இரங்கற்பா எழுதிக்கொண்டிருக்கிறேன்விரைவில் வந்துவிடும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் மலர் மாலைகள்தயார் செய்ய நேரமாகலாம்வேம்பு நிச்சயம் இருக்கும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் ஆயிரம் முதலைகள்உடனே ஒப்புக்கொண்டுள்ளனபோட்டியில் கலந்துகொள்ளஎங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் வண்ணக் கோலாட்டம்மிதமாகத் தோன்றலாம்பறை அடித்து விளையாடகுத்தாட்டம் வரும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் தள்ளிப் போகுமோகவலை வேண்டவே வேண்டாம்முகச் சவரமும் உடன் செய்வார்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் தண்ணீர்ப் பானைக்காகத்தேடி அலைய வேண்டாம்தோளை வலுவாக வைத்துஎங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் என்ன!வாய்க்கரிசிக்கும் வழியில்லையா? அடடா!சரி, அதையும் நாங்களே தருகிறோம்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் முறையாகச் செய்ய வேண்டியகாரியங்கள் தெரியுமா?இல்லை, அதுவும் எங்கள் வேலையா?எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் ஐந்தாம் நாள், மாதக் கணக்காவதுமுடியுமோ என்னவோ.. பரவாயில்லைஎங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் கழுத்து நெரிபட்டுக்கிடந்தசனநாயகம் இறந்த நேரமாவதுசரியாகக் குறித்தீரா சோதிடரேபாவம் அந்தப் பச்சை மண்ணைஇனியாவது பிரித்துப் பார்க்காமல்வலியின்றி அடக்கம் செய்வோம் விரைந்து வருகிறது எல்லாம்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள்

ஆடி மாதம்

ஆடி மாதம்

கவிதை வானமே கூரையெனவாழ்ந்திருந்த சாமிகள்மூன்று பிரகாரங்கள் கொண்டகான்கிரீட் கட்டடத்துக்குள்அடைக்கப்பட்டனர் கோயில்கள் எல்லாம்ஆலயங்கள் ஆகிவிட்டனபேச்சியம்மனுக்கும் முண்டகக்கண்ணிக்கும்கூடஸ்ரீ என்ற முன்னொட்டு சேர்ந்துகொண்டுவிட்டது எல்லாத் தெருக்களிலும்எல்.ஆர்.ஈஸ்வரி பாடிக்கொண்டிருக்கிறார்எல்.ஈ.டி. அலங்காரக் கட் அவுட்டிலிருந்துஅருள்பாலிக்கிறார்கள் அம்மன்கள் முளைப்பாரி சுமந்துவரும்ஆறு பேருக்கு முன்பாகஎட்டுப் பேர் வருகிறார்கள்கொட்டு அடித்தபடி பொங்கல் வைப்பவர்கள் ஒருபக்கம்கூழ் ஊற்றுபவர்கள் மறுபக்கம்பொங்கிப் பெருக்கெடுக்கிறதுநாள் முவழுதும் பக்திப் பரவசம் மாலையில் தொடங்குகிறதுதீ மிதிக்கும் நிகழ்வுஆத்தாவின் சக்தியில் ஐயம் கொண்டுஅருகே நிறுத்தப்படுகிறது ஆம்புலன்ஸ் முன்னிரவில் களை கட்டும்இசைக் கச்சேரியும் ஆடலும் பாடலும்கூடவே, கூழ் வார்த்த களைப்பு நீங்கடாஸ்மாக் பழரசத்தின் பரவசம் ஆலயத்தின் முன் அனைவரும் திரண்டிருக்கஎதிர்த்திசையில் சிலர்மாரத்தான் ஓடிக்கொண்டிருந்தனர்தலைவிரி கோலமாய் இடைமறித்து நிகழ்த்தப்பட்ட விசாரணையில்அம்பலமானது செய்திஒலிபெருக்கியின் ஓலம் தாங்காமல்ஓடிக்கொண்டிருந்தார்கள் அம்மன்கள்

நங்கூரம்

நங்கூரம்

கவிதை நீண்ட நெடியஓட்டத்திற்குப் பிறகுநிதானமாய் மெல்லதிரும்பிப்பார்க்கிறேன் எத்தனை தூரம்நதியில் விழுந்த இலையாககாலம் என்னைஇழுத்துக்கொண்டு வந்திருக்கிறது! காலத்துக்கேற்றகதாபாத்திரங்களின்ஒப்பனை கலையாமல் உள்வைத்துத் தைத்தஉணர்வுகளின்சுயம் கசியாமல் விழி பூக்கும் கண்ணீரின்வேர்களின்வலி விழுங்கி உதட்டுப் புன்னகையில்கூடுதலாய்க் கொஞ்சம்ஒளி கூட்டி என் குணம் தெரியாமல்பூச்சாண்டி காட்டிய வாழ்விற்கும்நேசம் போதித்து எஞ்சி நிற்கும்காலப் பெருவெளியில்நங்கூரமாகும் என்னை நினைத்தால்எனக்கே சற்றுபொறாமையாகத்தான் இருக்கிறது

சுத்தமான கடவுள்

சுத்தமான கடவுள்

கவிதை அகல் விளக்கை‘சுத்தமான’ எள் எண்ணையால் ஏற்றினால்சனி சமாதான உடன்படிக்கைக்கு வருவாராம் கடைவீதிகளைச் சலித்தால்தங்க விளக்குகூட கண்முன்னே மின்னுகிறதுமண்விளக்கென வாய் திறந்தால்அதிசயப்பிறவி போல் பார்க்கிறார்கள்எங்கே போனார்கள் மண்பாண்டக் கலைஞர்கள்..?அறுபது மைலுக்கு அப்பால் போனால்‘சுத்தமான’ அகல்விளக்கு கிடைக்குமாம் எள் எண்ணை கேட்டால்எள் படம் போடப்பட்டஎண்ணற்ற பைகள் வரிசையில் கிடந்தனஎங்கே போனார்கள் செக்காட்டுவோர்.?இருபது மைல் கடந்து போனால்‘சுத்தமான’ எண்ணெய் கிடைக்குமாம் திரி கேட்டால்‘சுத்தமான’ பஞ்சுத்திரி கிராமத்தில்தானாம்மறைந்துவிட்டதா பருத்தி உற்பத்தி..? வெறுப்பின் உச்சத்தில்பொறுப்பாய் வீடு வந்துகிண்ணத்தை விளக்காக்கிநீரை எண்ணையென வார்த்துபூவைத் திரியென மிதக்கவிட்டுகோபத்தைத் தணலாக்கிப் பற்ற வைக்கபூத்திரியில் ஒளிர்கிறார் ‘சுத்தமான’ கடவுள்

மனிதத் தொழிற்சாலைகள்

மனிதத் தொழிற்சாலைகள்

மொழிபெயர்ப்புக் கவிதை நாட்கள்… ஒருவேளை அவற்றில் பலவகை இருக்கலாம்ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும், சகோதரி டுமல்ட்? என் கடிதம், நானே செய்த அசைந்தாடும் நாற்காலி, என் வீணை எதுவுமே உனக்குக் கிடைக்கவில்லை என்பது தெளிவாகிறது உன் வெளிச்சத்தில் என்குடியிருப்பை நிறுவ நான் விரும்பினேன்என்னுடைய ஒளிக்கீற்றுகளின் இருப்பை நீஅடையாளம் காணவில்லை என்கிறாயா? எனில், நிச்சயமாக எங்கோ ஒருதவறு நிகழந்திருக்க வேண்டும் நகரத்தின் பொழுதுபோக்கு மையத்தில்நீச்சல் குளத்தின் அருகேஉன் குழந்தையுடன் நீநடமாடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்,ஒருமுறை நாம் அதே நீச்சலுடை அணிந்தோம்ஆனால் இப்போதுநம் கனவு தரிசனங்களின் குவிப்பில்சிறு விலகல் நடந்துள்ளது தோட்டத்து மண்நரியின் கால்தடம் பதிந்ததைப் போலதொடுவதற்கு சூடாக இருக்கிறது எங்கள் நடுத்தர நகரத்தை நான் பின்தொடர்ந்தேன்ஒரு வால்கிரீன்ஸில் நம் பாதை பிளவுபட்டபோதுவிக்டோரியன் துப்பறியும் நபரைப் போலகிரினோலின் ஆடையுடனும் குழைந்த இன் சொற்களுடனும்என் அடிச்சுவடுகளை நான் திரும்பப் பெற்றுக்கொண்டேன் ஆனால் இதோ, சகோதரி டுமல்ட்,நிழல்கள் என் பருத்த கைகளில் இறங்குகின்றனஎன் மார்பகங்களை இழுத்த குழந்தைகளைநான் நினைவில் வைத்திருக்கிறேன் எங்கள் வியர்வையும் பாலும்கலந்தே இருக்கின்றன

அக்கா-மவ

அக்கா-மவ

க(வி)தை ஆறு வயசிருக்கும்அக்காவை அயித்தான்மேளம் கொட்டி தாலி கட்டயில.. அயித்தான் கைபிடிச்சி அக்கா போகயிலே‘அக்கா’ன்னு ஓடிப்போயி அவ கால கட்டிக்கிட்டேன்கண்ணுல தேக்கிவைச்ச மடை ஒடைச்சிஅக்கா சேலைய நான் நனைச்சேன் ஆத்தா மூக்கைச் சிந்தி அப்பால வீசிப்போட்டுஅக்கா காலவுடு; வாக்கப்பட்டு போறா அவவாடா ராசான்னு கை புடிச்சி வலிச்சிட்டா.. ஆத்தா கைய வுடு அக்காகூட போறேன்னுஅழுது புரண்டு மல்லுக்கட்டி நாந்திமிர.. திலும்பி திலும்பி பாத்து தெருவெறங்கி போன அக்காசட்டுனு ஓடியாந்து குனிஞ்சி முத்தமிட்டுசீரு பானையோடே கண்ணுல கரைஞ்சி போனா.. ஆறுயேழு நாளு அக்கா அக்கானுஅழுது பொலம்பியிருந்தேன்..ஆத்தா ஆயி அப்பன் தேற்ற தெளிஞ்சிகிட்டேன்.. பொண்ணா பொறந்துபுட்டா வயசும் வந்துபுட்டாவாக்கப்பட்டுத்தேன் மாமியா வூடு சென்னுமாமனோட குடுத்தனம் பண்ணிடோணும்.. ராசா அழுவாதே.. அக்கா பொண்ணு பெத்துஉனக்குக் கட்டி வைப்பா..அப்போ ஆத்தா சொன்னா… ஆறுமாசமாச்சிஅயித்தான், விளஞ்ச பலாப்பழத்தை சொமந்து வந்தாக..சேதி சொன்னான் சுப்பன் ஓடி வூடு வந்தேன்அக்கா வரலையான்னு அயித்தான் மூஞ்ச பாத்தேன்.. சிரிச்சபடி ஆத்தாசின்ராசு ஓடிப்போயி மாங்கா பறிச்சி வாடாஅக்கா ஆசைப்பட்டா..ன்னு சொன்னா மாங்கா வாங்கத்தேன் அயித்தான் வந்தாராக்கும்அக்காவை நா பாக்கோணும் அவயேன் வரலைன்னுஆத்தாவ திலுப்பி கேட்டேன் அப்பன் ஆத்தா ஆயி அயித்தான் எல்லாரும்கொல்லுன்னு சிரிச்சாக முட்டாப்பய மவனே அக்கா முழுகாம இருக்காடா..சேதி சொல்லத்தேன் மாமன் தேடி வந்தாரு..ஓடிப்போயி மாங்கா பறிச்சி வாடா..சீமக் கிழங்காட்டம் சிறுக்கிய பெத்துனக்குஅக்கா தருவாடா.. ஏதுமப்ப புரியல; ஆனா அக்கா ஏதோ தருவான்னுமாந்தோப்பு ஓடிப்போயி மடிநெறய மாங்காபறிச்சி வந்து அயித்தான் கைகுடுத்தேன்.. ஏழுமாசம் போச்சிஎங்கக்கா பொண்ணு பெத்துட்டானு சொல்லியனுப்பிச்சாக..ஆத்தா ஆயி பல்லு வெத்தலகரை வெளிய தெரியலாச்சி.. ஏலே சின்னராசு.. மருமவ பொறந்துபுட்டாஉம்முட அக்காவ போயி பாக்கோணும்..வெரசா வாடான்னு ஆத்தா கூப்பாடு போட்டுச்சி.. அக்காவ பாக்கோணும்..அதுமட்டுந்தேன் கேட்டுச்சி.. ஓடியாந்து ஏறிக்கிட்டேன்பூட்டிவச்ச வண்டீல அரைக்கால் சட்டையோட.. கிறுக்குப் பயபுள்ளஒன்னுந்தேன் போடாம போயி புள்ளய பாப்பியா..?சொக்கா போட்டு வாடான்னு ஆத்தா வெஞ்சிச்சி.. குடுகுடுன்னு குதிச்சி ஓடிப்போயி சொக்கா தேடிப்போட்டு தாறுமாறா தலைய வாரிவண்டியேறித்தேன் அக்கா வாசலுக்குப் போயி சேந்தேன்ஆத்தா அப்பன் ஆயிகூட.. வண்டி விட்டிறங்கி எல்லாரும் போயிட்டாக..ஒசரமான வண்டியில இறங்கத் தெரியாமத்தான்இப்படியும் அப்படியும் தொங்கி நாங்கிடந்தேன்.. அயித்தான் ஓடிவந்து அணச்சி இறக்கிபுட்டுவாங்க மருமவனே.. வில்வண்டிய விட்டுவரத்தேன் மனசில்லையோ எண்டுகேலி பேசிச் சிரிச்சாக.. அதெல்லா ஒன்னுல்ல..வீராப்பா சொல்லிப்புட்டு விருட்டுனுவீட்டுக்குள் நா நுழஞ்சேன்.. உத்தரத்து சட்டத்துல தூளி கெட்டியிருக்கஆத்தா ஆயி அக்கா அக்கா மாமியான்னு அத்தினி பேரும்சுத்தி நின்னுகிட்டு சொலசொலனு பேசிச் சிரிச்சாக.. எட்டிப் பாக்கத்தான் என் ஒசரம் பத்தலையே..ஏனோ மனசுக்குள்ள கோவம் கூடிடுச்சு..கூடத்து தூணு பக்கம் நானு நகந்து போயிகெட்டியாப் புடிச்சிகிட்டு தனியா உறுமி முறைச்சிருந்தேன். திலும்பி பாத்த அக்கா‘டேய் சின்ராசு..’ன்னு கூவிகிட்டே ஓடிவந்தா.. போக்கா.. என்னை பாக்கத்தான் உனக்கு நினப்பில்ல..சும்மா கொஞ்சுதியோ.. கோவம் உம்மேலன்னுகைய உதறிவிட்டு மூஞ்ச திலுப்பிக்கிட்டேன்.. சின்ராசு.. சின்ராசு.. அக்காவுன்ன மறப்பேன்னு நினைச்சுதியோ..அலகா உனக்காக பொண்ணு பெத்து வச்சிருக்கேன்..வந்திங்க பாருடா சின்னி.. சின்னினு அக்கா மட்டும் செல்லமா கூவும் என்பேரு..அக்கா அக்குள்ல அணச்சித் தூக்கி தூளியில சாச்சு பாருன்னு சொன்னா.. தூளிக்குள்ள பகுடரு மூஞ்சியப்பிகருப்பு மையால கண் புருவம் வரைஞ்சிமாரியாத்தா பொட்டுபோல நெத்தியில கன்னத்துலகறுப்புப் பொட்டு வச்சி கட்டவிரல் தூக்கிகைபிடிச்சுச் சிரிச்சா சிவப்பா சின்ன சிறுக்கி.. என் கண்ணுல என்னவோ பட்டாம்பூச்சி பறந்திச்சி..அக்கா கழுத்த கட்டிக்கிட்டு கன்னத்தில எச்சி வச்சேன்.. ஐய்யா..அக்கா மவ பொறந்தாச்சி..

பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

நா. முத்துக்குமார் பிறந்தநாள் நினைவுக் கவிதை சிறகு முளைத்த சிறிய காலங்களில்வான் உயரப் பறந்த உன்னைஇன்னும் பாடலில்தான் தேடுகிறோம்பறவையே எங்கு இருக்கிறாய்? கணையாழியில் ‘தூர்’எழுதிசுஜாதா காதல் கொண்டுமென்பூவாய் மேல் வந்தபறவையே நீ எங்கு இருக்கிறாய்? அம்மையை எழுதி எழுதிஅப்பனுக்குப் பிள்ளையாகி‘ஆனந்த யாழை’ மீட்டியபறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘அணில் ஆடும் முன்றிலில்’மகனுக்குக் கடிதம் எழுதிவிட்டுஅத்தைகளின் உலகம் போனபறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘தெய்வங்கள் எல்லாம்தோற்றே போகும்’தான்உன் மகன் உனக்கு எழுத என்ன செய்வான்?வார்த்தைகளையாவது சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? எழுத்து பழகி எங்களைப் பழகிசத்தம் இல்லாமல் அதிகாலை முத்தம்போல் கடந்தஉன் காதல் கவிதைக்குத் துணை தேடுகிறோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘உனக்கொரு தொட்டில் கட்டிநானே தாயாய் மாறிட வேண்டும்’ என்று சொன்னாயேஉன் தாலாட்டில் நாங்கள்ஆண் தாயாக உறங்குகிறோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘வெயிலோடு உறவாடி’ பால்யத்தையோ சொன்னாய்வேறெங்கு உனக்கு உறவு?வா விளையாடுவோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘விழிகளில் ஒரு வானவில்இமைகளைத் தொட்டுப் பேசுதே’ என்றாய் நீ இல்லாமல் சிறு புல்லின்மீது விழுந்தபனித்துளியாய் இருக்கிறோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? “கனாக் காணும் காலங்கள்’ இல்லாமல்இனி காதலிக்க முடியுமா இந்தத் தலைமுறை?பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘உனக்கென இருப்பேன்’ என்று முடித்திருக்கலாம்‘உயிரையும் கொடுப்பேன்’ என்றாய்‘வார்த்தைகள் இல்லை என்றால்உன் மவுனங்கள் போதும்’ என்றபறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘சுற்றும் விழிச் சுடராய்‘மண்ணை உண்ணும் பூக்கள்’ வரைந்த உன்னைவிழுங்கிய உலகில் தேடுகிறோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘ஒரு பாதி கதவு நீயடி’ என்றுதாண்டவம் ஆடியபறவையே நீ எங்கு இருக்கிறாய்? “உன் பேரைச் சொல்லும்போதேஉள் நெஞ்சில் கொண்டாட்டம்..உன்னோடு வாழத்தானே எந்நாளும் போராட்டம்’ என்றபறவையேஇன்னும் கொஞ்சம்போராடியிருக்கலாம் அல்லவா?

வலிகள்

வலிகள்

கவிதைகள் பிரிவு மிகவும் ரசித்துத்தான்எழுதிக்கொண்டிருக்கிறேன்நம் பிரிவையும் இணைந்திருந்தஇனிப்புத் தருணம் பரிசளித்தஅதே அடிவயிற்றுச் சில்லிடல்இதிலும் நேர்கிறது இதயம் படபடக்கஉடலெங்கும் அதிவேகமாய்ஓடிய புதுக்குருதிஇப்போதும் பாய்கிறது சொற்களற்றுத் தடுமாறிகண்களால் மட்டும்பேச முடிந்தது போலவேஇப்போதும் நடக்கிறது மழைநாளின் சிறு தூறல்நாம் ஒன்றென உறுதி சொல்லிஆசிர்வதித்தது போன்றேநாம் வேறுவேறெனச் சொல்லவும்சாரலை அனுப்பியுள்ளது இயற்கை எனக்குள் இறங்கிய உன்னையும்உனக்குள் புதைந்த என்னையும் மட்டுமேகாணவில்லை என்பதைத் தவிரபிரிவுக்கும் இணைவிற்கும்பெரிதாய் ஒன்றும் வித்தியாசமில்லைதானே? கற்கள் காலம் வாழ்வை அகழ்ந்தெடுத்துசந்தோஷங்களை சலித்துப்பிரித்தெடுக்க முயல்கிறதுஒரு கூட்டம் வறண்ட எண்ணங்களைக்குழைத்தெடுக்கவெனஎப்போதாவது வரமாய் வாய்க்கிறதுஒரு காதலும் சிறு கூடலும் அவ்வப்போது கிடைக்கும்தேநீரின் சுவையைநேர்த்தியான துண்டுகளாக்கிஅடுக்கிவிட இயலுகிறதுஅவர்களால் கிளர்ந்தெழும் ஆசைகளைவெயிலில் இட்டுஇறுகச் செய்துவிடமனம் வாய்த்திருக்கிறது மொத்தத்தில் சூளையில் இட்டுஇவர்கள் சுட்டெடுப்பதுசெங்கற்களோடு சேர்த்துசொந்த ஊர் நினைவுகளையும்தான் சொற்களின் வலி என்ன சொல்லாடல்கள்எதிர்பார்க்கிறாய்என் கவிதையில் பசித்துக் கிடக்கும் வயிறுகள்தவித்து நிற்கும் அகதிகள்கொதித்து எரியும் போர்முனைஉடல்கள் ஒதுங்கும் கடற்கரைஒருமுறை கண்டு வா வார்த்தைகளற்றுப்போய்தொண்டை அடைக்கநெஞ்சில் உருளும் பாறை நசுக்கிவெளிவரும் சொற்களில்ரத்தக் கவுச்சியன்றிபன்னீரின் மணமாமுகரக் கிடைக்கும்?